கப்பலில் பணியாற்றிய நண்பர்கள் இணைந்து தமிழர்களுக்காக கொண்டு வரும் ‘ஃபாரின் சரக்கு’

கப்பலில் பணியாற்றிய நண்பர்கள் இணைந்து தமிழர்களுக்காக கொண்டு வரும் ‘ஃபாரின் சரக்கு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல்வேறு துறையில் சாதித்த பலர் சினிமா மீது இருக்கும் ஆர்வத்தினால் திரைத்துறையில் நுழைந்து சாதித்து வருகிறார்கள். அந்த வகையில், கப்பலில் பணியாற்றிய மூன்று இளைஞர்கள் சினிமா மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக தங்களது சொந்த முயற்சியில் திரைப்படம் ஒன்றை இயக்கி தயாரித்திருப்பதோடு, அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புதிய தாக்கத்தை ஏற்படுத்த இருக்கிறார்கள்.

ஆம், கப்பலில் ஒன்றாக பணியாற்றிய விக்னேஷ்வரன், கோபிநாத் மற்றும் சுந்தர் ஆகியோர் சினிமா மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக, படிக்கும் காலம் மற்றும் பணியாற்றிய காலம் என்று 20 குறும்படங்கள் எடுத்திருக்கிறார்கள்.

இவர்களுடைய குறும்படத்தை பார்த்து பலர் பாராட்டியதை தொடர்ந்து இனி திரைப்படம் எடுப்பதில் இறங்க வேண்டும், என்று முடிவு செய்தவர்கள் தங்களது பணியை விட்டுவிட்டு முழு கவனத்தையும் சினிமா பக்கம் திருப்பினார்கள்.

அதன்படி, கப்பலில் பணியாற்றி சம்பாதித்த பணத்தை வைத்து திரைப்படம் ஒன்றை தயாரித்து இயக்கி நடித்திருக்கிறார்கள் இந்த மூன்று நண்பர்கள்.

நெப்ட்டியூன் சய்லர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் (Neptune Sailors Production) என்ற நிறுவனம் சார்பில் கோபிநாத் தயாரித்திருக்கும் இந்த படத்தை விக்னேஷ்வரன் கருப்புசாமி இயக்க, சுந்தர் மற்றும் கோபிநாத் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.

‘ஃபாரின் சரக்கு’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பார்வை மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புசாமியிடம் படம் குறித்து கேட்ட போது,…

“படிக்கும் காலத்தில் இருந்து சினிமா மீது மிகப்பெரிய ஈடுபாடு உண்டு. அதனால் தான் பல குறும்படங்களை எடுத்து வந்தேன். பிறகு கப்பல் பணியில் சேர்ந்த போது, அங்கே இருந்த சுந்தர் மற்றும் கோபிநாத் ஆகியோரும் என்னை போலவே சினிமா மீது ஆர்வமாக இருந்ததால் நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து பல குறும்படங்களை எடுத்தோம்.

ஒரு கட்டத்தில் குறும்படங்கள் எடுத்தது போதும், திரைப்படம் எடுக்கலாம் என்று மூன்று பேரும் முடிவு செய்தோம்.

எங்கள் மூன்று பேருடைய முயற்சியில் உருவாகியிருக்கும் ‘ஃபாரின் சரக்கு’ படத்தின் பணிகள் நிறைவு பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

படத்தின் தலைப்பு மற்றும் டீசர் பாராட்டு பெற்று வரும் நிலையில், சரக்கு என்றாலே மதுபானம் என்ற கண்ணோட்டத்தில் பலர் பார்க்கிறார்கள்.

ஆனால், நாங்கள் இங்கு குறிப்பிட்ட சரக்கு மதுபானம் அல்ல, அது வேறு ஒன்று. அது என்ன? என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது. காரணம் அது தான் கதையின் மையப்புள்ளி.

குஜராத்தில் தொடங்கும் கதை தமிழகத்தில் முடிவடையும். இது தான் ’ஃபாரின் சரக்கு’ படத்தின் கதைச் சுருக்கம்.

