தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குநர் – எழுத்தாளர் மற்றும் நடிகர் ஈ.ராம்தாஸ்.. என பன்முகத் திறமை கொண்டவர் இவர்..
ஈ ராமதாஸ் நான்கு படங்களை இயக்கியுள்ளார். ஆயிரம் பூக்கள் மலரட்டும், ராஜா ராஜாதான், ராவணன், வாழ்க ஜனநாயகம் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
கமலின் “வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்” (2004) படத்தில் வார்டு பாயாக நடித்ததைத் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்புகளைப் பெறத் தொடங்கினார்.
மேலும் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். நிறைய படங்களில் அப்பாவி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த ‘காக்கி சட்டை’ படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்திருப்பார்.
அதைத் தொடர்ந்து “விசாரணை”(2016), “தர்மதுரை” (2016), “விக்ரம் வேதா” (2017) ஆகிய படங்களில் நடித்தார்.
தனது முதல் திரைக்கதை பணியாக பி. எஸ். நிவாஸ் இயக்க சுமன், சுமலதா ஆகியோர் நடித்த “எனக்காக காத்திரு”(1981) படத்திற்காக எழுதினார். நிவாசுடன் பணிபுரிந்த பிறகு, இராமதாஸ் ஆறு படங்களில் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். பின்னர் மதர்லேண்ட் பிக்சர்சின் கோவைத்தம்பியிடம் பணிபுரிந்தார்.
பெரும்பாலும் எழுத்தாளராக மற்ற திரைப்பட இயக்குநர்களின் படங்களில் பணிபுரிந்தார், “மக்கள் ஆட்சி” (1995), “சங்கம் “, “கண்ட நாள் முதல்” (2005) உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார்.
இந்த நிலையில் சில மணி நேரங்களுக்கு முன் MGM மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார் ராமதாஸ். இந்த தகவலை அவரது மகன் உறுதிப்படுத்தி உள்ளார்.
அவரது இறுதிச் சடங்கு ஜனவர் 24ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை கேகே நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
இவரின் மனைவி பெயர் திலகவதி. இவர்களின் மகன் இராம பாண்டியனுக்கு கடந்த 2019 பிப்ரவரியில் திருமணம் நடந்தது.
Actor Director E Ramadoss passed away