கணவர் மரணத்திற்கு பின் நடிகை மீனா பதிவிட்ட அறிக்கை

கணவர் மரணத்திற்கு பின் நடிகை மீனா பதிவிட்ட அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் ரஜினி கமல்.. மலையாள சினிமாவில் மோகன்லால் மம்மூட்டி.. தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி வெங்கடேஷ்.. உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மீனா.

மேலும் அஜித் விஜய் பிரசாந்த் ஆகியோருடனும் நடித்துள்ளார் மீனா.

‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் ரஜினியுடன் குழந்தையாக நடித்தவர் மீனா.

பின்னர் எஜமான் முத்து வீரா படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர். அண்மையில் வெளியான அண்ணாத்த படத்திலும் ரஜினியுடன் நடித்திருந்தார் மீனா.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்த மீனா 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

அட்லி இயக்கிய ‘தெறி’ படத்தில் விஜய்யின் மகளாக நடித்தவர் நைனிகா.

மேலும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்தில் அரவிந்தசாமியின் மகளாகவும் நடித்தார் நைனிகா.

மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவே அவருக்கு சென்னை ஆழ்வார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

மேலும் அவருக்கு நுரையீரல் பாதிப்பும் இருந்துள்ளதால் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த ஜூன் 28 ஆம் தேதி இரவு இயற்கை எய்தினார்.

கணவர் மறைவுக்கு பின்னர் பல தவறான தகவல்கள் கிளம்பியது.

இந்த நிலையில் கணவர் இறப்புக்குப்பின் நடிகை மீனா முதல் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்….

“என் காதல் கணவர் வித்யாசாகர் இறப்பினால் நான் மிகவும் கவலையாக உள்ளேன்.

இந்த கடினமான சூழ்நிலையில் அனைத்து ஊடகங்களும் எண்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும். தயவு செய்து தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்த வேண்டும்.

மேலும் இந்த கடினமான சூழ்நிலையில் எங்கள் குடும்பத்திற்கு பக்க பலமாக நின்ற அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர், ராதாகிருஷ்ணன் IAS ஆகியோருக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

Actress Meenas first statement after her husband death

BREAKING : நடிகர் விஷால் மீது 100 ரவுடிகள் தாக்குதல்.; ‘லத்தி’ பட சூட்டிங் ரத்து

BREAKING : நடிகர் விஷால் மீது 100 ரவுடிகள் தாக்குதல்.; ‘லத்தி’ பட சூட்டிங் ரத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் நடிப்பில் அவரது நண்பர்களும் நடிகர்களுமான நடிகர் ரமணா, நந்தா இணைந்து தயாரித்து வரும் படம் ‘லத்தி’.

ராணா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது.

இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் இரவு பகலாக நடந்து வருகிறது.

ஏற்கனவே, இப்படத்தில் இடம் பெறும் இறுதிக்கட்ட 20- நிமிட காட்சிக்காக ஹைதராபாத்தில் 30- நாட்கள்,

ஸ்டண்ட் காட்சி பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் அமைப்பில், புது இயக்குநர் வினோத்குமார் டைரக்‌ஷனில் பிரமாண்டமாக படமாக்கப்பட்டது.

பாழடைந்த பில்டிங்கில் படமாக்கப்பட்டபோது நடிகர் விஷாலுக்கு கையில் விபத்து ஏற்பட்டு, சில நாட்கள் படப்பிடிப்பு ரத்தானது.

பிறகு கேரளாவுக்கு சென்று சிகிச்சை எடுத்து கொண்டு மீண்டும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து முடித்தார்.

படத்தில் மீண்டும் ஒரு ஸ்டண்ட் காட்சி சென்னையில் இப்பொழுது இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்ற நிலையில், இரவு பகலாக ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் படமாக்கி வருகிறார்.

கைதி ஒருவரை ஜீப்பில் ஏற்றி கொண்டு செல்லும் போலீஸ் கான்ஸ்டபிள் விஷால் திடீரென அதிர்ச்சியாகிறார். 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் கத்தி, கம்புகளுடன் ஜீப்பை நிறுத்தி தாக்க ஆரம்பிக்க, தைரியமாக கீழே இறங்கி அவர்களை அடித்து தாக்கி கொண்டு கைதியை பிடித்து செல்கிறார்.

இந்த காட்சியில், 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் விஷாலை சுற்றிக் கொண்டு கை, கால், உடம்பில் தாக்க, எதிர்பாராத விதமாக காலில் நிஜமாகவே அடி விழ, துடிதுடித்து கீழே விழுந்தார் விஷால்.

