தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த மாதம் ஏப்ரல் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் திமுக மட்டும் 173 தொகுதிகளில் நேரடியாக களம் கண்டது.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.
உதயநிதி ஸ்டாலினுக்கு திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி ஒதுக்கப்பட்டது. இவர் முதன்முறையாக போட்டியிட்டார்.
சென்னையில் இருக்கும் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் 69,000-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் உதயநிதி.
தேர்தல் பிரசாரத்தின் போது.. ” 3 ஆண்டுகளுக்கு முன் அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டிக் கொடுத்தார்கள். (கிண்டலடித்தார்) உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? என்ற கேள்வியுடன் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கலோடு சென்றார் உதயநிதி.
(இதனால் எய்ம்ஸ் மருத்துவமனை செங்கலை திருடியதாக பாஜகவினர் உதயநிதி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர் என்பது வேறு கதை.)
தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக உள்ள நிலையில் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கலை திமுக தலைவரிடம் வழங்கினார் உதயநிதி.
அத்துடன் தமிழகம் திமுகவுடன் இருப்பதாகவும் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் உதயநிதி.
Udhayanidhi became first time MLA He won in Chepauk Thiruvallikeni Constituency