குறட்டைக்கு மருந்து..; ஹேர் கலர் ஷாம்பூ கின்னஸ் சாதனை.. அசத்தும் RK

குறட்டைக்கு மருந்து..; ஹேர் கலர் ஷாம்பூ கின்னஸ் சாதனை.. அசத்தும் RK

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

 Actor RK going to make Guinness world Record with Hair Color Shampoo எல்லாம் அவன் செயல் படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஆர்கே. தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக வலம் வரும் ஆர்கேவுக்கு, வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது.

அந்தவகையில் கடந்த 18 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய தயாரிப்பை முதன்முறையாக பொது மார்க்கெட்டில் கடந்த வருடம் அறிமுகப்படுத்தினார் ஆர்கே..

‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக உருவாகியுள்ள இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை உலகெங்கிலும் எடுத்துச்செல்லும் விதமாக கின்னஸ் சாதனை நிகழ்த்துதற்கும் தயாராகி விட்டார் ஆர்கே.. அது குறித்த விபரங்களை இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் விபரமாக பகிர்ந்துகொண்டார் ஆர்கே.

“தரமான தயாரிப்பாக இருந்தாலும் ‘மேட் இன் இந்தியா’ என்று சொன்னால் அதுவும் தமிழ்நாட்டுக்காரன் தயாரிப்பு என்று சொன்னால் அதை சற்றே மட்டமாக பார்க்கும் மனோபாவமே பல வெளிநாடுகளில் இருக்கிறது..

பலரும் உங்களுடைய தொழிற்சாலையை, சிங்கப்பூர், துபாய் போன்ற ஏதோ ஒரு நாட்டில் துவங்கினால் பிசினஸ் பெரிய அளவில் நடக்குமே என கூறினார்கள்..

ஆனால் நான் ஆரம்பத்திலிருந்தே அனைத்திற்கும் போராடியே பழக்கப்பட்டவன் என்பதால் அவர்கள் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ளவில்லை. இதை மாற்றவேண்டும் என முடிவெடுத்தேன்.

உலகத்தில் தங்கல் தலைமுடிக்கு டை அடிக்கும் யாராவது வெறும் கையால் ஹேர் டையை தொட முடியுமா என்று கேட்டு, அதை வைத்தே கின்னஸ் சாதனை செய்து எங்களுடைய விஐபி ஹேர் கலர் ஷாம்பூவின் தரத்தை உலக அளவில் நிரூபிக்க முடிவு செய்தேன்.

சரியாக 1005 நபர்களை ஒரே இடத்தில் ஒன்று கூட்டி ஒரே சமயத்தில் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை அவர்களை பயன்படுத்த செய்வது, அதன்மூலம் இதன் தரத்தை உறுதி செய்வது என்பதுதான் இந்த சாதனையின் நோக்கம்.

இதற்கான நடைமுறைகள் அனைத்தையும் முடித்துவிட்டோம்.. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி பூந்தமல்லி அருகில் உள்ள EVP பிலிம் சிட்டியில் இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை வெறும் கையால் தொட்டு பயன்படுத்திவரும் 1005 பயன்பாட்டாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின்றனர்.. அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்துசெல்வதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கலந்துகொண்ட 1௦௦5 பேருக்கும் இந்த நிகழ்ச்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்..

இந்த நிகழ்ச்சியில் நானும் ஒரு பயன்பாட்டாளராக பங்கேற்க இருக்கிறேன். இந்த நிகழ்ச்சியை மேற்பார்வை செய்ய இருக்கும் ஆறு நடுவர்களில் இரண்டு பேர் லண்டனில் இருந்து வருகின்றனர்.. மீதி நான்கு நடுவர்களும் இந்தியாவில் உள்ள மிகப் பெரிய பிரபலங்கள்..

தற்போது தமிழ்நாட்டில் நிலவு தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினை காரணமாக இந்த கின்னஸ் சாதனையில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். ஒவ்வொரு ஆணுக்கும் வெறும் நான்கு லிட்டர் தண்ணீர் என்கிற குறைந்த அளவே பயன்படுத்த இருக்கிறோம்.

