கமல் கதையில் விக்ரம் பகத்பாசில் விஜய்சேதுபதி மெகா கூட்டணி

கமல் கதையில் விக்ரம் பகத்பாசில் விஜய்சேதுபதி மெகா கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2016ம் ஆண்டில் தான் டேக் ஃஆப் என்ற மலையாள படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மகேஷ் நாராயணன்.

இதன்பின்னர் சி யூ சூன் படத்தை இயக்கி அனைவரையும் கவர்ந்தார்.

பஹத் பாசில் நடிப்பில் வெளியாகியுள்ள மாலிக் என்ற படத்தை இயக்கியிருந்தார் மகேஷ் நாராயணன்.

கமல் இளையராஜா மணிரத்னம் கூட்டணியில் உருவான ‘நாயகன்’ படம் தான் மாலிக் படத்திற்கு இன்ஸபிரேஷனாக எனவும் தெரிவித்து இருந்தார் மகேஷ்.

மேலும் கமல்ஹாசன் நடித்து இயக்கிய ‘விஸ்வரூபம்’ படத்திலும் பணியாற்றி இருக்கிறார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் எழுதியுள்ள புதிய கதையை மகேஷ் நாராயணன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதில விக்ரம் பகத்பாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
சிறப்புத் தோற்றத்தில் கமல்ஹாசனும் நடிக்கிறாராம். ஏஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Vikram Fahad Fazhil and Vijay Sethupathi team up with Kamalhassan

தளபதி 67 பட அப்டேட் : மாஸ்டர் டைரக்டர்.. மாஸான புரொடியூசர்!

தளபதி 67 பட அப்டேட் : மாஸ்டர் டைரக்டர்.. மாஸான புரொடியூசர்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘டாக்டர்’ படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய்.

அனிருத் இசையமைக்க இந்த படத்தை சன் பிக்ச்ர்ஸ் தயாரித்து வருகிறது.

தற்போது சென்னையில் படப்பிடிப்பை நடத்தி வரும் இந்த படக்குழுவினர் விரைவில் ஜார்ஜியா பறக்கவுள்ளனர்.

இந்த படத்திற்கு பிறகு விஜய் நடிக்கவுள்ள அவரது 66வது படத்தி தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்க தில்ராஜூ தயாரிக்கிறார். அந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் விஜய்யின் 67ஆவது படத்தை மாஸ்டர் பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகவும், துப்பாக்கி, தெறி, கபாலி, அசுரன் ஆகிய படங்களை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

மாஸ்டர் இயக்குனர் பிரம்மாண்ட தயாரிப்பாளருடன் மாஸான நடிகர் விஜய் இணைந்தால் படத்தின் எதிர்பார்ப்பு வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கலாம் தானே…

Vijay 67 team up with Lokesh and Kalaipuli Thanu

விஜய்சேதுபதி ஆர்யா வரிசையில் ஜெய்..; மீண்டும் சுந்தர் சியுடன் கூட்டணி

விஜய்சேதுபதி ஆர்யா வரிசையில் ஜெய்..; மீண்டும் சுந்தர் சியுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் சுந்தர்.சி.யிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பத்ரி என்பவர் ‘ஐந்தாம் படை’, ‘வீராப்பு’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்த இரண்டிலும் சுந்தர் நாயகனாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது இதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

பத்ரியின் அடுத்த படத்திற்கு ‘பட்டாம்பூச்சி’ என்று பெயரிட சுந்தர்.சி நாயகனாக நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ஹனி ரோஷ் நடிக்க இந்த படத்தில் வில்லனாக ஜெய் நடிக்கிறார்.

சுந்தர் சி இயக்கிய கலகலப்பு 2 படத்தில் ஜெய் நாயகனாக நடித்திருத்தார்.

இந்த பட்டாம் பூச்சி படத்தில் போலீசாக சுந்தர்.சி.யும், கொலைகார சைக்கோவாக ஜெய்யும் நடிக்கின்றனர்.

அண்மைகாலமாக முன்னணி நாயகர்களே வில்லனாக நடிக்க தொடங்கியுள்ளனர். பேட்ட, மாஸ்டர் படங்களில் விஜய்சேதுபதி வில்லனாகவும், எனிமி படத்தில் ஆர்யா வில்லனாகவும் நடித்திருந்தனர்.

ஒரு ஸ்டைலிஷ் வில்லன வேண்டும் என்பதாலும் சுந்தர்.சி. கேட்டுக் கொண்டதாலும் ஜெய் இந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

Jai to portray an antagonist in Sundar Cs next

வடிவேலுடன் இணைய ரெடியான ‘அண்ணாத்த-டாக்டர்’ பட நடிகர்

வடிவேலுடன் இணைய ரெடியான ‘அண்ணாத்த-டாக்டர்’ பட நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தலைநகரம் படத்தில் வடிவேலு நடித்த நாய் சேகர் கேரக்டர் பெரியளவில் பேசப்பட்டது.