அந்த சரக்கு என்ன, அதற்கும் குஜராத்துக்கும் என்ன தொடர்பு என்பதை விறுவிறுப்பாக மட்டும் இன்றி ரசிகர்களிடமும், தமிழ் சினிமாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. அதேபோல், காதல், பாடல் என்று வழக்கமான பாணியை தவிர்த்துவிட்டு வித்தியாசமான திரைக்கதை அமைப்போடு இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம்.

ஆக்‌ஷன் சஸ்பென்ஸ் ஜானர் திரைப்படமாக இருந்தாலும், வழக்கமான சினிமாவாக இல்லாமல் இருப்பதோடு, இதுவரை திரையில் சொல்லப்படாத ஒரு விஷயத்தை சொல்லும் திரைப்படமாகவும் ‘ஃபாரின் சரக்கு’ இருக்கும்.” என்று நம்பிக்கையோடு கூறினார்.

’ஃபாரின் சரக்கு’ மூலம் தமிழ் சினிமாவில் கால்பதிக்க உள்ள இந்த மூன்று நண்பர்கள் தங்களைப் போல் சினிமா மீது ஆர்வம் உள்ள பலருக்கு இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.

நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என இப்படத்தின் சுமார் 300 பேர் அறிமுகமாகிறார்கள்.

கோபிநாத் மற்றும் சுந்தர் கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் உசேன், சுரேந்தர் சுந்தரபாண்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும், அப்ரினா, இலக்கியா, ஹரிணி ஆகிய மூன்று பெண்களும் மிக முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

சிவநாத் ராஜன்.எஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு எக்ஸ்.பி.ஆர் இசையமைக்க, பிரகாஷ் ராஜ்.பி படத்தொகுப்பு செய்திருக்கிறார். டி.எம்.சரத்குமார் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

முழுக்க முழுக்க புதுமுக கலைஞர்களோடு உருவாகியிருக்கும் இப்படத்தில் ஒரே ஒரு தொழில்நுட்ப கலைஞர் மட்டும் பிரபலமானவர். அவர் தான் ஒலிக்கலவை கலைஞர் சிவகுமார்.

ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவில் பணியாற்றும் சிவகுமார் ‘சார்பட்டா’ போன்ற பல வெற்றி படங்களில் பணியாற்றி வருகிறார். அவர் தான் இப்படத்தின் ஒலிக்கலவை பணியை கவனித்துக்கொள்கிறார்.

குஜராத், நாமக்கல், மதுரை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ள ‘ஃபாரின் சரக்கு’ படத்தின் அனைத்து பணிகளும் நிரைவடைந்துள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு உரிமையை டிரெண்ட் மியூசிக் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Action Suspense thriller foreign sarakku is getting ready for release

மீண்டும் இணைந்த கார்த்தி – சுகன்யா ஜோடியின் புதிய பட ரிலீஸ் அப்டேட்

மீண்டும் இணைந்த கார்த்தி – சுகன்யா ஜோடியின் புதிய பட ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீமான், சின்ன ஜமீன் உள்ளிட்ட படங்களில் நவரச நாயகன் கார்த்திக் & சுகன்யா ஜோடி இணைந்து நடித்துள்ளனர்.

தற்போது 15 வருடங்களுக்கு பிறகு ‘தீ இவன்’ படத்திற்காக மீண்டும் இந்த ஜோடி இணைந்துள்ளது.

மனிதன் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் நவரசநாயகன் கார்த்திக், சுகன்யா, ராதாரவி, சுமன்.J ,ஸ்ரீதர் , ஹேமந்த் மேனன், அபிதா, அஸ்மிதா, யுவராணி, தீபிகா, சிங்கம்புலி, ஜான்விஜய், சரவனசக்தி, இளவரசு, ஆகியோர் நடித்த இப்படத்தின் டப்பிங் பணிகள் இனிதே துவங்கியது.

