பயில்வான் ரங்கநாதனை கலாய்த்து ப்ரோமோ..; ஆடம்ஸ் இயக்கிய ‘கேன்’

பயில்வான் ரங்கநாதனை கலாய்த்து ப்ரோமோ..; ஆடம்ஸ் இயக்கிய ‘கேன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பயில்வான் ரங்கநாதனை கலாய்த்து ப்ரோமோ..; ஆடம்ஸ் இயக்கிய ‘கேன்’

சன் டிவி புகழ் ஆடம்ஸ் இயக்கத்தில் கேன் (can) திரைப்பட ஃபர்ஸ்ட் லுக், புதுமையான வடிவத்தில் அசத்தும் கேன் (can) திரைப்பட ஃபர்ஸ்ட் லுக்

கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களில் வித்தியாசமான முறையில் ‘கேன்’ படத்தின் ப்ரோமோஷன் வீடியோக்களை பார்த்து வருகிறோம்.

பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதனை கலாய்த்து நடிகர் ஆடம்ஸ் வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்.

ஷோபனா கிரியேசன்ஸ் சார்பில், D. கருணாநிதி தயாரிப்பில், சன் டிவி புகழ் ஆடம்ஸ் இயக்கத்தில், பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி, இன்றைய தலைமுறையின் காதலைப் பெண்களின் பார்வையில் சொல்லும், அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கேன் (can).”

புதுமையான வடிவத்தில் வெளியாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

சன் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி மக்களின் மனதில் இடம் பிடித்த ஆடம்ஸ், திரைப்படங்களில் 4 வருடகாலம் உதவி இயக்குநர், இணை இயக்குநராக பணியாற்றிய பிறகு, முதன்முறையாக இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இன்றைய தலைமுறை இளம்பெண்களின் வாழ்க்கை, அவர்களின் பார்வையிலான காதலை மையப்படுத்தி, நகைச்சுவையுடன் கூடிய அழுத்தமான, ஜனரஞ்சக திரைப்படமாக, இப்படத்தை உருவாக்கியுள்ளார் ஆடம்ஸ்.

படத்தின் கதாபாத்திரங்களைக் கலைத்துப் போட்டு, ஒரு புதிய முகத்தை உருவாக்கிக் காட்டியிருக்கும், நவீன வடிவிலான ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. புதுமையான முறையில் உருவாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது.

இப்படத்தில் பிரணவி மனுகொண்டா, ஹேமந்த் மேனன், அக்ஷரா ராஜ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, கலையரசன், யாஷிகா ஆனந்த், தம்பி ராமையா, ரோபோ சங்கர், கோவை சரளா, கருணாகரன், மாறன், ஸ்ரீமன், VTV கணேஷ், கௌசல்யா, ரெடின் கிங்ஸ்லி, நாஞ்சில் விஜயன், கார்த்திக் கருப்பு காளை, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க, குளிர் பொங்கும் ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறையை, திரையரங்கில் சொட்டச் சொட்ட காதலுடன் ஜில்லென கொண்டாடும்படியாக இப்படம் இருக்கும்.

இப்படத்தினை ஷோபனா கிரியேசன்ஸ் சார்பில் D.கருணாநிதி பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாகத் தயாரித்துள்ளார். இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொழில் நுட்ப குழு விபரம்:

எழுத்து இயக்கம் – ஆடம்ஸ்
இசை – அஸ்வமித்ரா
ஒளிப்பதிவு – பிரகாஷ் ருத்ரா
எடிட்டர் – மதன் G
கலை இயக்குநர் – N.K.ராகுல்.B.F.A
நடன அமைப்பு – ஸ்ரீதர்
ஆடை வடிவமைப்பாளர் – சுகிர்தபாலன்
மக்கள் தொடர்பு – சதீஷ், சிவா (AIM)
ஸ்டில் போட்டோகிராபர் – லால்
தயாரிப்பு மேலாளர் – P.ஆறுமுகம்
நிர்வாக தயாரிப்பாளர் Pa.சிவா
லைன் புரடியூசர் – M.நடராஜன், லால் தேவசகாயம்.
தயாரிப்பாளர் – கருணாநிதி. D

