தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய தலைநகர் டெல்லியில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மல்டி ப்ளக்ஸ் காம்பக்ஸ், பேங்க் மற்றும் தியேட்டர்கள் ஆகியவை இனி 24 மணி நேரம் இயங்க வேணடும் என்றி விவாதம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்ட இந்த விவகாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த புதிய சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.தொழிலாளர் துறை அமைச்சகத்தின் சார்பில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த 24 மணி நேரம் இயங்கும் நிறுவனங்களால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் இரவு நேரங்களில் பணிபுரிய வழிவகைகள் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்திற்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லை என்பதால், இச்சட்டம் உடனடியாக அமலுக்கு வரவிருக்கிறது. இச்சட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.