தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தை முடித்துவிட்டு சிவா இயக்கவிருந்த அடுத்த படத்தில் நடிக்க காத்திருந்தார் சூர்யா.
இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளதாக அறிவிப்பும் வெளியானது.
ஆனால் ரஜினியின் அண்ணாத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் சிவா. இதனால் சூர்யாவும் .. “ரஜினி சார் படத்தை முடித்துவிட்டு வாருங்கள் காத்திருக்கிறேன்” என தெரிவித்தார்.
தற்போது நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டியும் ரஜினியின் அண்ணாத்த படம் வசூல் வேட்டையாடி வருவதால் சிவா தரப்பினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
இதனையடுத்து விஜய் நடிக்கவுள்ள படத்தை சிவா இயக்குவார் என தகவல்கள் பறந்தன. (நம் தளத்தில் அப்படியொரு செய்தி பதிவிடவில்லை)
இந்த நிலையில் ஏற்கெனவே சூர்யாவிடம் சொல்லி ஒப்புதல் பெற்ற படத்தை தற்போது இயக்கவுள்ளாராம் சிவா.
இந்த படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம் என தெரிய வந்துள்ளது.
ஏற்கெனவே பேரழகன், வேல், மாற்றான், வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் சூர்யா.
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை இன்றோடு முடித்துக் கொடுத்துவிட்டார் சூர்யா என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
Suriya joins with Annaatthe director ?