Adams directed Can Promo video goes viral

ஹாப்பி பர்த்டே அல்லு அர்ஜுன்.; வாழ்த்த வரும் ‘புஷ்பா: தி ரூல்’ பட டீசர்

ஹாப்பி பர்த்டே அல்லு அர்ஜுன்.; வாழ்த்த வரும் ‘புஷ்பா: தி ரூல்’ பட டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹாப்பி பர்த்டே அல்லு அர்ஜுன்.; வாழ்த்த வரும் ‘புஷ்பா: தி ரூல்’ பட டீசர்

புஷ்பா: தி ரூல் படத்தின் பிரமாண்ட டீசர் ஏப்ரல் 8ஆம் தேதி,

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா: தி ரூல்’ திரைப்படம் ஆகஸ்ட் 15, 2024 அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரத் தயாராகிறது.

இயக்குநர் சுகுமார், மைத்ரி மூவி மேக்கர்ஸ் உடன் இணைந்து உருவாக்கி இருக்கும் இந்த ஆக்‌ஷன் பேக்ட் பான்-இந்தியா படம் ரசிகர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தைக் கொடுக்கும் என உறுதியளிக்கிறது.

நடிகர் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளான ஏப்ரல் 8 அன்று இப்படத்தின் அசாதாரணமான, அட்டகாசமான மற்றும் பவர்-பேக்ட் டீசர் வெளியாகும் என்று படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த பான்-இந்திய படத்தின் சீக்வல் மூலம் வெள்ளித்திரையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த உள்ளார் அல்லு அர்ஜுன். தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாது, இந்திய சினிமாவிலும் இந்த ‘புஷ்பா: தி ரூல்’ படம் முக்கியமான ஒன்று.

நடிகர் ஃபஹத் ஃபாசில் பழிவாங்கும் வஞ்சம் கொண்ட கதபாத்திரம் மூலம் இந்த சீக்வலிலும் அல்லு அர்ஜூனுடன் இணைகிறார்.

‘புஷ்பா: தி ரூல்’ படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் மற்றும் ஒளிப்பதிவாளர் மிர்ஸ்லோ குபா ப்ரோஸெக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

எஸ் ராம கிருஷ்ணா மற்றும் என் மோனிகாவின் தயாரிப்பு வடிவமைப்பில் புஷ்பா கம்பீரத்துடன் ரசிகர்களுக்கு அற்புதமான காட்சி அனுபவத்தைக் கொடுக்கும்.

Pushpa The Rule teaser will be released on Allu Arjun Birthday

NEVER ESCAPE HIGH LIGHTS : இங்கிலீஷ் சாங்.; மொட்டை அடித்த ராபர்ட் மாஸ்டர்

NEVER ESCAPE HIGH LIGHTS : இங்கிலீஷ் சாங்.; மொட்டை அடித்த ராபர்ட் மாஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

NEVER ESCAPE HIGH LIGHTS : இங்கிலீஷ் சாங்.; மொட்டை அடித்த ராபர்ட் மாஸ்டர்

நெவர் எஸ்கேப் பட இசை வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு

Royal B Productions சார்பில் நான்சி ஃப்ளோரா தயாரிப்பில், இயக்குநர் டிஶ்ரீ அரவிந்த் தேவ் ராஜ் இயக்கத்தில், புதுமுக நட்சத்திரங்கள் நடிப்பில், அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக உருவாகி வரும் திரைப்படம் “நெவர் எஸ்கேப்”.

விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் ஆல்பர்ட் பேசியதாவது…

சினிமாவிற்கு இப்போது தான் அறிமுகமாகியுள்ளேன். இந்தப்படம் ஆரம்பித்த போது மொத்த டீமுக்கும் 25 வயது கூட நிரம்பவில்லை, ஆனால் 50 வயது ஆனவர்களுக்கு இருக்கும் அனுபவம் அவர்களிடம் இருக்கிறது.

இவர்கள் சொன்ன கதையே படு வித்தியாசமாக இருந்தது. இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் எல்லோரும் நண்பர்கள். படத்தை வித்தியாசமாக தந்துள்ளார்கள். ராபர்ட் மாஸ்டர் அருமையான நடிப்பைத் தந்துள்ளார். இப்படம் ஹாரர், சைக்கோ, மிஸ்டரி மூன்றும் கலந்து வித்தியாசமான அனுபவமாக இருக்கும். பத்திரிக்கையாளர்கள் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும்.

