தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கைலாசா என்ற ஒரு நாட்டையே உருவாக்கி அங்கிருந்து பல வீடியோக்களை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
கைலாசா கரன்சி, கைலாசா பாஸ்போர்ட், கைலாசா பேங்க் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில்… சாமியார் நித்யானந்தாவின் கைலாசா நாட்டில் உணவகம் வைக்க அனுமதி கோரி மதுரையிலுள்ள டெம்பிள்சிட்டி ஹோட்டல் அதிபர் குமார் என்பவர் கடிதம் எழுதி அதை இணையத்தில் வெளியிட்டார்.
அதைப்பார்த்த சில மணிநேரங்களில் நித்யானந்தா நேரலையில் தோன்றி உணவகத்திற்கு விரைவில் அங்கீகாரம் அளிப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில்…
இந்திய அரசால் தேடப்படும் பாலியல் வழக்கு குற்றவாளியான நித்யானந்தாவிற்கு டெம்பிள்சிட்டி குமார்
என்பவர் ஆதரவு தருவதாக கூறியுள்ளார்.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான முத்துக்குமார் என்பவர் மதுரை ஆட்சியர் அலுவலகம் & மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.