எழும்பி நின்று நிற்க முடியாமல், கீழேயே இருந்து விடுகிறார். உடனே அவருக்கு ‘பர்ஸ்ட் எயிட்’ சிகிச்சை அளிக்கப்பட்டது. உடனே மாலை நேர படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

அவரை மருத்துவரிடம் கூட்டி சென்று சிகிச்சை அளித்தார்கள். நல்ல வேளை எலும்பு முறிவு எதுவும் இல்லை. பிசியோ செய்தால் மேலும் என்று டாக்டர் சொல்ல, தீவிரமாக பிசியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாளை மீண்டும் பரிசோதிக்கப்படு வலி இல்லையென்றால் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் விஷால்.

Actor @VishalKOfficial got INJURED Again in the Sets of #Laththi .

The Night Shoot was cancelled as #Vishal got a leg injury during shoot of final fight sequence happening at chennai.

The shoot will resume once the actor recovers.

@RanaProduction0 @actorramanaa
@nandaa_actor

Actor Vishal got INJURED Again in the Sets of Laththi .

சாய்பல்லவியின் ‘கார்கி’ பட ரிலீஸ் தேதியை அறிவித்தது 2D & SFF நிறுவனங்கள்

சாய்பல்லவியின் ‘கார்கி’ பட ரிலீஸ் தேதியை அறிவித்தது 2D & SFF நிறுவனங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் சாய்பல்லவி. நடிப்பு, நடனம், என ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவி.

தமிழில் தனுஷ் உடன் ‘மாரி 2’ & சூர்யாவுடன் ‘என் ஜி கே’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார் சாய்பல்லவி.

கோவிந்த் வசந்தா இசையமைப்பில் சாய்பல்லவி நடிப்பில் ’கார்கி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார்.

சாய் பல்லவியின் பிறந்தநாளை (மே 9) முன்னிட்டு படக்குழுவினர் தலைப்பு போஸ்டரை வெளியிட்டு இருந்தனர்.

இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது.

பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து கார்கி படத்தை சூர்யா, ஜோதிகா அவர்களின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் வழங்க இருப்பதாக அறிவித்து இருந்தனர்

இது குறித்து படக்குழுவினர் வெளியிட்ட அறிக்கையில்,…

“வாழ்க்கையின் அதிசய நிகழ்வுகள் பல நேரங்களில் நாம் எதிர்பாராத போதே நடந்து விடுகின்றது. அப்படி எங்களுக்கு நடந்த அதிசயம் தான் சூர்யா, ஜோதிகா எங்கள் படத்தில் இணைந்து இருப்பது. சூர்யாவும், ஜோதிகாவும் கார்கியை பார்வையாளர்களுக்கு கொண்டு செல்வதை விட எங்களுக்கு பெருமகிழ்ச்சி ஏதும் இல்லை.

இவை அனைத்திற்கும் உறுதுணையாக நின்று செயல்படுத்திய எனது விநியோகஸ்தர் சக்திவேலன் அவர்களுக்கும், ராஜசேகர பாண்டியன் அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி’ என்று மகிழ்ச்சியை சில தினங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தனர் என்ற செய்தியை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் ‘கார்கி’ படத்தை தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் ஜூலை 15ஆம் தேதி தியேட்டர்களில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்த படத்தின் வெளியிட்டு உரிமையை சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனம் சார்பாக சக்திவேலன் பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே நிறுவனம் நேற்று வெளியான அருள்நிதி நடித்த D- BLOCK படத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Suriya Jothika’s 2D to launch Sai Pallavis GARGI on 15th July 2022

சிகிச்சையை முடித்து விட்டார் டி ஆர்.; மகன்கள் பேரனுடன் போட்டோ பதிவிட்டு உற்சாகம்

சிகிச்சையை முடித்து விட்டார் டி ஆர்.; மகன்கள் பேரனுடன் போட்டோ பதிவிட்டு உற்சாகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரையுலகில் சகலகலா வல்லவர் என்று அழைக்கப்படுபவர் டி ராஜேந்தர்.

