தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
இதனால் தொழிற்சாலைகள், கடைகள் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
வீட்டுக்குள்ளேயே மக்கள் முடங்கியிருப்பதால் வருமானத்துக்கு வழியின்றி தவிக்கின்றனர்.
ஆனால் ஐ.டி துறை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் ஊழியர்களை வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதித்துள்ளனர்.
கணவன் மனைவி 24 மணி நேரமும் வீட்டிலேயே இருப்பதால் குடும்ப வன்முறை அதிகரித்திருப்பதாக ஒருபுறம் கூறப்பட்டாலும் மற்றொரு புறத்தில்…. தாம்பத்ய உறவு மற்றும் கருத்தடைகளும் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.
கணவன் மனைவி வீட்டிலேயே இருப்பதால் தம்பதிகளுக்கு இடையில் தாம்பத்திய உறவும் அதிகரித்துள்ளது. மற்றொரு புறம் ஆணுறையின் விற்பனையும் அதிகரித்துள்ளதாம்.
பொதுவாக மருத்துவமனைக்கு, ஆண்கள், பெண்கள், கருக்கலைப்பு மாத்திரை கேட்பவர்கள் மிக அரிது.
ஆனால், இந்த ஊரடங்கில் சராசரியாக தினமும் நான்கு முதல், ஐந்து பேர் கருக்கலைப்பு மாத்திரைகளை கேட்டு வருகிறார்களாம்.
நிறைய மருந்தகங்களில், கருக்கலைப்பு மாத்திரைகள் விற்று தீர்ந்துவிட்டன. அதற்கும், தற்போது தேவை அதிகரித்துள்ளது என தெரிய வந்துள்ளது.
Abortion pills demand in Corona lock down days