தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் ரஜினி கமல்.. மலையாள சினிமாவில் மோகன்லால் மம்மூட்டி.. தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி வெங்கடேஷ்.. உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மீனா.
மேலும் அஜித் விஜய் பிரசாந்த் ஆகியோருடனும் நடித்துள்ளார் மீனா.
‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் ரஜினியுடன் குழந்தையாக நடித்தவர் மீனா.
பின்னர் எஜமான் முத்து வீரா படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர். அண்மையில் வெளியான அண்ணாத்த படத்திலும் ரஜினியுடன் நடித்திருந்தார் மீனா.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்த மீனா 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.
அட்லி இயக்கிய ‘தெறி’ படத்தில் விஜய்யின் மகளாக நடித்தவர் நைனிகா.
மேலும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்தில் அரவிந்தசாமியின் மகளாகவும் நடித்தார் நைனிகா.
மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவே அவருக்கு சென்னை ஆழ்வார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
மேலும் அவருக்கு நுரையீரல் பாதிப்பும் இருந்துள்ளதால் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த ஜூன் 28 ஆம் தேதி இரவு இயற்கை எய்தினார்.
கணவர் மறைவுக்கு பின்னர் பல தவறான தகவல்கள் கிளம்பியது.
இந்த நிலையில் கணவர் இறப்புக்குப்பின் நடிகை மீனா முதல் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்….
“என் காதல் கணவர் வித்யாசாகர் இறப்பினால் நான் மிகவும் கவலையாக உள்ளேன்.
இந்த கடினமான சூழ்நிலையில் அனைத்து ஊடகங்களும் எண்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும். தயவு செய்து தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்த வேண்டும்.
மேலும் இந்த கடினமான சூழ்நிலையில் எங்கள் குடும்பத்திற்கு பக்க பலமாக நின்ற அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர், ராதாகிருஷ்ணன் IAS ஆகியோருக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
Actress Meenas first statement after her husband death