தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
களவாணி படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் நடிகை ஓவியா.
அதனை தொடர்ந்து சில படங்களில நடித்து பிரபலமானார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிறகு ஓவியாவை தெரியாதவர்களே தமிழ் நாட்டில் இருக்க முடியாது என்கிற லெவலுக்கு பிரபலமானார்.
ஆனால் பிக்பாஸ் கொடுத்த புகழ் அவருக்கு சினிமா வாய்ப்புகளை அள்ளி கொடுக்கவில்லை.
இந்த நிலையில் லவ் என்ற ஒரு பதிவை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்.. நாம் மிகவும் நேசிப்பவர்கள் நம் அருகில் இல்லாமல் இருந்தாலும், நம்மை விட்டு ஒருபோதும் அவர்கள் விலகி போவதில்லை. அவர்கள் அருகில் இல்லாமல் இருக்கலாம், அவர்களது குரலை கேட்க முடியாமலும் பார்க்க முடியாமலும் இருக்கலாம்.
ஆனால் அவர்கள் எப்போதும் நம் அருகில் இருப்பதுப் போன்ற ஒரு உணர்வு இருக்கும்.
நேசித்தவர்களை நாம் மிஸ் செய்தாலும் அவர்கள் நமக்கு எப்போதும் அன்புக்குரியவர்கள், விருப்பத்துக்குரியவர்கள்’ என ஓவியா பதிவிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த பலருக்கும் ஓவியாவுக்கு என்னாச்சு..? காதலில் விழுந்துவிட்டாரா? என கேட்டு வருகின்றனர்.