இப்படத்தின் பாடல்களை புஷ்பா படத்தில் சாமி பாடலை பாடிய பிரபல கிராமிய பாடகி ராஜலட்சுமி, செந்தில், தனி ஒருவன் படத்தில் கண்ணாலா கண்ணாலா… பாடலை பாடிய பத்மலதா என பல்வேறு பிரபல பாடகர்கள் பாடி உள்ளார்கள்.

ரோஜா மலரே, அடடா என்ன அழகு ஆகியபடங்களை தயாரித்து இயக்கிய T. M. ஜெயமுருகன் இப்படத்தை திரைக் கதை ,பாடல்கள், எழுதி இசை அமைத்து இயக்கி உள்ளார்.

ஒளிப்பதிவு Y. N. முரளி, படத்தொகுப்பு இத்ரிஸ், பின்னணி இசை A. J. அலிமிர்ஸா, தயாரிப்பு மேற்பார்வை M. அப்பு கவனிக்க, பிரமாண்ட பொருட்செலவில் நிர்மலா ஜெயமுருகன் தயாரித்துள்ளார்.

இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

Karthik and Suganya starrer Thee Ivan movie release updates

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்.. விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் யார் யார் வெற்றி..?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்.. விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள் யார் யார் வெற்றி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில ஆண்டுகளாக நேரடி அரசியல் ஈடுப்படாவிட்டாலும் அரசியலை கவனித்து வந்தார் நடிகர் விஜய்.

தற்போது தன் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வேட்பாளர்களை நிறுத்தி நேரடி தேர்தல் அரசியலில் களம் கண்டு வெற்றியும் கண்டு வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 129 வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

அவர்களை தன் இல்லத்திற்கு வரவழைத்து வாழ்த்தி அவர்களுடன் போட்டோவும் எடுத்துக் கொண்டார் நடிகர் விஜய்.

இந்த நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன் நடைபெற்ற தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

புதுக்கோட்டை நகராட்சி 4வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர் முகமது பர்வேஸ் வெற்றிபெற்றுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை நகராட்சியில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் பூக்கடை மோகன் வெற்றி பெற்றார்.

மேலும் விருதுநகர் மாவட்டம் தென் கொடிக்குளம் பேரூராட்சி 5வது வார்டில் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் ராஜசேகரன் வெற்றி பெற்றுள்ளார்.

TN urban local body poll results: Vijay Makkal Iyakkam candidates win in several areas

பிக்பாஸில் இருந்து எஸ்கேப்பான கமல்ஹாசனுக்கு பதிலாக இவரா?

பிக்பாஸில் இருந்து எஸ்கேப்பான கமல்ஹாசனுக்கு பதிலாக இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிப்பரப்பான பிக்பாஸ் 5 சீசன்களை வழங்கியவர் நடிகர் கமல்ஹாசன்.

பிக்பாஸ் சீசன்களை முடித்துவிட்டு உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி பணிகளில் பிசியாகி இருந்தார்.

இத்துடன் விக்ரம் பட சூட்டிங்கிலும் கலந்து கொண்டு நடித்து வந்தார் கமல்.

இந்த நிலையில் தற்போது ஓடிடி.,யில் மட்டுமே ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வருகிறார்.

ஆனால் தொடர்ச்சியாக தொகுத்து வழங்க முடியாது என தெரிவித்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார் கமல்ஹாசன்.

இந்த செய்தியை நம் தளத்தில் பார்த்தோம்.

அவரின் அறிக்கையில்….

“பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு என நான் ஒதுக்கியிருந்த தேதிகளும், விக்ரம் படப்படிப்பு தேதிகளிலும் மாற்றங்கள் செய்யவேண்டியதாகிவிட்டது.

என்னோடு பணியாற்றும் பிற முக்கியமான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுடைய தேதிகளையும் மாற்றியமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டதால், பிக்பாஸ் அல்டிமேட் மற்றும் விக்ரம் இரண்டையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகிவிட்டது.

என் சொந்தக் காரணங்களின் பொருட்டு தாமதிக்கச் செய்வது நியாயமல்ல. அவர்கள் ஒப்புக்கொண்ட பணிகள் அவர்களுக்காகக் காத்திருக்கின்றன.