இந்த சாதனைக்காக விண்ணப்பிக்கும்போது இத்தனை நபர்களை வைத்து உங்களால் சமாளிக்க முடியுமா..? இங்கே லண்டனில் இருந்து நடுவர்கள் வேறு வருவார்கள்.. சரியாக செய்யமுடியுமா என கேள்வி மேல் கேள்விகளாக கேட்டார்கள்.. ஒரு தயாரிப்பாளராக இத்தனை படங்கள் தயாரித்திருக்கிறேன் என்கிற ஒரே ஒரு விபரத்தை மட்டும் நான் சொன்னேன்.. அதன்பின் வேறு எந்தக் கேள்வியும் கேட்காமல் ஒப்புக்கொண்டார்கள்..

அவர்களை ஒப்புக் கொள்ளச்செய்தது ஆர்கே என்கிற பிசினஸ் மேன் அல்ல.. ஆர்கே என்கிற சினிமாக்காரன்.. எல்லாம் அவன் செயல் என்கிற படம் மூலம் எனக்கு கிடைத்த சினிமாக்காரன் என்கிற அந்தஸ்து தான் இந்த சாதனைக்கு என்னை தயார்படுத்தியது.. போட்டி நடத்துபவர்களையும் ஒப்புக்கொள்ள வைத்தது. சினிமா மூலம் நான் சம்பாதித்தது இதைத்தான்.

1991ல் காசு தங்க காசு என்கிற படம் மூலம் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் நுழைந்தேன். ஆனால் என் வீட்டையே அடமானம் வைத்து தான் அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடிந்தது.

அப்போதுதான் சினிமா எடுப்பதற்கு ஒரு வலுவான பொருளாதார பின்னணி இருக்க வேண்டும், வந்தால் நூறு கோடியுடன் படம் எடுக்க வரவேண்டும், அதற்கு மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கவேண்டும் என்று நினைத்து தொழிலில் இறங்கி சாதித்து அதன் பின்பு எனது வீட்டை மீட்டு, மீண்டும் சினிமாவிற்குள் மிகவும் அழுத்தமாக அடி எடுத்து வைத்தேன்.

திரையுலகம் இன்று தத்தளித்துக்கொண்டு இருக்கிறது என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. சினிமா ஒரு சூதாட்டம் போன்று ஆகிவிட்டது.. இதனை தெளிவாக தெரிந்துகொண்டு நான் மீண்டு(ம்) வந்ததால்தான் இதுவரை வெளியான எனது படங்கள் எதுவுமே எந்த ஒரு கடன் பிரச்சனையையும் கடைசிநேர ரிலீஸ் பிரச்சினைகளையும் சந்தித்ததில்லை. அதற்கு எனக்கு அடித்தளம் அமைத்து கொடுத்திருக்கிறது என்னுடைய பிசினஸ்.

லைக்கா நிறுவனம் பல கோடி முதலீட்டில் படம் எடுக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.. எங்கிருந்து வருகிறது இந்த பணம்..? இதுபோன்ற பிசினஸ் மூலமாகத்தான்.. அங்கே சம்பாதித்து இங்கே கொண்டுவந்து செலவு செய்கிறோம்..

சினிமாவில் சம்பாதித்து பிசினஸ் செய்ய முடியாது.. பிசினஸில் சம்பாதித்துதான் சினிமாவில் முதலீடு செய்கிறோம் என்பது இதிலிருந்தே நன்றாக தெரியும்.. இந்த வருடத்தில் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்க திட்டமிட்டு இருக்கிறேன்

இதேபோல இதுவரை உலகம் முழுவதும் தீர்க்கப்படாமலேயே உள்ள முக்கிய பிரச்சனை அல்லது நோய் என்று சொன்னால் அது குறட்டை விடுவதுதான்.. குறட்டை விடுபவர்களும் அதனால் பாதிப்புக்கு ஆளானவர்களும் தங்கள் வாழ்க்கையில் பலவிதமான சங்கடங்களை சந்திக்கின்றனர்.

உலகத்திலேயே இதற்கும் முதன்முதலாக விஐபி ஸ்மோக் ஹேர் ஆயில் என்கிற ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ளேன்.. சுமார் 2000 பேரிடம் இதை பயன்படுத்த சொல்லி இதன் வெற்றிகரமான செயல்பாட்டை உறுதி செய்துள்ளேன்.

கூடிய விரைவில் உங்கள் ஆதரவுடன் இந்த தயாரிப்பையும் பொது மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த இருக்கிறேன்” என்றார் ஆர்.கே.

