பிக்பாஸ் சீசன் 4 வின்னர் ஆரி..; பரிசு தொகை எவ்வளவு? ரன்னர்கள் யார்.? கமல் கொடுத்த கிப்ஃட் என்ன.?

பிக்பாஸ் சீசன் 4 வின்னர் ஆரி..; பரிசு தொகை எவ்வளவு? ரன்னர்கள் யார்.? கமல் கொடுத்த கிப்ஃட் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்று ஜனவரி 17ஆம் தேதி 105வது நாட்களை அதாவது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தற்போது ஆரி, ரியோ, பாலாஜி, சோம், ரம்யா ஆகிய 5 பேர் ஃபைனலிஸ்ட்டாக பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளனர்.

இன்று வெகு விமரிசையாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நடைபெற்று வருகிறது.

அதன்படி ஆரி அர்ஜூனன் தான் அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.

இந்த ஐவரில் 5வது இடம் பெற்றார் சோம் சேகர்.

எனவே முதலில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரை கடந்த முறை வின்னரான முகின் வீட்டிற்குள் சென்று அழைத்து வந்தார்.

அடுத்ததாக 4வது இடம் பிடித்த ரம்யா பாண்டியன் வெளியேறினார்.

அவரை பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று அழைத்து வந்தார் கவின்.

இதன்பின் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவர் நடிகை ஷெரின்.

இவர் 3வது இடம் பெற்ற ரியோவை, (ரன்னர்2) பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியேற்றினார்.

அதிக ஓட்டுக்கள் பெற்ற ஆரியை, ‘பிக்பாஸ் சீசன் 4’ டைட்டில் வின்னராக கமல்ஹாசன் அறிவித்தார். அவருக்கு 16 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் கிடைத்துள்ளது என அறிவித்தனர்.

ஆரிக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இந்த போட்டியாளர்களில் கண்ணியமாகவும் நேர்மையாகவும் விளையாடியவர் ஆரி தான் என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதன் பின்னர் பாலாஜிக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. அவருக்கு 6 கோடியே 16 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் கிடைத்தன.

மேலும் பிக்பாஸ் பைனல் போட்டியாளர்களுக்கு தன் சார்பாக கிப்ஃட் கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.

அதன் விவரம்….

KamalHaasan gives gifts to finalists

To Rio – Tent
To Bala – dumbbell
To Ramya – Organic seeds
To Aari – Pen & diary
To Som – Cojon (Drum)

Aari Arjunan won Bigg Boss Season 4 Title Winner

மீண்டும் சர்ஜரி.. ரெஸ்ட் தேவை..; புதிய விசையுடன் தொடர்வேன்… – கமல்ஹாசன்

மீண்டும் சர்ஜரி.. ரெஸ்ட் தேவை..; புதிய விசையுடன் தொடர்வேன்… – கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காலில் சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், சில நாட்களுக்கு ஓய்வு தேவை என கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான கமல்ஹாசன் அறிக்கையில்…

“தமிழகத்தை தலை நிமிரச் செய்த ‘சீரமைப்போம் தமிழகத்தை’ எனும் முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தைப் பூர்த்தி செய்திருக்கிறேன்.

ஐந்து பாகங்களாக ஐந்தாயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்து தமிழ் மக்களைச் சந்தித்திருக்கிறேன்.

மாற்றத்துக்கான மக்கள் எழுச்சியைக் கண்ணாரக் கண்டு திரும்பியிருக்கிறேன். அதுபோலவே கொரோனா பொது முடக்கத்தின்போது தொடங்கிய ‘பிக்பாஸ் – சீசன் 4’ தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் வெற்றிகரமாக முடித்திருக்கிறேன்.

இதுவும் மக்களுடனான பயணம்தான். நான்கரை கோடி தமிழர்களோடு வாராவாரம் உரையாடியதும் உறவாடியதும் மகிழ்ச்சியூட்டுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் காலில் ஓர் அறுவைச் சிகிச்சை செய்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக இன்னொரு சர்ஜரி செய்ய வேண்டி இருந்தது.

