விமல் மீது மோசடி புகார்..; பதறிய நடிகர் திடீர் அறிக்கை..

விமல் மீது மோசடி புகார்..; பதறிய நடிகர் திடீர் அறிக்கை..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விமல் அறிக்கை…

என்னை பற்றிய தவறான செய்திகளை சமூகஊடகத்திலும் நாளிதழ்களிலும் வந்திருப்பவற்றை படித்தேன்.

அது எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. என் வளர்ச்சியை பொறுக்காத சிலர் இது போன்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் திநாவுக்கரசு என்பவர் என்மீது இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார்.

திருநாவுக்கரசுக்கும் எனக்கும் எந்தவித நேரடித் தொடர்போ பணம் பரிமாற்றமோ இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்வதோடு மேலும் அவர் மீது இது தொடர்பாக மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர்களின் நோக்கம் என்னை ஏமாற்றி என்னிடமிருந்து பணம் பறிப்பதே ஆகும்.

மேலும் என்னைப் பற்றிய தகவல்களை என்னிடம் நேரடியாகவோ அல்லது என் செய்தி தொடர்பாளர் (PRO) பிரியாவிடமோ கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம் என்று திட்டவட்டமாக நடிகர் விமல் கூறி இருக்கிறார்.

Actor Vimal’s statement on rumours

‘கர்ணன்’ டீசரை விட சொல்லுங்க..; ரசிகர்களின் கோரிக்கைக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த தனுஷ்

‘கர்ணன்’ டீசரை விட சொல்லுங்க..; ரசிகர்களின் கோரிக்கைக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் & ரெஜிஷா விஜயன் நடித்துள்ள படம் ‘கர்ணன்’.

இவர்களுடன் யோகிபாபு, லால், கவுரி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘கண்டா வரச் சொல்லுங்க’ மற்றும் ‘பண்டாரத்தி புராணம்’ ஆகிய இரண்டு பாடல்களும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக உள்ள நிலையில் இதன் டீசரை வெளியிட சொல்லி ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் இப்பட டீசர் குறித்த முக்கிய அப்டேட்டை தனுஷ் வெளியிட்டுள்ளார்.

‘கர்ணன்’ டீசர் மிக விரைவில் வெளியாகும் என தனுஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Most awaited Karnan teaser will be released soon

நடிகர் விமல் மனைவி தேர்தலில் போட்டி.; முக. ஸ்டாலினிடம் மோசடி புகார் அளித்த பிரபலம்

நடிகர் விமல் மனைவி தேர்தலில் போட்டி.; முக. ஸ்டாலினிடம் மோசடி புகார் அளித்த பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அடுத்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

அதில் திமுக சார்பில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி அக்‌ஷயா மணப்பாறை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் விமல் மீது தி.மு.க. தலைவர் முக.ஸ்டாலினிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சையை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

“பட்டுக்கோட்டையில் தியேட்டர் ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தபோது, விமலுடன் பழக்கம் ஏற்பட்டது.

‘மன்னர் வகையறா’ படத்தை தயாரிக்க, என்னிடம் விமல், 50 லட்சம் ரூபாய் கேட்டார். என் வீட்டை அடமானம் வைத்து, பணம் கொடுத்தேன்.

அதற்காக எனக்கு, 80 லட்சம் ரூபாய்க்கு காசோலை கொடுத்தார். படப்பிடிப்பு முடிந்த நிலையில், விமல் சொன்ன தேதியில், காசோலையை வங்கியில் செலுத்திய போது, பணமில்லாமல் திரும்பியது.

இது குறித்து பலமுறை, விமலிடம் முறையிட்டபோதும், பணத்தை தரவில்லை. என் வீட்டை விற்று, கடனை அடைத்தேன்.

விமலுக்கு உதவப் போய், தற்போது நடுத்தெருவில் நிற்கிறேன்.

இப்போது தி.மு.க., சார்பில், விமலின் மனைவி, மணப்பாறையில் போட்டியிட போவதாக தகவல் அறிந்தேன்.

‘ஸ்டாலின் தான் வாராரு, விடியல் தரப் போறாரு’ என, என்னைப் போன்றவர்கள் நம்பியுள்ள வேளையில், மோசடியின் மொத்த உருவமாய் திகழும் விமலுக்காக, அவரது மனைவிக்கு, ‘சீட்’ கொடுப்பது, அதிர்ச்சி அளிக்கிறது.”

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Film producer fraud complaint againt Vimal

அரசியல் அம்புட்டுதான்..; 2 இளம் இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் ‘அண்ணாத்த’

அரசியல் அம்புட்டுதான்..; 2 இளம் இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் ‘அண்ணாத்த’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2020 டிசம்பர் 29ஆம் தேதி தன் அரசியல் வருகைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்.

ரசிகர்களுக்கு அரசியல் ஆசை காட்டி அம்போ என ஆற்றில் தவிக்க விட்டு சென்றார்.

அந்த அரசியல் அறிக்கைக்கு பிறகு வெளியில் வராமல் தன் வீட்டிலேயே மறைந்து ஒளிந்து கிடந்தார் ரஜினிகாந்த்.

தன் மருமகனும் நடிகருமான தனுஷின் புது மனை பூஜையில் கலந்து கொண்டார்.

பிறகு இளையராஜாவின் புது ஸ்டூடியோவுக்கு வருகை வந்தார்.

