தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’.
இமான் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்க தயாரித்து வருகிறது.
இதில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 4 பேர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
பிரகாஷ்ராஜ், சூரி. சதீஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.
‘அண்ணாத்த’ 2021 தீபாவளியில் திரைக்கு வருகிறது.
2020 கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஐதராபாத்தில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது.
அப்போது படக்குழுவை சேர்ந்த 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இதனால் படப்பிடிப்பை நிறுத்தினர்.
ரஜினிக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.
இருந்த போதிலும் சில நாட்கள் ஐதராபாத்தில் தனிமைப்படுத்திக் கொண்டார் ரஜினி.
பின்னர் ரத்த அழுத்த பிரச்சினை காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார் ரஜினி.
தன் உடல் நிலையை கருதி அரசியலுக்கு வரவில்லை என திடீரென அறிவித்தார்.
“அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்துவிட்டு நாலு பேர் நாலு விதமாக பேசுவார்கள் என்பதற்காக கொரோனா காலத்தில் என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க மாட்டேன்.” என 3 பக்க அறிக்கை (2020 டிசம்பர் 29) விட்டு அமைதியானார்.
ரஜினி அரசியலுக்கு அழைத்து சில ரசிகர்கள் தற்கொலைக்கு முயன்றனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
இதனால் ரஜினி ரசிகர்கள் அப்செட்டில் இருந்தனர். ஆனாலும் உடல்நிலை கருதி இனி தலைவர் ஓய்வெடுக்கட்டும் என தெரிவித்தனர்.
அடுத்த தலைமுறைக்காக… நாளைய தமிழகத்துக்காக… தலைவரின் நலனுக்காக பல ஆண்டுகளாக உதவி செய்து வந்தவர்கள் (ரஜினி் மக்கள் மன்ற) நற்பணிகளை விட்டு சிலர் வேறு கட்சிகளுக்கு தாவினர்.
ஆனாலும் சிலர் தொடர்ந்து நற்பணிகளை செய்து வருகின்றனர்.
ரஜினி ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தாலும் ரஜினி குடும்பத்தார் 2021 நியூ இயர் கொண்டாட்டங்களில் ஈடுப்பட்டனர். அப்போதே இதனால் சலசலப்பு ஏற்ப்பட்டது.
இந்த நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது.
30 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதில் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ரஜினி மற்றும் இயக்குனர் சிவா நிற்கும் ஒரு போட்டோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
இந்த போட்டோ ஒரு பக்கம் வைரனாலும் “அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்துவிட்டு நாலு பேர் நாலு விதமாக பேசுவார்கள் என்பதற்காக கொரோனா காலத்தில் என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க மாட்டேன்” என சொன்ன ரஜினிகாந்த் தற்போது கொரோனா 2வது அலை உச்சத்தில் இருக்கும்போது இப்படி செய்யலாமா? என கேள்வி கேட்கின்றனர்.
தலைவரின் நலமே எங்கள் உயிர் என நாங்கள் நினைக்கும்போது ‘ரஜினி இப்படி செய்வது சரியா?
அண்ணாத்த படமும் அவரை நம்பித்தானே எடுக்கப்படுகிறது. அவரை நம்பிதானே மற்ற கலைஞர்களும் நடிக்க வருகின்றனர்.
ஏற்கெனவே ஒரு முறை கொரோனாவினால் நிறுத்தப்பட்ட சூட்டிங்கை இப்போது மட்டும் தொடர என்ன காரணம்.? என பல்வேறு கேள்விகளை வீசி வருகின்றனர்.
எவ்வளவு பலத்த பாதுகாப்பு போடப்பட்டாலும் கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.
ரஜினிக்கு ஏதாவது உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டால் ரஜினி குடும்பத்தாரும் சன் பிக்சர்ஸும் பொறுப்பு ஏற்குமா? எனவும் கேட்கின்றனர்.
அவர்கள் கேள்வியிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது தலைவா…!
Annatthe shooting but Rajinis fans upset with his decision