அதுவரை ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தார்கள். அதை மீறித்தான் சினிமா வேலைகளும் அரசியல் வேலைகளும் தொடர்ந்தன. பிரச்சாரத்தைத் தொடங்கும்போதே காலில் நல்ல வலி இருந்தது. அதற்கு மக்களின் அன்பே மருந்தாக அமைந்தது.

இப்போது சிறிய ஓய்வு கிடைத்திருக்கிறது. ஆகவே, காலில் ஒரு சிறு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறேன். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் என் பணிகளைப் புதிய விசையுடன் தொடர்வேன்.

மக்களை நேரில் சந்திக்க இயலாது எனும் மனக்குறையைத் தொழில் நுட்பத்தின் வாயிலாகப் போக்கிக்கொள்ளலாம்.

இந்த மருத்துவ விடுப்பில் உங்களோடு இணையம் வழியாகவும் வீடியோக்கள் வழியாகவும் பேசுவேன்.

மாற்றத்துக்கான நம் உரையாடல் இடையூறின்றி நிகழும். எண் மண்ணுக்கும் மொழிக்கும் மக்களுக்கும் சிறு துன்பம் என்றாலும் என் குரல் எங்கும் எப்போதும் எதிரொலித்தபடிதான் இருக்கும். இப்போதும் இது தொடரும்.” என அறிக்கையில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Kamalhassan statement about his health and surgery

திமுக-வில் இணையும் ரஜினி மக்கள் மன்றத்தினர்..; விரக்தியால் விலகல்.? சரியும் ரஜினி சாம்ராஜ்யம்..?

திமுக-வில் இணையும் ரஜினி மக்கள் மன்றத்தினர்..; விரக்தியால் விலகல்.? சரியும் ரஜினி சாம்ராஜ்யம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

25 ஆண்டுகளாக பல யூகங்கள் வந்தாலும் 2017 டிசம்பர் 31ல் தான் தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் ரஜினிகாந்த்.

2020 ஆண்டுகளில் அரசியல் அறிக்கைகள் வெளியிட்டு பரபரப்பை உருவாக்கினார் ரஜினி.

கட்சிப் பணிகளையும் மும்முரமாக தொடங்கினார்.

ஆனால் கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் தேதி தன் உடல்நிலை காரணத்தால் அரசியலில் இருந்து பின்வாங்குவதாக அறிவித்தார்.

இதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என ரஜினி மக்கள் மன்றத்தினர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

ஆனால் ரஜினி தனது முடிவை மாற்றுவதாக அறிக்கை வெளியிட்டார்.

இது போன்று போராட்டங்களை நடத்தி, தன்னை வேதனைக்குள்ளாக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார் ரஜினி.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அவருடன் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் செந்தில், தேனி மாவட்ட செயலாளர் ஆர்.கணேசன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.

இவர்கள் அனைவரும் 25 ஆண்டுகளுக்கு மேலாக ரஜினி ரசிகர் மன்றம் & மக்கள் மன்றத்தில் இருந்தவர்கள்.

மேலும் ரஜினியின் அரசியல் பிரவேசத்திலும் உடனிருந்தவர்களாம்.

இவர்களை தொடர்ந்து நிறைய பேர் திமுகவில் இணையவிருக்கிறார்கள் என கூறப்படுகிறது.

Rajini Makkal Mandram members joining in DMK party

ஜூனியர் எம்.ஜி.ஆரின் ‘கேங்ஸ்டர் 21’.. ஆதரவு கொடுத்து வாழ்த்திய கமல்ஹாசன்

ஜூனியர் எம்.ஜி.ஆரின் ‘கேங்ஸ்டர் 21’.. ஆதரவு கொடுத்து வாழ்த்திய கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று ஜனவரி 17ஆம் தேதி எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு ஜூனியர் எம்.ஜி.ஆர் வி. இராமச்சந்திரன் நடிக்கும் ‘கேங்ஸ்டர் 21’ படப்பிடிப்பை உலகநாயகன் கமல்ஹாசன் என்று கிளாப் அடித்துத் தொடங்கி வைத்தார்.