Actor RK going to make Guinness world Record with Hair Color Shampoo

பாராட்டு மழையில் நனையும் ஓவியா அப்பா ராஜ்மோகன்குமார்

பாராட்டு மழையில் நனையும் ஓவியா அப்பா ராஜ்மோகன்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamilnadu peoples praises Kalavani2 Villain actor RajMohankumar2010 ஆம் ஆண்டில் விமல், ஓவியாவின் யதார்த்த நடிப்பில் உருவாகி வெளிவந்த படம் தான் ‘களவாணி’.

இப்படத்தினை சற்குணம் இயக்கியிருந்தார். மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

மீண்டும் அதே எதிர்பார்ப்பில் விமல்,ஓவியா நடிப்பில் உருவாகியுள்ளது ‘களவாணி 2’.இப்படத்தையும் சற்குணமே இயக்கியிருக்கிறார்.

நேற்று வெள்ளி அன்று வெளியான இப்படம், நல்லதொரு வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது…

இப்படத்தில், ஓவியாவின் தந்தையாக நடித்திருப்பவர் ராஜ்மோகன்குமார்.

செல்லத்துரை என்ற கதாபாத்திரத்தில், பஞ்சாயத்து தலைவராக நடித்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார்.

கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்து, அனைவரின் பாராட்டினையும் பெற்றிருக்கிறார்.

ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பு அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறது. தமிழ் சினிமாவிற்கு நல்லதொரு கதாபாத்திர நடிகர் கிடைத்துவிட்டார்.

Tamilnadu peoples praises Kalavani2 Villain actor RajMohankumar

ஆதி போட்டோஸ் நிறுவனம் சார்பில் ஆதி நாடார் தயாரிக்கும் படம் “விருது”

ஆதி போட்டோஸ் நிறுவனம் சார்பில் ஆதி நாடார் தயாரிக்கும் படம் “விருது”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

viruthu stillsஆதி போட்டோஸ் நிறுவனம் சார்பில் ஆதி நாடார் தயாரிக்கும் படம் “விருது”. இதில் கதாநாயகனாக பதினைந்து வயதே நிரம்பிய அச்சயன் என்கிற புதுமுகம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக திவ்யதர்ஷினி, அனுஷா, ஐஸ்வர்யா ஆகிய மூன்று அறிமுக நாயகிகள் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு மன்மதராசா புகழ் தீனா இசையமைக்கிறார். ஒளிப்பதிவு – சீனிவாசன். சண்டைப்பயிற்சி – “க்னாக் அவுட்” நந்தா. எடிட்டிங் – துர்காஸ். நடனம் – சர்வஜித், பாடல்கள் – ஆதவன் மற்றும் NTC.சரவணன். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் பதினேழே வயது நிரம்பிய ஆதவன்.

இப்படத்தை பற்றி இயக்குனர் கூறியாதாவது, “ பார்வையற்ற தந்தையை கவனித்துகொள்ளும் மகனை பற்றிய கதை இது. தந்தைக்கும் மகனுக்குமான உறவை மிக அழுத்தமாக சொல்லி இருக்கிறோம். நன்கு பாடத்தெரிந்த ஒரு கிராமத்து இளைஞன் சந்தர்ப்ப சூழ்நிலையால் திரைத்துறைக்குள் வந்து மிகப்பெரிய உச்சத்தை அடைகிறான். ஆனால் இந்த வெற்றியே அவனது வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிறது என்பதை மிகவும் எதார்த்தமாக சொல்லி இருக்கிறோம். படத்தில் ஐந்து பாடல்களும், நான்கு சண்டைக்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதன் படப்பிடிப்பு முழுவதும் இராஜபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கல்லாபுரம் மற்றும் புத்தூர் ஆகிய பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.

இப்படத்தில் குறிப்பாக நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் பக்திப்பாடல் ஒன்று இப்படத்தின் மூலம் வெளிவர உள்ளது. இந்த பாடலை அம்மன் மற்றும் முருகனுக்கு இணைந்து சமர்பிக்கும்படி தீனா இசையமைத்துள்ளார், இப்படத்தினை தணிக்கை குழுவினர் பார்த்து, பாராட்டி, இப்படத்திற்கு “யு” சான்றிதழ் வழங்கியுள்ளனர். படம் விரைவில் திரைக்கு வர இருப்பதாக இயக்குனர் தெரிவித்தார்.

இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் “ ஆண்கள் ஜாக்கிரதை “

இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் “ ஆண்கள் ஜாக்கிரதை “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இனணந்து தயாரித்துள்ள படம் “ ஆண்கள் ஜாக்கிரதை “

இந்த படத்தில் முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ஐஸ்வர்யா, மஹிரா,ரேஷ்மி, மூர்த்தி, இளங்கோ ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – M.P.சிவகுமார்

இசை – பாலகணேஷ்

எடிட்டிங் – G.V.சோழன்

விளம்பர வடிவமைப்பு – அயனன்

தயாரிப்பு – ஜெமினி ராகவா

இணை தயாரிப்பு – க.முருகானந்தம்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – K.S.முத்துமனோகரன்

படம் பற்றி இயக்குனர் முத்து மனோகரன் கூறியதாவது…

இது ஒரு வித்தியாசமான திரில்லர் படம். அளவுக்கு அதிகமான சுதந்திரம் பெண்களையும் தவறு செய்ய தூண்டும். அதனால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. ஒரு ஆண் தவறு செய்தால் அந்த குடும்பம் மட்டும்தான் சிதையும். ஆனால் ஒரு பெண் தவறு செய்தால் சமுதாயமே பாதிக்கப்படும் என்ற கருத்தை சொல்கிறோம்.

இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் இது. ஒரு கோடிக்கு அதிகமாக செலவிட்டு 2000 முதலைகளை 15 நாட்களாக ஒரே இடத்தில் வைத்து அவைகளுக்கு உணவாக சிக்கன், மாட்டிறைச்சி போன்றவற்றை டன் கணக்கில் போட்டு அவைகளை தண்ணீருக்குள் இருந்து வெளியே வரவைத்து மிகவும் சிரமப்பட்டு எடுத்தோம்.

கிளைமாக்ஸ் காட்சியில் அனைத்து முதலைகளும் ஒன்றாக சேர்ந்து வருவது போல் ஒரு காட்சி இருக்கிறது அந்த காட்சியை திரையில் பார்க்க படு பயங்கரமாக இருக்கம் அதுதான் இந்த படத்தின் ஹைலைட் காட்சி. படம் விரைவில் வெளியாக உள்ளது என்றார் இயக்குனர்.

மீண்டும் செல்வராகவன்-தனுஷ் கூட்டணியை அமைத்த தாணு

மீண்டும் செல்வராகவன்-தனுஷ் கூட்டணியை அமைத்த தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush and Selvaraghavan to work together after 8 yearsதனுஷ் சினிமாவில் அறிமுகமான காலத்தில் அவருடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்தார்.

செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய வெற்றி படங்களில் நடித்துள்ளார் தனுஷ்.

இவர்களின் கூட்டணியை ரசிகர்கள் அதிகம் விரும்பினர்.

எனவே இவர்கள் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் தற்போது இந்த கூட்டணியை இணைத்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளாராம் கலைப்புலி எஸ். தாணு.

இப்படம் புதுப்பேட்டை 2ஆக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அசுரன் படம் அசுர வேகத்தில் உருவாகி வருகிறது.

Dhanush and Selvaraghavan to work together after 8 years

வறுமையில் வாடும் பாக்யராஜ் சிஷ்யனுக்கு உதவிய சௌந்தரராஜா

வறுமையில் வாடும் பாக்யராஜ் சிஷ்யனுக்கு உதவிய சௌந்தரராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Soundararaja help to old actor Sundara Kandam fame Nandagopalஇந்திய சினிமாவில் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் இயக்கி நடித்த படங்களை ரசிகர்களால் என்றும் மறக்க முடியாது.

அதில் முக்கியமான படங்களில் ஒன்று சுந்தரகாண்டம்.

அதில் ‘டேய்… சண்முகமணி’ என டயலாக் பேசி அனைவரையும் சிரிக்க வைத்தவர் நந்தகோபால்.

இவர் தற்போது சினிமா வாய்ப்பு இன்றி வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனையறிந்த நடிகர் சௌந்தரராஜா அவருக்கு பண உதவி செய்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது…

‘நிறைய நடிகர்கள் இன்னும் போராட்ட வாழ்க்கையில் தான் எதிர்கொண்டு வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். எல்லோருக்கும் உதவிகள் செய்ய இயலாது.

எனவே சில மருத்துவ உதவிகளை செய்து ஆதரவை கொடுப்போம்.

பிளாக் பாண்டியின் மூலம் நடிகர் நந்தகோபால் நிலை உதவினேன். உதவி செய்த நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். வாழ்வோம் வாழவைத்து வாழ்வோம்’ என கூறினார்.

Soundararaja help to old actor Sundara Kandam fame Nandagopal

More Articles
Follows