ஆகவே வேறு வழியின்றி கனத்த மனதுடன், இன்றைய எபிஸோடுக்குப் பிறகு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகிக்கொள்வது என்ற முடிவை எடுக்க நேர்ந்துவிட்டது. தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி அறிமுகமான நாள்தொட்டு அதன் அங்கமாக இருந்து ரசிகர்களைச் சந்தித்து உரையாடி வந்த எனக்கு இது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

என்னுடைய விலகல் ஏற்படுத்தும் சிரமங்களுக்காக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகச் சிறிய, தற்காலிக இடைவெளிதான். மிக விரைவில் பிக்பாஸ் சீசன் 6-ல் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.

இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

இதனால் கமல்ஹாசனுக்கு பதிலாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்தது.

இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை வார இறுதி நாட்களில் நடிகர் சிம்பு தொகுத்து வழங்குவார் என தகவல்கள் வந்துள்ளன.

எனவே விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Is actor Simbu set to host Bigg Boss ultimate ?

ரிலீசுக்கு ரெடியாக இத்தனை படங்களா.? வியக்க வைக்கும் விமல்.!

ரிலீசுக்கு ரெடியாக இத்தனை படங்களா.? வியக்க வைக்கும் விமல்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த பிப்ரவரி 18ல் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் விமல் நடித்த ‘விலங்கு’ வெப்சீரிஸ் ரிலீசானது.

படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்துள்ளது. எனவே இந்த படத்தை விமலின் கம்பேக் (COME BACK) எனலாம்.

இதனையடுத்து விமல் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

நடிகரும் இயக்குனருமான சரவணசக்தி இயக்கிவரும் படத்தில் நடித்து வருகிறார் விமல். இந்த படத்திற்கு ‘குலசாமி’ என தலைப்பு வைத்துள்ளனர். வசனம் மற்றும் திரைக்கதையும் எழுதியுள்ளார் விஜய் சேதுபதி.

இத்துடன் விமல் கைவசம் உள்ள படங்கள் லிஸ்ட் இதோ

சற்குணம் இயக்கத்தில் ‘எங்க பாட்டன் சொத்து’, மாதேஷ் இயக்கத்தில் ‘சண்டக்காரி’, முத்துக்குமரன் இயக்கத்தில் ‘கன்னிராசி’ ஆகியவை வெளியீட்டுக்கு தயாராக உள்ளன.

இவை இல்லாமல் விமல் நடிப்பில் ‘படவா’, ‘புரோக்கர்’, ‘மஞ்சள் குடை’, ‘லக்கி’ மற்றும் இயக்குநர் வேலு இயக்கத்தில் ஒரு படம் என லிஸ்ட் நீள்கிறது.

Actor Vimal Upcoming Movies list is here

சரத்குமாரின் 150வது படத்தில் இரண்டு நாயகிகள்

சரத்குமாரின் 150வது படத்தில் இரண்டு நாயகிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ‘தூங்காவனம்’ மற்றும் ‘கடாரம் கொண்டான்’ ஆகிய படங்களை இயக்கியவர் ராஜேஷ் எம்.செல்வா.

இவர் கமல்ஹாசனின் உதவி இயக்குனராவார். இவர் தற்போது சரத்குமார் நடிப்பில் உருவான ‘இரை’ என்ற தொடரை ‘ஆஹா’ என்ற ஒடிடி தளத்திற்காக இயக்கி வெளியிட்டார்.

இந்த நிலையில் இந்த படத்தை தொடர்ந்து தன் 150வது படத்திற்கு தயாராகிவிட்டார் சரத்குமார்.

க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தை ஷ்யாம் – ப்ரவீன் ஜோடி இயக்கவுள்ளனர்.

இதில் அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்ட போலீஸ்காரனாக நடிக்கிறாராம் சரத்குமார்.

இதில் சிஜா ரோஸ், இனியா, ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

கவாஸ்கர் அவினாஷ் இசையமைக்க ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

Actor Sarath Kumar’s 150th film announced

More Articles
Follows