இப்படத்திற்காக புதுமையான ஒரு விசயத்தை செய்துள்ளோம். படத்தை திரையரங்கில் பார்ப்பவர்கள், எங்களின் 10 கேள்விகளுக்குப் பதிலளித்தால், பதிலளித்தவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து, வெற்றி பெறுபவருக்கு 1 லட்சம் பரிசு தரவுள்ளோம். என்பதை தெரிவித்து கொள்கிறோம். இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள்.

சிறுபட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அன்புச்செழியன் பேசியதாவது…
படத்தின் தலைப்பிலேயே கவர்ந்து விட்டார்கள். நெவர் எஸ்கேப். தவறு செய்தால் அவர்கள் நெவர் எஸ்கேப் அது தான் கதை என்றார் தயாரிப்பாளர். சுவாரஸ்யமான கதையை தந்துள்ளார்கள். தயாரிப்பாளர் சொன்ன 1 லட்சம் பரிசு, நல்ல ஐடியா! அதை நாங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் செய்வதாக இருந்தோம், ஆனால் இவர் முந்திக்கொண்டார். இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் குமார் பேசியதாவது…

யூடுயூப் வீடியோவிலிருந்து நிறைய பேர் சினிமாவிற்கு வந்துள்ளார்கள் ஆனால் ஒரு டெக்னீஷீயன் என்ற வகையில் நான் தான் முதல் ஆள். மிக மகிழ்ச்சியாக உள்ளது. இனி. வீட்டில் என்னை நம்புவார்கள். யூடுயூபிலிருந்து வரும் போது நிறைய தயக்கம் இருந்தது. ஏனென்றால் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, நிறைய அனுபவம் தேவை. நாங்கள் அனைவரும் நண்பர்கள். அதனால் தயக்கம் இல்லாமல் வேலை செய்ய முடிந்தது. அனைவரும் ஒன்றாக இணைந்து படத்திற்காக உழைத்திருக்கிறோம். ராபர்ட் மாஸ்டரை வைத்து ஒரு பாடல் எடுத்தோம் நல்ல அனுபவம். படம் உங்களுக்குப் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் சரண் குமார் பேசியதாவது..

எனக்கு இப்படம் தந்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படம் என்னுடைய முதல் ஹாரர் படம், ஆதரவு தாருங்கள் நன்றி.

நாயகன் பிரித்வி பேசியதாவது…

நாஞ்சில் நளினி அவர்களின் பேரன் நான். என்னுடைய முதல் படம் கம்பெனி. அந்தப்படத்தில் நடித்ததைப் பார்த்து, இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த ஆல்பர்ட் சாருக்கும், இயக்குநருக்கும் நன்றி. மிக மகிழ்ச்சியோடு வேலைபார்த்த படம் மிக நன்றாக வந்துள்ளது. ராபர்ட் மாஸ்டர் நிறைய சொல்லித்தந்தார்.

படத்தின் இயக்குநர் திறமையானவர், மிக சூப்பரான திரைக்கதை, கண்டிப்பாக உங்களுக்கு படம் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் அரவிந்த் ராஜ் பேசியதாவது..
இது தான் என் முதல் மேடை. தயாரிப்பாளருக்கு என் முதல் நன்றி. இந்தப்படத்திற்காக நிறைய தயாரிப்பாளர்களை அணுகினோம். இறுதியில் ஆல்பர்ட் சார் கதை கேட்டவுடனே ஒத்துக்கொண்டார்.

இப்படம் ஒரு வித்தியாசமான ஹாரர் திரில்லர், ஹாரரில் காமெடி, மிஸ்டரி என நிறைய கதைகள் வருகிறது ஆனால் இந்தப்படம் வித்தியாசமாக இருக்கும். கதையில் நிறைய திருப்பங்கள் இருக்கிறது மிக வித்தியாசமான அனுபவமாக இருக்கும். இப்படத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் எல்லோரும் என் நண்பர்கள், படத்தில் ஒன்றாக இணைந்து உழைத்துள்ளோம். ராபர்ட் மாஸ்டர் மிகப்பெரிய ஒத்துழைப்பு தந்துள்ளார். மிக நல்ல வேடம் செய்துள்ளார். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி.

