தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடவுளின் சொந்த தேசம் என்றழைக்கப்படும் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.
ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும்.
இன்று 6வது நாள். வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
இந்த நிலையில் ஓணத்தை முன்னிட்டு கேரளாவில், மதுபான விற்பனை நிலையங்களின் நேரம் இன்று முதல் வருகிற 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் மது விற்பனை அதிகமாக இருக்கும் என்பதால், கூட்டத்தை ஒழுங்கப்படுத்தவும் மதுபிரியர்களுக்காக விற்பனை நிலையங்கள் மற்றும் பார்கள் இயங்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து காலை 11 மணி முதல் ஐந்து மணி வரை இயங்கி வந்த மதுபான விற்பனை நிலையங்கள், நேற்று முதல் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.