தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமாசென் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’.
2010-ம் ஆண்டில் ரிலீசான இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
அந்த சமயத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
ஆனால் சினிமா விரும்பிகளிடம் ஆயிரத்தில் ஒருவன் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனால் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பாகம் இரண்டு எப்போது என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிவந்தனர்.
இந்தநிலையில், செல்வராகவன் ஆயிரத்தில் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.
செல்வராகவனின் ட்விட்டர் பதிவில், ‘இது வரை கேட்டிருந்த, காத்திருந்த என் அன்பு உள்ளங்களுக்கு இதோ உங்கள் முன்னால்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதில் கார்த்தி நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக ஹீரோவாக தனுஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது.
தயாரிப்பு, இசை மற்ற நடிகர்கள் குறித்த எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.
இப்படம் 2024-ல் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.