தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இதனால் அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன. மக்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
கடந்த மே 4 முதல் சில தளர்வுகளுடன் சில அத்தியாவசிய வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதியளித்து மத்திய அரசு.
இதனையொட்டி மே 7 முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.
அதன்படி இன்று மே 7ஆம் தேதி சென்னையை தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
கிட்டதட்ட 45 நாட்களாக குடிக்காமல் இருந்த குடிகாரர்கள் உற்சாகமாகியுள்ளனர்.
ஒரு சிலர் கடந்த நாட்களில் அதிக விலை கொடுத்து ப்ளாக்கில் எப்படியோ வாங்கி குடித்து வந்துள்ளனர்.
ஆனால் இன்று அரசே சரக்கடிக்க அனுமதி அளித்துவிட்டால் தலை கால் புரியாமல் ஆடத் தொடங்கியுள்ளனர்.
எனவே டாஸ்மாக்கில் மது விற்பவருக்கு மாலை போட்டு வரவேற்றுள்ளனர். ஒரு சில இடங்களில் கடை திறக்கும் சமயத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்.
குடிப்பவர்களை குடிகாரர்களை என சொல்லாமல் மதுப்ரியர்கள் என சொல்லவும் வலியுறுத்தி வருகின்றனர்.
அதே வேளையில் மதுரை உள்ளிட்ட சில இடங்களில் டாஸ்மாக் திறப்புக்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.
திமுக உள்ளிட்ட ஒரு சில கட்சிகளும் மதுக்கடை திறப்புக்கு தமிழக அரசை கண்டித்து வருகின்றன.
இந்த நிலையில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து கூறியதாவது… படிப்படியாக டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை குறைக்கப்படும். விரைவில் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்” என கூறினார்.
Tasmac wine shops opening Celebration in Tamilnadu