நடிகர் உவைஸ் கான் பேசியதாவது…

இது எனக்கு முதல் படம், வாய்ப்பு தந்த ஆல்பர்ட் சார், இயக்குநர் அரவிந்திற்கு நன்றி. ராபர்ட் மாஸ்டர் உடன் சேர்ந்து நடித்தது மகிழ்ச்சி. மிக சந்தோசமான அனுபவமாக இருந்தது. இப்படத்திற்காக எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளோம். எல்லோரும் புதுமுகங்கள், உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகை ஹர்ஷினி பேசியதாவது…

என்னோட டீமுக்கு முதல் நன்றி. இப்படத்தை எடுத்துக் கொண்டு வர தயாரிபபாளர், இயக்குநர், ராபர்ட் மாஸ்டர் என அனைவரும் உழைத்துள்ளனர். ஒன்றரை வருடமாக பெரிய உழைப்பைத் தந்துள்ளனர். இளைஞர்கள் மிக திறமையானவர்கள், எனக்கு முதல் படம் தான் எனக்கு எல்லாம் சொல்லித்தந்து நன்றாக பார்த்துக்கொண்டார்கள். ஒரு நல்ல படம். ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர், நடன இயக்குநர் ராபர்ட் பேசியதாவது…

இப்படத்தின் கதை சொன்ன போது, யார் சார் டைரக்டர் என்று கேட்டேன், அரவிந்தைப் பார்த்தால் இயக்குநர் என்றே நம்பமுடியவில்லை. மூச்சு விடாமல் கதை சொன்னார். கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மொட்டை அடிக்க வேண்டும் என்றார்கள் தாடி எடுக்க வேண்டும் என்றார்கள்.. நான் வேறு ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்தேன், அவர்களிடம் பர்மிசன் வாங்கி இப்படத்தில் நடித்தேன்.

அதற்குக் காரணம் இவர்கள் மீதுள்ள அன்பு தான். நல்ல டீம் கடுமையாக உழைத்துள்ளனர். இப்படத்தில் என்னை வித்தியாசமாக பார்ப்பீர்கள், படம் நன்றாக வந்துள்ளது, படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

பல ஹாலிவுட் படங்கள் தரும், இதயம் அதிர வைக்கும் அதிரடியான ஹாரர் கலந்த திரில்லர் அனுபவத்தைத் தரும் வகையில் நெவர் எஸ்கேப் படம் உருவாகியுள்ளது.

ஒரு சிக்கலிலிருந்து தப்பிக்க நினைத்து வேறொரு ஒரு இடத்தில் சிக்கிக்கொள்ளும் 7 நண்பர்கள், அங்கு அவர்களுக்கு ஏற்படும் அமானுஷ்ய சம்பவங்கள் தான் படத்தின் மையம்.

பல பிரபல யூடுயூப் வீடியோ சீரிஸ்களில் பணியாற்றியுள்ள இயக்குநர் டிஶ்ரீ அரவிந்த் தேவ் ராஜ், ரசிகனைச் சிந்திக்க வைக்கும் வகையில், அடுத்தடுத்த ஆச்சரியங்களுடனும், எதிர்பாராத திருப்பங்களுடனும் புதுமையான திரைக்கதையில், ஒரு முழுமையான ஹாரர் படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் .

இப்படத்தில் ஆதி பிருத்வி, ஹர்ஷினி முதன்மைப்பாத்திரங்களில் நடிக்க, நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் முதன்முறையாக எதிர்மறை பாத்திரத்தில் மிரட்டியுள்ளார்.

இவர்களுடன் கவி J சுந்தரம், உவைஸ் கான், ராஜி, அகிலா சுந்தர், ஜெபின் ஜான், பிரணேஷ்வர், சஷ்டி பிரணேஷ் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக சென்னை வேலூர் பகுதியை ஒட்டிய ஆரணியில் படமாக்கப்பட்டுள்ளது. மிக வித்தியாசமான வகையில் இப்படத்தின் மூன்று பாடல்களில் ஒரு பாடல், முழுக்க ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Royal B Productions சார்பில் நான்சி ஃப்ளோரா பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். அம்முச்சி முதலான பல நக்கலைட்ஸ் சீரிஸ்களுக்கு ஒளிப்பதிவு செய்த சந்தோஷ் குமார் SJ இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

*தொழில் நுட்ப குழு விபரம்*

எழுத்து இயக்கம் – டிஶ்ரீ அரவிந்த் தேவ் ராஜ்
ஒளிப்பதிவு – சந்தோஷ் குமார் SJ
எடிட்டர் – குரு பிரதீப்
இசை – சரண் குமார்
கலை இயக்குனர் – முத்து
மக்கள் தொடர்பு – பரணி அழகிரி, திரு முருகன்.