தற்போது நாய் சேகர் என்ற படத்தில் நாயகனாக சதீஷ் நடித்து வருகிறார்.

அதே படப்பெயரில் சுராஜ் இயக்கத்தில் வடிவேலுவும் நாயகனாக நடிக்க ஒரு புதிய படம் தயாராகி வருகிறது.

நாய் சேகர் படத்தலைப்பு பிரச்சினையானதால் வடிவேலு படத்திற்கு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என டைட்டில் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் வடிவேலு உடன் முக்கிய கேரக்டரில் தற்போது காமெடியில் கலக்கி வரும் ரெடின் கிங்ஸ்லி நடிக்கவுள்ளார்.

அண்மையில் வெளியான அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் மற்றும் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருத்தார் ரெடின் கிங்ஸ்லி. தற்போது வரையில் இவரது கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளதாம்.

மேற்கண்ட படங்களில் ரெடின் கிங்ஸ்லி நடிப்பை பார்த்து அவரை தனது அலுவலகத்துக்கு அழைத்து பாராட்டினாராம் வடிவேலு என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Redin Kingsley team up with Vadivelu for Naai Sekar Returns

சென்னை வெள்ளம்.: அரசு மீது தவறு இல்லைன்னு சொல்லல அரசு மீதும் தான் தவறு.. – கமல்ஹாசன்

சென்னை வெள்ளம்.: அரசு மீது தவறு இல்லைன்னு சொல்லல அரசு மீதும் தான் தவறு.. – கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இரவு முழுவதும் பலத்த பெய்தது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை ரெட் அலர்ட் விடப்பட்டது.

ஆனால் கடந்த 24 மணி நேரமாக சென்னையில் மழை இல்லை. எனவே நேற்று இரவே ரெட் அலர்ட் திரும்ப பெறப்பட்டது.

தொடர் கனமழை காரணமாக சென்னை பகுதிகள் சாலையில் மூழ்கியுள்ளன. வீடு மற்றும் தெருக்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

முதல்வர் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களும் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனும் வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.

அவர் சென்னை தரமணியில், அரிசி, பருப்பு, ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொருட்களைப் பொதுமக்களுக்கு வழங்கினார்.

அப்போது செய்தியாளர் சந்திப்பில் கமல்ஹாசன் பேசியதாவது…

“பருவமழை என்பது ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான நிகழ்வாகும். ஆனால் பருவமழையைப் பேரிடராக மாற்றியது நம்முடைய கவனக் குறைவே.

அதற்காக அரசு மீது தவறு இல்லை என்று நான் கூறவில்லை. அரசு மீதும் தவறு உள்ளது.

அரசு மீது தவறு இல்லாமல் இந்தளவு பாதிப்பு ஏற்பட்டு இருக்காது. ஆனால், தனி மனிதர்களுக்கும் பொறுப்புள்ளது. இந்த பாதிப்பில் ஒவ்வொருவரும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.

நீர் நிலைகளை ஆக்கிரமித்தலைக் குற்றமாகக் கருதி நாமும் அதைச் செய்யாமலிருக்க வேண்டும்.

மக்கள் சேவை செய்யும் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றி” என கமல்ஹாசன் தெரிவித்தார்.

Kamal Haasan views on chennai floods

ராஜராஜசோழன் பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு.; இயக்குநர் ரஞ்சித் மீதான வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு

ராஜராஜசோழன் பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு.; இயக்குநர் ரஞ்சித் மீதான வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் பா.ரஞ்சித், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

“நீலப் புலிகள் அமைப்பு சார்பில் 2019 ஜூன் 5-ல் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேரரசர் ராஜராஜசோழன் வரலாறு தொடர்பாக சில தகவல்களைக் குறிப்பிட்டேன்.

அதில் டெல்டா பகுதிகளில் நிலமற்ற மக்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து உமர் ஃபாரூக் எழுதிய, ’செந்தமிழ் நாட்டுச் சேரிகள்’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருந்ததை தான் நான் தெரிவித்தேன்.

பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல்களையே நான் பொதுக் கூட்டத்தில் பேசினேன். நான் பேசிய தகவல்களை பலரும் பேசியுள்ளனர்.

ஆனால், எனது பேச்சு மட்டும் சமூக வலைதளங்களில் தவறாகப் பரப்பப்பட்டது. நான் எந்த உள்நோக்கத்துடனும் பேசவில்லை.

எனது பேச்சு எந்த சமூகத்திற்கு எதிராகவும் இல்லை. எனவே என் மீது திருப்பனந்தாள் போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.’’

இவ்வாறு ரஞ்சித் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ரஞ்சித் மீதான வழக்கின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

பின்னர் வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Madras HC quashes case against Pa Ranjith in Raja Raja Chozhan row

More Articles
Follows