தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது என்பதால் டாஸ்மாக் கடைகளை 27 மாவட்டங்களில் இன்று ஜூன் 14 முதல் திறக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய்த் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதால் இந்த 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதியில்லை.
இவை தவிர மற்ற 27 மாவட்டங்களில் இன்று ஜூன் 14ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக நடிகை கஸ்தூரியும் தன் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
அவரின் ட்விட்டர் பதிவில், ‘குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்பார்கள் முன்பு; திராவிட வாதிகள் பேச்சு தேர்தல் முடிஞ்சா போச்சு என்கிறார்கள் இப்போது. Tasmac is back!’ என்று அவர் திமுக அரசை கலாய்த்துள்ளார் கஸ்தூரி.
கடந்தாண்டு 2020 அதிமுக அரசு டாஸ்மாக்கை திறந்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது அப்போதைய எதர்க்கட்சி திமுக.
டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக கையில் பதாகை ஏந்தி மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Actress Kasthuri tweets on Tasmac reopening