Robert Master in new avatar Never escape movie

அனைவருக்கும் பிடிச்சவர் விஜய் ஆண்டனி.. டாப் சாய்ஸ் அவர்தான்.. – ‘ரோமியோ’ டைரக்டர் விநாயக்

அனைவருக்கும் பிடிச்சவர் விஜய் ஆண்டனி.. டாப் சாய்ஸ் அவர்தான்.. – ‘ரோமியோ’ டைரக்டர் விநாயக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அனைவருக்கும் பிடிச்சவர் விஜய் ஆண்டனி.. டாப் சாய்ஸ் அவர்தான்.. – ‘ரோமியோ’ டைரக்டர் விநாயக்

விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள மகிழ்ச்சியான ரொமாண்டிக்- காமெடி படம் ‘ரோமியோ’.

இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகத் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன். இந்தப் படம் ஏப்ரல் 11, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி மற்றும் ஒட்டுமொத்த குழுவினருடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் பகிர்ந்து கொண்டதாவது..

“ஒவ்வொரு இயக்குநருக்கும் விஜய் ஆண்டனி உடடன் பணிபுரிய வேண்டும் என்று கனவு இருக்கும். ஏனென்றால் அவர் அனைத்து வயதினருக்கும் பிடித்த ஹீரோ. தனித்துவமான ஜானர் மற்றும் புதிய கதைக்களங்களை முயற்சி செய்ய யாராவது விரும்பினால் அவர்தான் டாப் சாய்ஸாக இருப்பார்.

நான் ‘ரோமியோ’ படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதி முடித்ததும் ​​விஜய் ஆண்டனி அதில் நடிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டேன். ஆனால், கதை அவருக்கு பிடிக்குமா என்ற சந்தேகம் இருந்தது.

ஏனெனில், ரொமாண்டிக் – காமெடி ஜானரில் இதுவரை அவர் நடித்ததில்லை. ஆனால், அவர் கதையை கேட்டு, ரசித்து உடனடியாக படத்தைத் தயாரித்து நடிக்க ஒப்புக் கொண்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

சீனியர் நடிகர்களுடன் பணியாற்றுவது உண்மையில் பெரிய சவாலாக இருந்தது. நான் புதுமுகம் என்பதால் தலைவாசல் விஜய், யோகிபாபு, வி.டி.வி.கணேஷ் போன்ற மூத்த நடிகர்கள் எனது ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்களா என்ற சந்தேகம் இருந்தது.

ஆனாலும், படப்பிடிப்பில் அவர்கள் ஆதரவாக இருந்தனர். அவர்கள் தங்களுடைய சிறப்பான நடிப்பால் காட்சிகளை உண்மையாகவே மெருகேற்றினார்கள். மிருணாளினி ரவி இந்த பாத்திரத்திற்கு சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளார்.

‘ரோமியோ’ படம் நகைச்சுவை, ரொமான்ஸ், எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எமோஷன் கலந்த ஒரு விறுவிறுப்பான பொழுதுபோக்கு படமாக இருக்கும். ‘ரோமியோ’ படத்தைப் பார்த்துவிட்டு பார்வையாளர்கள் சிரிப்புடனும் முழு திருப்தியுடனும் தியேட்டர்களை விட்டு வெளியேறுவார்கள்” என்றார்.

‘ரோமியோ’ படத்தை விநாயக் வைத்தியநாதன் எழுதி இயக்கி இருக்க, விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார்.

முதன்மை பாத்திரங்களில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி நடித்திருக்க இவர்களுடன் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா மற்றும் ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு பரத் தனசேகர் இசையமைத்திருக்க, ஃபரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Vijay Antony is favorite for all says Romeo director Vinayak

சம்மர் வந்தாச்சு.. நம்ம குட்டி ஸ்டார் Sofa Boy வந்தாச்சு.. : ஸ்கூல் லீவு விட்டாச்சு..

சம்மர் வந்தாச்சு.. நம்ம குட்டி ஸ்டார் Sofa Boy வந்தாச்சு.. : ஸ்கூல் லீவு விட்டாச்சு..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சம்மர் வந்தாச்சு.. நம்ம குட்டி ஸ்டார் Sofa Boy வந்தாச்சு.. : ஸ்கூல் லீவு விட்டாச்சு..