நடிகர் இயக்குனர் பாடல் ஆசிரியர் பாடகர் இசையமைப்பாளர் தயாரிப்பாளர் விடியோகஸ்தர் என பன்முகத் திறமை கொண்டவர் டி ஆர் என்பதால் அவருக்கு சகலகலா வல்லவர் என்று செல்லப் பெயர் உண்டு

கடந்த மே மாதம் 19 ஆம் தேதி டி.ராஜேந்தருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதன்பின்னர் உயர் சிகிச்சைக்காக கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி அமெரிக்க புறப்பட்டு சென்றார். இவருக்கு முன்பே டிஆர் மகனும் நடிகருமான சிலம்பரசன் மருத்துவ ஏற்பாடுகளை கவனிக்க அமெரிக்கா புறப்பட்டு சென்றார்

தற்போது இரண்டு வார சிகிச்சைக்கு பின்னர் அமெரிக்காவில் ஒரு விடுதியில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார் டி ராஜேந்தர்

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் டி. ராஜேந்தர் சிகிச்சை முடிந்து தங்கும் விடுதியில் ஓய்வெடுத்து வருகிறார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை டி ஆர் குடும்பத்தினர் இணையதளங்களில் பதிவிட்டனர் அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சிலம்பரசன், குறளரசன், இலக்கியாவின் மகன் சேஷன் ஆகியோர் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

எனவே சிகிச்சைகளை முழுமையாக முடித்துக் கொண்டு பூரண நலத்துடன் டி.ராஜேந்தர் விரைவில் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கலாம்.

T Rajendar

Director Actor T Rajendar health updates

மாஸ் நட்சத்திரங்களின் நடிப்பில் உருவான ‘பொன்னியின் செல்வன்’ பட சூப்பர் அப்டேட்ஸ்

மாஸ் நட்சத்திரங்களின் நடிப்பில் உருவான ‘பொன்னியின் செல்வன்’ பட சூப்பர் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பகுதிகளாக திரைக்கு வர தயாராகி வருகிறது.

PS-1 செப்டம்பர் 30, 2022 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத் குமார், விக்ரம் பிரபு, சோபிதா துளிபாலா, ஜெயராம், பிரபு, பார்த்திபன், பிரகாஷ் ராஜ் என பல நட்சத்திர நடிகர்களைக் கொண்ட இந்தப் படம் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ தமிழ் நாவலை அடிப்படையாகக் கொண்டது.

1950 களில் தொடராக வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது.

அன்றிலிருந்து இன்று வரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

10 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட ஒரு சாகச பயணம், பொன்னியின் செல்வன் சோழப் பேரரசிற்குள் நடக்கும் பிரிவு, அதிகாரப் போராட்டங்களைக் கண்காணிக்கிறார். அரசின் எதிரிகள் வினையூக்கிகளாக செயல்படுகிறார்கள்.

பொன்னியின் செல்வன் (காவேரி நதியின் மகன்) ஒரு பொற்காலத்தை கொண்டு வருவதற்காக போராடி – அதாவது, ராஜ ராஜ சோழன் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய பேரரசர்களில் ஒருவராக ஆவதற்கு முன்பு இருந்த கொந்தளிப்பான காலகட்டத்தில் கதை அமைக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னரே, அவர் ராஜ ராஜ சோழன் என்று அழைக்கப்பட்டார்.

இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவையும், தோட்ட தரணி தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகவும், பிரபல இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றும் நட்சத்திர தொழில்நுட்ப வல்லுநர்களால் படம் நிரம்பியுள்ளது.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் , வரும் வாரங்களில் படத்தைப் பற்றிய கூடுதல் அறிவிப்புகள் மற்றும் செய்திகளை அதிகாரபூர்வமாக வெளியிடுவார்கள்.

Ponniyin Selvan official announcement is here

சத்யஜோதி – தனுஷ் – ஜிவி.பிரகாஷ் கூட்டணியில் 1930 ஸ் பீரியட் ஃபிலிம்

சத்யஜோதி – தனுஷ் – ஜிவி.பிரகாஷ் கூட்டணியில் 1930 ஸ் பீரியட் ஃபிலிம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை (ஜூலை 2, 2022): அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தேசிய விருது நாயகன் தனுஷ் நடிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது அடுத்த பிரமாண்ட தயாரிப்பான ‘கேப்டன் மில்லர்’ என்ற தலைப்பினை படக்குழு இன்று அறிவித்துள்ளது.

தென்னிந்திய திரையுலகில் பல கிளாசிக் படைப்புகளை வழங்கியதன் மூலம், பல தசாப்தங்களாக, சத்யஜோதி ஃபிலிம்ஸ் ஒரு மதிப்பு மிக்க நிறுவனமாக விளங்கி வருகிறது.

