தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்காதா? என பல இயக்குனர்கள் ஏங்கித் தவிக்கின்றனர்.
அப்படியொரு இருக்கையில்… சீரியஸா சொல்றேன்.. எனக்கு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க என்று ஒரு இயக்குனரிடம் ரஜினி சொன்னால் எப்படி இருக்கும்..?
அப்படி ஒரு வாய்ப்பு அதுவும் ஒரே ஒரு படம் ஹிட் கொடுத்த அந்த டைரக்டருக்கு கிடைத்துள்ளது.
யார் அவர்? என்றா கேட்கிறீர்கள்.. அவர்தான் தேசிங் பெரியசாமி.
படத்தின் பெயர்… கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
துல்கர் சல்மான், ரித் வர்மா, ரக்சன் உள்ளிட்டோர் நடித்து வெளியான படத்தை இயக்கியவர் இவர்.
Viacom 18 என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க மசாலா கஃபே ஹர்ஷவர்தன் மற்றும் ரமேஷ்வர் இசையமைத்திருந்தனர்.
இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருந்த போதிலும் கிட்டதட்ட 4 வருடங்களாக இப்பட வெளியீடு தள்ளிக் கொண்டே போனது.
இறுதியாக இந்தாண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வெளியானது.
முதலில் ஓபனிங் கூட இல்லாத இந்த படத்திற்கு பத்திரிகையாளர்களின் பாராட்டு மழையால் பெரும் வரவேற்பு கிடைத்தது.
பின்னர் எவரும் எதிர்பாராத வகையில் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
இந்த படத்தின் நிறைய காட்சிகளில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் இருப்பது நிச்சயம் பலருக்கு புரிந்திருக்கும். அதற்கு காரணம் தேசிங்கு தீவிர ரஜினி ரசிகர் என்பதுதான்.
அப்படியிருந்த அவருக்கு ரஜினியிடம் இருந்து போன் கால் வந்தால் எப்படியிருக்கும்..?
இன்று ஜீலை 30ஆம் தேதி இந்த படத்தை பார்த்த ரஜினி அவர்கள் இயக்குனர் தேசிங் பெரியசாமியை அழைத்து பாராட்டியுள்ளார்.
படம் சூப்பர்.. எக்சலண்ட்.. ரொம்ப சூப்பர்.. நல்ல எதிர்காலம் இருக்கு உங்களுக்கு… சாரி.. இப்ப தான் படத்தை பார்க்க டைம் கிடைச்சது.
எனக்கு ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க.. சீரியசா சொல்றேன்.. திங்க் பண்ணுங்க.. என தெரிவித்துள்ளார்.
இதனை கேட்ட தேசிங் பெரியசாமி பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்.
அவரின் ட்விட்டரில்… இன்று முழுவதும் இந்த வார்த்தைகளே ஓடிக்கொண்டிருக்கிறது என பரவசத்துடன் பகிர்ந்துள்ளார்.
Desingh Periyasamy is elated over Rajinis appreciation for Kannum Kannum Kollaiyadithaal