Sofa Boy கலக்கும் “ஸ்கூல் லீவ் விட்டாச்சு” ஆல்பம் பாடல்,

Bereadymusic தயாரிப்பில், சமீபத்திய சென்ஷேசன், குட்டி ஸ்டார் Sofa Boy நடிப்பில், இந்த விடுமுறைக் காலத்தைக் கொண்டாடும் வகையில், குழந்தைகளுக்காக பிரத்யேகமாக, டோங்லி ஜம்போ இயக்கத்தில், இசையமைப்பாளர் சுதர்ஷன் வரிகள் மற்றும் இசையமைப்பில், ஸ்கூல் லீவ் விட்டாச்சு ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ஒற்றை வீடியோ மூலம் இணையம் முழுக்க ஃபேமஸானவர் குட்டி ஸ்டார் Sofa Boy.

கண் இமைக்கும் ஸ்பீடில், கடகடவென பேசி, மயக்கும் குரலில் இவர் அசத்திய Sofa விற்பனை வீடியோ பெரும் வைரலாக, ஒரே நாளில் மிகப்பெரியளவில் பிரபலமானார். பொது மக்கள் மட்டுமல்லாது திரை பிரபலங்களும் இவரது திறமையைப் பாராட்டி, பல சினிமா வாய்ப்புகளை தந்தனர்.

தற்போது அதன் அடுத்த கட்டமாக சுயாதீனா இசை ஆல்பங்கள் வெளியீட்டில் தொடர்ச்சியாக அசத்தி வரும் Bereadymusic நிறுவனம், Sofa Boy நடிப்பில் குழந்தைகளுக்கான பிரத்தியேக ஆல்பம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.

தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள இந்த ஆல்பம் பாடல் ரசிகர்களின் வரவேற்பில், சார்ட்பஸ்டரில் இடம்பிடித்து வைரலாகி வருகிறது.

Bereadymusic தயாரித்துள்ள இந்த வீடியோ ஆல்பம் பாடலை எழுதி இசையமைத்துள்ளார், இசையமைப்பாளர் சுதர்ஷன். பல வெற்றிபெற்ற ஆல்பம் பாடல்களை உருவாக்கிய டோங்லி ஜம்போ இப்பாடலை வடிவமைத்து இயக்கியுள்ளார். பல டிரெண்டிங் ஆல்பம் பாடல்களுக்கு நடன இயக்கம் செய்துள்ள நடன இயக்குநர் ரிச்சி ரிச்சர்ட்ஸன் இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

முதல்முறையாகத் தமிழில், குழந்தைகள் நடிப்பில், குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருப்பது இப்பாடலின் சிறப்பு என்றாலும், இப்பாடல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படி அமைந்துள்ளது.

இப்பாடலை இங்கே ரசிக்கலாம்
லிங்க் : https://bit.ly/4adhGjH

School Leave Vittachu album makes record

சினிமாவின் 31 கிராஃப்ட்டுகளை கற்று ஒரே ஆளாக லாவண்யா இயக்கி நடித்த ‘பேய் கொட்டு’

சினிமாவின் 31 கிராஃப்ட்டுகளை கற்று ஒரே ஆளாக லாவண்யா இயக்கி நடித்த ‘பேய் கொட்டு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவின் 31 கிராஃப்ட்டுகளை கற்று ஒரே ஆளாக லாவண்யா இயக்கி நடித்த ‘பேய் கொட்டு’

தமிழ் திரையுலகில் முதன்முறையாக 31 கிராஃப்ட்களையும் கற்று ‘பேய் கொட்டு’ (PEI KOTTU) படத்தை உருவாக்கி இருக்கும் இயக்குனர் S.லாவண்யா (Director S. Lavanya)

தமிழ் திரையுலகில் திரைப்படத்தை உருவாக்குவதற்கு 24 கிராஃப்ட்டுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது மரபு. இதுவரை தமிழ் திரையுலகில் ‘அஷ்டவதானி’, ‘தசாவதானி’ போன்ற சாதனையாளர்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.

முதன்முறையாக திரையுலகின் 24 கிராஃப்ட்டுகளையும் சுயமாக கற்றுக்கொண்டு, ‘பேய் கொட்டு'(PEI KOTTU)எனும் ஹாரர் திரில்லர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் கின்னஸ் சாதனையாளரான லாவண்யா.

