தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
இதனை மதித்து பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
ஒரு சிலர் போரடிக்குது என்ற பெயரில் தெருக்களில் வலம் வருகின்றனர். இவர்களை போலீசார் கண்டித்தும் தண்டித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் தெருக்களில் தன் நாயை வைத்துக் கொண்டு வாக்கிங் சென்ற ஒரு நடிகையை அங்குள்ள தெரு நாய்கள் கடித்து குதறுகின்றன.
அந்த சீரியல் நடிகையின் பெயர் ஆஞ்சல் குரானா.
டெல்லியில் வசிக்கும் இவர் நிறைய ஹிந்தி சீரியல்களில் நடித்துள்ளார்.
நாய் கடி குறித்து நடிகை ஆஞ்சல் குரானா கூறியதாவது…
“நான் வாக்கிங் போன போது ஊரடங்கு உத்தரவால் சாலையில் யாரும் இல்லை. அப்போது நாய்கள் சுற்றி வளைத்து என்னை கடித்து குதறி விட்டன. அக்கம் பக்கத்தினர் உதவி செய்து என்னை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்” என அவர் தெரிவித்துள்ளார்.
Actress Aanchal Khurana attacked by 3 street dogs