தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை செல்லவுள்ளதாக தமிழக பாஜக தலைவர் முருகன் அறிவித்திருந்தார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணத்தால் பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
ஆனாலும் தடையை திட்டமிட்டபடி இன்று திருத்தணியில் வேல் யாத்திரை தொடங்கப்படும் என பாரதிய ஜனதா கட்சி அறிவித்திருந்தது.
இந்நிலையில் காலை 9 மணிக்கு சென்னையில் உள்ள இல்லத்தில் இருந்து வேலுடன் எல்.முருகன் திருத்தணி நோக்கி புறப்பட்டார்.
யாத்திரைக்காக வடிவமைக்கப்பட்ட வண்டியில் சென்ற அவருடன் எச்.ராஜா, அண்ணாமலை, கருநாகராஜன் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.
தொடர்ந்து அங்கிருந்து செங்குன்றம் புழல் வழியாக வெற்றிவேல் யாத்திரை மேற்கொண்டு அறுபடைவீடுகளில் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்த நிலையில், பாஜக தலைவர் முருகன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருத்தணியில் யாத்திரை நடத்திய பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பாஜக வினரை கைது செய்த போலீசார் அவர்களை ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
அப்போது அங்கு மின்சாரம் இன்றி இருந்ததால் ஆத்திரமடைந்த பாஜகவினர் கண்டன கோஷம் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனின் சட்டையை பிடித்து தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பரபரப்பு ஏற்படவே அண்மையில் பாஜக.வில் இணைந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கட்சியினரை சமரசம் செய்தார்.
இதனை தொடர்ந்து தமிழக அரசின் தடையை மீறி வேல் யாத்திரை சென்ற வந்த பாஜகவினர் மீதுவழக்குப்பதிவு செய்துள்ளனர்
Defying TN Govts order TN BJP launches Vel Yatra today