இதனுடன் சப்டைட்டில்ஸ், சென்ஸார் ஸ்கிரிப்ட், 5.1 மிக்ஸ், சவுண்ட் இன்ஜினியரிங் உள்ளிட்ட துணை பணிகளையும் மேற்கொண்டு இப்படத்தினை ஒற்றை ஆளாக தோளில் சுமந்து உருவாக்கி இருக்கிறேன். மொத்தம் 31 துறைகளில் இப்படத்திற்காக அயராது உழைத்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் எஸ். லாவண்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேய் கொட்டு’ எனும் திரைப்படத்தில் லாவண்யா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.

இவருடன் தீபா சங்கர், ஸ்ரீஜா ரவி, சாந்தி ஆனந்தராஜ், பட்டம்மா, ஆடம், சசிகுமார், இலும்பு செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். லாவண்யா- பி. வசந்த் -ஜான் விக்டர் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். லாவண்யா இசையமைத்திருக்கிறார்.

கலை இயக்கம் மற்றும் படத்தொகுப்பு பணிகளையும் இவரே மேற்கொண்டிருக்கிறார். ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஓம் சாய் புரொடக்ஷன்ஸ் (OM SAI PRODUCTIONS) எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். லாவண்யா(S. Lavanya) தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி ஒன்றரை மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்த திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்..

, ” சுயாதீன திரைப்பட படைப்பாளியான நான் திரைத்துறையில் இயங்கும் அனைத்து கிராப்டுகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பினேன்.

இதைத்தொடர்ந்து தயாரிப்பு, இயக்கம், கதை, திரைக்கதை, வசனம், இசை, டப்பிங், எடிட்டிங், சிங்கிங், ஆக்டிங், ஃபைட், டான்ஸ், கேமரா, லிரிக்ஸ், கலர் கிரேடிங், இ எஃப் எக்ஸ், வி எஃப் எக்ஸ், எஸ் எஃப் எக்ஸ், காஸ்டிங், ஆர்ட், மேக்கப், லொகேஷன்… ஆகிய 31 கிராப்ட்டுகளையும் சுயமாக கற்று, ‘பேய் கொட்டு’ எனும் இந்த ஹாரர் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறேன்.

‘பேய் கொட்டு’ என்பது தவறுகள் செய்தால் தலையில் கொட்டுவார்கள் அல்லவா… அதே போல் நாம் ஏதேனும் தவறாக நினைத்தால், பேய் நம் தலையில் கொட்டும். இது வித்தியாசமான கதைக்களமாகவும், சுவாரசியமான திரைக்கதையாகவும் உருவாகி இருக்கிறது. ” என்றார்.

இதனிடையே சுயாதீன திரைப்பட கலைஞர் ஒருவர் திரையுலகின் 31 கிராஃப்ட்டுகளையும் கற்றுக்கொண்டு, ஒற்றை ஆளாக முழு நீள திரைப்படத்தை உருவாக்கி இருப்பது தமிழ் திரை உலகில் முதன்முறை என்பதும், இத்தகைய முயற்சி திரையுலகினரையும், ரசிகர்களையும், பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது என்பதும், ‘பேய் கொட்டு’ எனும் திரைப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு லாவண்யா எனும் பெண்மணியின் சாதனை முயற்சியாக பார்ப்பதால் இதற்கான வெற்றி உறுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் பத்துக்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1.BOOK OF WORLD RECORDS USA (America)

2.WORLD WIDE BOOK OF RECORDS, (UK)

3.WORLD ACHIEVERS BOOK (UK)

4.INFLUENCER BOOK OF WORLD RECORDS(UK)

5.INDIA’SWORLDRECORDS(INDIA)

6.UNICORN WORLD RECORDS (UK)

7.KALAM’S WORLD RECORD

8.SIGARAM AWARDS 2023 from Director k.Bakyaraj sir

9.LONDON BOOK OF WORLD RECORDS for covering31 departmens
(3 Awards)(LONDON)

10.LONDON BOOK OF WORLD RECORDS for BEST DIRECTOR & ACTOR

11.LONDON BOOK OF WORLD RECORDS for BEST MUSIC DIRECTOR & PLAYBACK SINGER

Lavanya learned 31 crafts of cinema and made Pei Kottu

More Articles
Follows