தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் எண்ணற்ற பல உயிர்களை நாம் இழந்து வருகிறோம்.
கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவர்களும் இறக்கும் செய்தியை நாம் அறிந்து வருகிறோம்.
இதனிடையே கொரோனா வைரஸ் காரணமாக இறந்த மருத்துவரின் உடலை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உடலை தங்கள் வசிக்கும் பகுதிகளில் புதைப்பதால் அந்த வைரஸ் தங்களுக்கு தொற்றக்கூடும் என்ற அறியாமையால் இவ்வாறு போராடி வருகின்றனர்.
இதனையறிந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த இறந்தவர்களின் உடலை புதைக்க தனது ஆண்டாள் அழகர்
கல்லூரியின் ஒரு பகுதியை எடுத்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மக்களின் அறியாமையை கண்டித்து கமல் ட்வீட் செய்துள்ளார்.
கொல்லும் கொரோனா கூட சாதி,மதம் பார்ப்பதில்லை. ஆனால் நாமோ, நம்மை காக்க போராடுபவர்களின் இறுதி காரியங்களில் கூட தன்னலம் பார்த்து, இறுதி மரியாதையை தடுப்பது அரக்க குணம். பாதுகாப்புக் கருவிகள் இல்லாமல்கூட தன்னுயிரைப் பொருட்படுத்தாத மருத்துவர்கள்தான் இப்போரில் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள்.
என கமல் பதிவிட்டுள்ளார்.
Kamal talks about Corona died patients and burial place issue