தற்போது இந்நிறுவனம், பாராட்டுக்களைக் குவித்த ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்களை தந்த அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ என்ற புதிய திரைப்படத்தை அறிவித்துள்ளது.

பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ள இப்படம் 1930கள்-40களின் பின்னணியில் எடுக்கப்படும் பீரியட் ஃபிலிமாக உருவாகவுள்ளது.

மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.

தயாரிப்பாளர் T.G. தியாகராஜன், சத்யஜோதி பிலிம்ஸ் கூறும்போது…

“எங்கள் தயாரிப்பு நிறுவனத்தில், பிரமாண்டமான அளவில் உருவாகும் நம்பிக்கைக்குரிய திரைப்படங்களில் ஒன்றாக இப்படம் இருக்கும், எங்களின் மதிப்புமிக்க திரைப்படமான ‘கேப்டன் மில்லர்’ படத்தை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நடிகர் தனுஷுடன் பணிபுரிவது எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும், ஏனெனில் எங்களின் கூட்டணியில் வெளியான முந்தைய திரைப்படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எனக்கும், தனுஷுக்கும் ஸ்கிரிப்டை விவரித்தபோது, நாங்கள் இருவரும் உற்சாகமானோம், மேலும் பெரிய அளவில் இதனை உருவாக்க விரும்பினோம்.

இயக்குநர் அருணின் வழக்கத்திற்கு மாறான சிந்தனை மற்றும் விதிவிலக்கான படைப்புகளை வழங்கும் முயற்சி, மாறுபட்ட அவரது திரைப்படத் தயாரிப்பு முறைகள் என அனைத்தும் எனக்கும் மிகவும் பிடிக்கும், அவர் ஸ்கிரிப்டை விவரித்தபோது, அவரது சிந்தனை மற்றும் அவரது திரைக்கதையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தனித்துவமான இசை இந்தப் படத்தின் தரத்தை மேலும் உயர்த்தும்.

இந்தப் படத்தில் நடிக்கும் ஒவ்வொரு நடிகரும், தொழில்நுட்பக் கலைஞர்களும் ஏற்கனவே தங்களுக்கென சிறப்பான ஒரு இடத்தைச் செதுக்கியிருக்கிறார்கள்.

மேலும் அவர்களின் பங்களிப்பு ‘கேப்டன் மில்லரை’ பெரிய அளவில் கொண்டு செல்லும்.

“கேப்டன் மில்லர்” படைப்பு அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பே, ரசிகர்களிடம் பெரும் சலசலப்பை உருவாக்கியது.

மேலும் சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த திரைப்படத்தைப் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான சினிமா அனுபவமாக வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளுடன் வளர்த்து வருகிறது.

இந்த திரைப்படம் சிறந்த முறையில் வடிவமைக்கப்படுவதை உறுதிசெய்ய, ஒரு குழு ஒரு வருடமாக, முன் தயாரிப்பு பணிகளிலும், ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட்டது.

இந்த திரைப்படத்திற்கு நட்சத்திர நடிகர்கள் மற்றொரு ஈர்க்கும் அம்சமாக இருப்பார்கள். இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் புதியதாகவும் கவர்ச்சிகரமான படைப்பாகவும் இருக்கும்.

உண்மையில், இந்த திரைப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பேனர் மதிப்புக்காக அல்லாமல், அந்தந்த துறையினுள் சாதனை புரிந்த, சிறந்த திறமைகளின் அடிப்படையில் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இதில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இந்த படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார்.

பாகுபலி படங்கள், ஆர்ஆர்ஆர், புஷ்பா போன்ற மிகப்பெரும் பிளாக்பஸ்டர் படங்களுக்கு அவரது சிறப்பான வசனங்கள் பலமாக இருந்தது போல் கேப்டன் மில்லருக்கும் கூடுதல் ஈர்ப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற தொழில்நுட்ப வல்லுநர்களில் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா (ஒளிப்பதிவு), நாகூரன் (எடிட்டர்), த.ராமலிங்கம் (கலை), பூர்ணிமா ராமசாமி & காவ்யா ஸ்ரீராம் (ஆடை வடிவமைப்பு), திலீப் சுப்பராயன் (சண்டை காட்சி இயக்கம்), Tuney John 24am (பப்ளிசிட்டி டிசைனிங்) ஆகியோர் பணிபுரிகின்றனர்.

கேப்டன் மில்லர் படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்குகிறார் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர்.

இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர்.

1930s period film with Satya Jyothi – Dhanush – GV Prakash

More Articles
Follows