தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழக கல்லூரிகளில் அரியர் தேர்வுகளும் கட்டணம் செலுத்தி இருந்தாலோ அரியர் மாணவர்கள் தேர்ச்சி அடையச்செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கு மாணவர்களிடையே பலத்த வரவேற்பு உருவானது. பொதுமக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது மதிப்பெண் வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்தள்ளது.
பல அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சிக்கான மதிப்பெண் வரவில்லையாம்.
அதாவது முந்தைய செமஸ்டர்களில் மாணவர்கள் பெற்ற எக்ஸ்டர்னல் (External) மற்றும் இண்டர்னல் (Internal) மதிப்பெண்கள் தேர்ச்சி வழங்கக்கூடிய அளவில் இல்லாததால் பாஸ் மார்க் வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.
முந்தைய செமஸ்டர் மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்ச்சி வழங்க வேண்டும் என்பது யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ-யின் வழிகாட்டுதல் ஆகும்.