தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் எப்படியோ அப்படி ஆந்திராவில் அம்மாநில மக்களின் தெய்வமாக திகழ்ந்தவர் என்டி ராமராவ். (சுருக்கமாக என்டிஆர்)
அதுபோல் சினிமாவில் இருந்து எம்ஜிஆர் எப்படி அரசியலுக்கு வந்து முதல்வர் ஆனாரோ அதுபோல் என்டிஆரும் சினிமாவில் சாதித்து ஆந்திர அரசியலுக்கு வந்து முதல்வரானார்.
எம்ஜிஆர் அதிமுக என்ற கட்சியை உருவாக்கியது போல தெலுங்கு தேசம் என்ற கட்சியை உருவாக்கி ஆந்திரா அரசியலில் போட்டியிட்டார்.
மக்களின் அமோக ஆதரவுடன் ஆந்திராவின் முதல்வராகப் பதவி வகித்து இருக்கிறார். அவரது மறைவுக்குப் பிறகு அவரது மருமகன் சந்திரபாபு நாயுடு கட்சி தலைவராகி இரண்டு முறை ஆந்திரா முதல்வராக பதவி வகித்துள்ளார்.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு செய்யாத ஒன்றை தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி செய்துள்ளார்.
ஆந்திராவில் உருவாக உள்ள 13 புதிய மாவட்டங்களுக்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே உள்ள 13 மாவட்டங்களுடன் சேர்த்து தற்போது 13 + 13 = 26 மாவட்டங்கள் ஆந்திராவில் வரவுள்ளது.
இதில் கிருஷ்ணா மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, என்டிஆர் மாவட்டம் என புதிய மாவட்டத்தை உருவாக்குவதாக அறிவித்துள்ளார்.
என்டிஆர் மாவட்டத்தின் தலைநகராக விஜயவாடா நகரமும் கிருஷ்ணா மாவட்டத்தின் தலைவராக மசூலிப்பட்டிணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு எம்பி தொகுதிகளையும் (பாராளுமன்றத் தொகுதி) ஒரு மாவட்டமாக உருவாக்க வேண்டும் என ஜெகன் மோகன் ரெட்டி திட்டம் வைத்திருந்தார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
Andhra Pradesh govt creates 13 new districts including NTR District