தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
இதை தடுக்க உலக மருத்துவர்களே திணறி வருகின்றனர்.
பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு ஒழுங்குமுறை அனுமதியை ரஷ்யா வழங்கி உள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் இதுவரை 890,799 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 14973 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவே கொரோனாவுக்கான உலகின் முதல் தடுப்பு மருந்து என்றும், தேவையான அனைத்து பரிசோதனைகளும் முடிந்துவிட்டதாக புதின் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்துள்ளார்.
மேலும் தனது மகளுக்கு முன்பே இந்த தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.