தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
இதனால் தொழிற்சாலைகள், கடைகள் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
வருமானத்துக்கு வழியின்றி சிலர் தவிக்கின்றனர்.
சில நிறுவனங்களில் வேலையிழப்பு ஊதியக் குறைவு போன்ற அச்சம் காரணமாக ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
தற்போது வரை இந்தியாவில் மட்டும் ஊரடங்கு 40 நாட்களை நெருங்கி வருகிறது.
சாதாரண நாட்களாக இருந்த போது கணவன், மனைவி வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வேலைக்கு செல்வர். பின்னர் இரவு நேரத்தில் தான் வீடு திரும்புவர்.
அப்போது அசதியால் மற்ற வேலைகளை முடித்துவிட்டு உறங்கிவிடுவர்.
அதாவது சின்ன சின்ன சண்டைகள் வந்தாலும் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வருவதற்குள் அதனை மறந்துவிட்டு இரவில் மோதல் தவிர்த்து ஊடல் கூடும்.
ஆனால் தற்போது வீட்டிலே மன உளைச்சலுடன் ஆண்கள் பெண்கள் இருப்பதால் அதை வெளிப்படுத்தும் போது தம்பதியரிடையே மோதல் அதிகளவில் ஏற்படுகிறதாம்.
சின்னச்சின்ன சச்சரவுகள் கூட பூதாகரமாகி வன்முறையில் முடிவதாக நிறைய புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
பெண்களுக்கு எதிராக 300க்கும் மேற்பட்ட குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையத்துக்கு புகார்கள் வந்துள்ளதாம். இதில் குடும்ப சண்டைகள் தொடர்பான புகார்கள் மட்டும் 80.
சென்னையில் ஊரடங்கு சமயத்தில் மட்டும் 2000 குடும்ப வன்முறை புகார்கள் குவிந்துள்ளது.
முன்பெல்லாம் கணவனிடம் சண்டை வந்தால் பெற்றோர் வீட்டுக்கு சென்று சில நாட்கள் பெண்கள் அங்கே தஞ்சம் அடைய முடியும்.
ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் அங்கு செல்ல முடியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வழக்கறிஞர் இந்து கருணாகரன் கூறியதாவது…
இளைய தலைமுறையினரிடம் சகிப்புத்தன்மை குறைந்துள்ளது. மேலும் கணவன் மனைவி இடையே புரிதல் இல்லை. இதுவே இன்றைய தலைமுறை தம்பதிகளிடையே விவாகரத்து அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
இந்த லாக் டவுனை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால் நல்ல புரிதலை ஏற்படுத்திக் கொள்ளலாம். இதனால் குடும்பத்தில் பிரச்சினை வராது.” என தெரிவித்தார்.
Advocate Indhu talks about Domestic violence during lock down