தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா ஊரடங்கால் கடந்த 2021ல் சில மாதங்கள் திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தன.
பின்னர் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதையடுத்து திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறக்க அனுமதியளித்தது தமிழக அரசு.
இதனால் 2022 பொங்கலுக்கு ரிலீசாகவிருந்த அஜித்தின் வலிமை படம் தள்ளிப்போனது.
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து இன்று சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
தமிழ்நாட்டில் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி என அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் திரையுலகினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முக்கியமாக பெரிய பட்ஜெட் படங்கள் இந்த அறிவிப்பால் நல்ல லாபத்தை பெற வாய்ப்புள்ளது.
அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படம் பிப்ரவரி 24ஆம் தேதியும் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி என்ற அறிவிப்பால் முதல் அதிர்ஷ்டம் அஜித் சூர்யா படங்களுக்கு கிடைத்துள்ளது எனலாம்.
100% occupancy allowed for theatres in Tamil Nadu