தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் திரையுலகம் தன் துறை சார்ந்த எத்தனையோ போராட்டங்கள் மற்றும் ஸ்டிரைக் ஆகியவற்றை சந்தித்துள்ளது.
ஆனால் இதுவரை இல்லாத நிலையில் தற்போது 5 வாரங்களாக (மார்ச் 1 2018 முதல்) எந்த புதுப்படங்களும் வெளியாகவில்லை.
மேலும் சினிமா விழாக்கள், சூட்டிங் உள்ளிட்ட எந்தவொரு நிகழ்வையும் நடக்க கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துவிட்டார்.
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி தியேட்டர்களில், மற்ற மொழி புதுப்படங்களையும், பழைய ஹிட்டான தமிழ் படங்களையும் திரையிட்டு வருகின்றனர்.
இதனால் எந்த தியேட்டரும் ஹவுஸ்புல் ஆகவில்லை.
இதனால் தியேட்டர்கள் தொழிலாளர்களும் வேலை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திருப்பூரில் உள்ள பிரபல தியேட்டர் நிர்வாகம், இனி இந்த தொழில் சரி வராது என்ற முடிவில் தியேட்டரை திருமண மண்டபமாக மாற்றவிருக்கிறார்களாம்.
மேலும் அங்குள்ள ஊழியர்களுக்கு செட்டில்மெண்ட் தொகையையும் கொடுத்துவிட்டார்களாம்.
இப்படியே போனால் மற்ற தியேட்டர் நிர்வாகத்தினரும் இந்த முடிவையே எடுப்பார்கள்.
எனவே திரையுலகம் விழித்துக் கொண்டு இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு விரைவில் முடிவு கொண்டு வருவதே நல்லது என்பதே எல்லாருடைய எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
Due to Cinema strike Theatre closed and they changing as Marriage hall