இந்நிலையில் வரும் 8ந்தேதி ‘அண்ணாத்த’ பட படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்ளவிருக்கிறாராம் ரஜினி.

மார்ச் இறுதிவரை கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

ஏப்ரல் முதல் வாரத்தில் சென்னை திரும்பும் ரஜினி சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பார்.

களத்திற்கு வராமலேயே அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டதால் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டுகிறாராம்.

2 இளம் இயக்குனர்களின் கதைகளுக்கு சம்மதம் சொல்லி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

தேர்தலுக்கு பிறகோ அல்லது முன்போ அந்த படங்களின் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Super Star Rajinikanth wish to act more films

தாஜ் நூர் இசைக்கு டூயட் பாடும் ஸ்ரீகாந்த் – ஸ்ருஷ்டி டாங்கே

தாஜ் நூர் இசைக்கு டூயட் பாடும் ஸ்ரீகாந்த் – ஸ்ருஷ்டி டாங்கே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீநிதி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி. விஜயகுமார் தயாரிக்கும் புதிய படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், சிருஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜே பப்பு, தேவி பிரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

மணி பாரதி இயக்கும் இப்படத்திற்கு கோகுல் ஒளிப்பதிவை கவனிக்கிறார் மற்றும் தாஜ் நூர் இசையமைக்கிறார்.

இதைத் தொடர்ந்து எடிட்டிங் பணிகளை அகமது மேற்கொள்கிறார்.

இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டு தற்போது ஊட்டியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சஸ்பென்ஸ் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்ட மற்ற விவரங்களை படக்குழுவினர் விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.

Srikanth and Srushti Dange joins for a new film

JUST IN அரசியலை விட்டு விலகும் ஜெயலலிதா தோழி சசிகலா..; ஓ… அடுத்த ரஜினியா.?

JUST IN அரசியலை விட்டு விலகும் ஜெயலலிதா தோழி சசிகலா..; ஓ… அடுத்த ரஜினியா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா.

இவர் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார்.

தண்டனைக் காலம் முடிந்து, தமிழகம் திரும்பிய அவர் தீவிர அரசியலில் ஈடுப்படுவார் என எதிர்பார்த்தனர்.

மேலும் அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துவிடுவார் எனவும் எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் சென்னை வந்த பிறகு செய்தியாளர்களையும் சந்திக்கவில்லை.

ஆனால் தற்போது, அரசியலில் இருந்து விலகி இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

“நான் என்றும் வணங்கும் என் அக்கா புரட்சி தலைவியின் எண்ணத்திற்கு இணங்க அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் புரட்சி தலைவர் (எம்ஜிஆர்) மற்றும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் (ஜெயலலிதா) பொற்கால ஆட்சி தொடர, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.

நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று அம்மா நமக்கு காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் உண்மை தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.

அம்மா அவர்கள் உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன்.

நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை.

புரட்சி தலைவியின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.

நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன்.

இவ்வாறு சசிகலா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

*தமிழக அரசியலில் கடந்த 25 வருடங்களாகவே பேசப்பட்ட பெயர்களில் முக்கியமான பெயர்கள் ரஜினிகாந்த் & சசிகலா.

இவர்கள் இருவரும் நேரடி அரசியலில் ஈடுப்படவில்லை. எந்த ஒரு கட்சியிலும் பொறுப்பிலும் இல்லை. (சசிகலாவுக்கு டிடிவி தினகரனின் அமமுக -வில் பதவி தரப்பட்டது. அது சிறையிலேயே சென்றது எனலாம்.)

ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் இவர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.

ஜெ-வுக்கு பின்னால் இருந்துக் கொண்டே மறைமுகமாக அனைத்து அமைச்சர்களையும் எம்எல்ஏ-க்களையும்.. ஏன் அரசாங்கத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார் சசிகலா.

ஜெ. மறைவுக்கு பின்னர் அதிமுக-வுக்கு சில நாட்கள் தலைமை தாங்கினார் சசிகலா. சில நாட்களில் சசி தமிழக முதல்வர் ஆவார் என எதிர்ப்பார்த்த நிலையில் தான் சிறை தண்டணை பெற்றார்.

அதுபோல… ரஜினியின் வாய்ஸ்க்கு என்று எப்போதுமே தனி மதிப்பு தமிழக தேர்தலில் இருக்கும். 1996ல் ஜெ. அரசு வீழ்த்தப்படுவதற்கு முக்கியமான காரணமே ரஜினி தான்.

அது போல தா ம க.வின் தலைவரே ரஜினி என அப்போது மூப்பனாரே சொல்லியிருந்தார்.

2018 முதல் தன் அரசியல் பிரவேசத்தையும் தான் ஆட்சிக்கு வந்தால் எம்ஜிஆர் ஆட்சியை கொடுப்பேன் என்றும் மேடைகளில் பேசினார் ரஜினி.

ஆனால் 2020 டிசம்பர் 29ல் அரசியலுக்கு வர மாட்டேன். புதிய கட்சி தொடங்க மாட்டேன் என அறிவித்தார்.

ரஜினிகாந்த் மற்றும் சசிகலா இருவருமே நேரடி அரசியலுக்கு வராமல் அரசியலை விட்டு விலகுகிறேன் என அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ex CM Jayalalithaa aide Sasikala quits from TN politics

More Articles
Follows