இந்தப் படத்தை ‘அட்டு ‘படத்தை இயக்கிய ரத்தன்லிங்கா இயக்குகிறார்.

A.D.R புரொடக்சன்ஸ் சார்பில் எம்.என். வீரப்பன் தயாரிக்கிறார்.

எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி எம்ஜிஆர் வாழ்ந்த இல்லம் இருக்கும் ராமாவரம் தோட்டத்திற்கு வருகைதந்த உலக நாயகன் கமல்ஹாசன், அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்’ கேங்ஸ்டர் 21′ படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார் .

அதுமட்டுமல்ல இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் அவர் வெளியிட்டார்.

ஜூனியர் எம்ஜிஆர் வி. இராமச்சந்திரன் நடிக்கும் இப்படத்தை உலகநாயகன் தொடங்கி வைத்தது குறித்து பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது படக்குழு.

இப்படம் சென்னையில் நிழல் உலக தாதாவாக இருந்த ஒருவரின் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது.

இதற்கு ஒளிப்பதிவு – பாலாஜி,இசை – விக்ரம், ஸ்டண்ட் -ஸ்டன்னர் சாம், ஆர்ட் – ஆனந்த் என்று இதில் இணைந்துள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஏற்கெனவே சில படங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்கள்.

திறமையுள்ள இளைஞர்களின் கூட்டு முயற்சியில் இப்படம் உருவாகிறது.

Kamalhassan launch Junior MGRs movie Gangster 21 at Chennai

பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மன்னிப்பு கேட்டார்

பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மன்னிப்பு கேட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று ஜனவரி 16ஆம் தேதி நடிகர் விஜய்சேதுபதி தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இதனை முன்னிட்டு பிறந்த நாள் கேக்கை பட்டாக் கத்தி வைத்து வெட்டி கொண்டாடினார்.

இது விவாதப் பொருளானது.. தற்போது இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மன்னிப்பு கேட்டுள்ளார் விஜய்சேதுபதி.

அதில்…
வணக்கம்,

எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி.

இதனை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

அதில் பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன்.

தற்போது பொன் ராம் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன்.

அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன்.

இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.

நன்றி
விஜய் சேதுபதி

Vijay Sethupathi apology for using a machete to cut birthday cake

இளையராஜா இசையில் உருவாகும் ‘தேசிய தலைவர்’… காட்சிகளை லீக்காக்கிய எடிட்டரை நீக்கிய படக்குழு

இளையராஜா இசையில் உருவாகும் ‘தேசிய தலைவர்’… காட்சிகளை லீக்காக்கிய எடிட்டரை நீக்கிய படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது.

ட்ரென்ட்ஸ் சினிமாஸ் மற்றும் எம்டி சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில், இந்தப்படத்தை ஜெ.எம்.பஷீர் மற்றும் ஏ.எம்.சௌத்ரி இணைந்து தயாரிக்கின்றனர்.

‘ஊமை விழிகள்’ புகழ் அரவிந்தராஜ் இந்த படத்தை இயக்குகிறார். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கான டீசரை பொங்கல் அன்று வெளியிட படக்குழு திட்ட மிட்டிருந்தது. அதற்குள் படத்தின் டீஸர் சோசியல் மீடியாவில் நேற்று லீக் ஆனது.

உடனடியாக காலத்தில் இறங்கிய படக்குழு, இதற்கு காரணம் படத்தின் எடிட்டர் தான் கண்டுபிடித்து அவரை படத்தில் இருந்து நீக்கி விட்டது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் மாஸ்டர் படத்தின் சில காட்சிகள் லீக் ஆகி சோசியல் மீடியாவில் வைரல் ஆனது.

மாஸ்டர் பட விவகாரத்திலும், படத்தை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக சோனி டிஜிட்டல் நிறுவனத்தில் பணிபுரியும் நபர் திருட்டுத்தனமாக படத்தை பதிவு செய்து கசிய விட்டது பின்னர் தெரிய வந்தது.

Desiya Thalaivar movie scenes leaked by Editor

More Articles
Follows