தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்று ஜனவரி 17ஆம் தேதி 105வது நாட்களை அதாவது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
தற்போது ஆரி, ரியோ, பாலாஜி, சோம், ரம்யா ஆகிய 5 பேர் ஃபைனலிஸ்ட்டாக பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளனர்.
இன்று வெகு விமரிசையாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நடைபெற்று வருகிறது.
அதன்படி ஆரி அர்ஜூனன் தான் அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.
இந்த ஐவரில் 5வது இடம் பெற்றார் சோம் சேகர்.
எனவே முதலில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரை கடந்த முறை வின்னரான முகின் வீட்டிற்குள் சென்று அழைத்து வந்தார்.
அடுத்ததாக 4வது இடம் பிடித்த ரம்யா பாண்டியன் வெளியேறினார்.
அவரை பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று அழைத்து வந்தார் கவின்.
இதன்பின் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவர் நடிகை ஷெரின்.
இவர் 3வது இடம் பெற்ற ரியோவை, (ரன்னர்2) பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியேற்றினார்.
அதிக ஓட்டுக்கள் பெற்ற ஆரியை, ‘பிக்பாஸ் சீசன் 4’ டைட்டில் வின்னராக கமல்ஹாசன் அறிவித்தார். அவருக்கு 16 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் கிடைத்துள்ளது என அறிவித்தனர்.
ஆரிக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
இந்த போட்டியாளர்களில் கண்ணியமாகவும் நேர்மையாகவும் விளையாடியவர் ஆரி தான் என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதன் பின்னர் பாலாஜிக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. அவருக்கு 6 கோடியே 16 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் கிடைத்தன.
மேலும் பிக்பாஸ் பைனல் போட்டியாளர்களுக்கு தன் சார்பாக கிப்ஃட் கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.
அதன் விவரம்….
KamalHaasan gives gifts to finalists
To Rio – Tent
To Bala – dumbbell
To Ramya – Organic seeds
To Aari – Pen & diary
To Som – Cojon (Drum)
Aari Arjunan won Bigg Boss Season 4 Title Winner