தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று செப்டம்பர் 15 ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அனைத்து கடைகளும் வணிக நிறுவனங்களும் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி
இதேபோல் மதுக்கடைகள் மொத்தம் மற்றும் சில்லறை இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி
உணவகங்கள் மற்றும் மது அருந்தும் வசதியுடன் கூடிய உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
மேலும் கடற்கரை சாலைகள் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்
இரவு 9 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் கூடுதல் தளர்வுகளை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Lockdown extenstion in Pondy and Karaikkal