தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
க்யூ சினிமாஸ் சார்பில் அஷோக் ரங்கநாதன் மூன்று படங்கள் தயாரிக்கிறார்.
இதில் ராக்கெட் என்ற படத்தை எழுதி இயக்கி தயாரித்து அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது.
பிரபு கிருத்திகா ஜெயப்பிரகாஷ் கஞ்சா கருப்பு மற்றும் பலர் நடித்துள்ளனர். அடுத்ததாக பிரபல ஹீரோ, ஹீரோயின், முன்னனி நடிகர் நடிகையரை வைத்து எழுதி இயக்கி தயாரிக்கிறார்.
மற்றொரு படத்தை இயக்குனர் வேலுப்பிரபாகரன் உதவி இயக்குனர் அகரன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.
இதில் நடிக்க இந்திய அளவில் இருக்கும் ஒரு நடிகையிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. நிச்சயம் இப்படம் பேசப்படும்.
கதையை கேட்ட மாத்திரமே படம் பண்ண முடிவு செய்யப்பட்டு வேலைகள் நடக்கிறது. அடுத்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பித்து, ஒரே கட்ட படப்பிடிப்பாக நடத்தி முடிக்க திட்டமிடப்படுகிறது.
இதற்கிடையே பூர்ணா, கிஷோர், “தீரன் அதிகாரம் ஒன்று” வில்லன் அபிமன்யூ சிங் மற்றும் பலர் நடித்த “குந்தி” என்ற மொழி மாற்று படத்தை இம்மாதம் திரைக்கு கொண்டு வருகிறார்.