ஆன்லைனில் படம் ரிலீஸானால் அரசுக்கு நஷ்டம்.. – அமைச்சர் அதிரடி கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கால் இந்தியா முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 3 மாதங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதாலும் சினிமா சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாலும் கோலிவுட்டில் மட்டும் ரூ 800 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தியேட்டர்கள் திறக்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் தயாரிப்பாளர்கள் பலரும் ஆன்லைனில் படத்தை வெளியிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அண்மையில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தை அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிட்டார் நடிகர் சூர்யா.

விரைவில் கீர்த்தி சுரேஷின் பெண் குயின் படத்தை அமேசானில் ரிலீஸ் செய்யவுள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

இந்த நிலையில் ஆன்லைனில் படம் ரிலீஸ் குறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.

அதில்… ஆன்லைனில் படம் வெளியிடுவது தொடர்ந்தால் சினிமாத்துறைக்கு உகந்ததாக இருக்காது.

திரைத்துறையின் 100 ஆண்டு கால வரலாற்றில் ஆன்லைனில் படம் வெளியானது இதுவே முதன்முறை.

ஆன்லைனில் திரைப்படங்களை வெளியிடுவது ஆரோக்கியமாக இருக்காது

ஆன்லைனில் திரைப்படங்களை வெளியிடுவதால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படுவார்கள்.

மேலும் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படும் எனவும் அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

செம்மொழித் தமிழாய்வு இயக்குனர்.; ரஜினியை திருப்திப்படுத்த நியமனமா?.. சீறும் சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதல் இயக்குநராக முனைவர் இரா.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இத் தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ட்விட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

அந்த ட்வீட்டில் ஆட்சியாளர்களின் பெயரோடு நடிகர் ரஜினிகாந்த்தையும் அமைச்சர் டேக் போட்டு பதிவு செய்திருந்தார்.

அதேபோல், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினியும் கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில், நாட்டில் உள்ள எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என ரஜினி குறிப்பிட்டு இருந்தார்.

தமிழ் மொழியை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார்.

இந்த விவகாரம் ரஜினி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் மற்றவர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது..

இந்தநிலையில், மத்திய அமைச்சர் நடிகர் ரஜினியை டேக் செய்தது குறித்தும் பல்வேறு கேள்விகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து சீமான், “சென்னை தரமணியில் அமைந்துள்ள மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முதல் இயக்குநராக ஆர்.சந்திரசேகரன் என்பவரை நியமனம் செய்திருக்கும் மத்திய அரசின் செயல் பெரும் ஐயத்தைத் தோற்றுவிக்கிறது.

நீண்ட நெடுநாள்களாகச் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குநரை நியமிக்க வேண்டும் எனும் கோரிக்கை கிடப்பில் இருந்தவேளையில், தற்போது நடைபெற்றிருக்கும் நியமனம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், அதன் பின்புலத்தில் நடந்தேறிய அரசியல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது’’ என தெரிவித்துள்ளார்..

சுஹாசினியை வைத்து அரசு விளம்பர படம் இயக்கிய நடிகர் இ.வி. கணேஷ்பாபு.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா விழிப்புணர்வுக்காக தமிழகஅரசு விளம்பரப் படங்களை தயாரித்து தொலைக்காட்சிகளிலும் பல்வேறு ஊடகங்களிலும் வெளியிட்டு வருகிறது.

அதில் சில முக்கிய விளம்பரங்களை இயக்கிவரும் கட்டில் திரைப்பட இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு அதுபற்றி கூறியதாவது.

‘காவல் அரணாக செயல்பட்டு கொரோனாவில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும்
களவீரர்கள் தங்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்’ என்ற கருத்தை வலியுறுத்தி சுஹாசினி அவர்களை வைத்து நான் இயக்கிய விளம்பரப்படம் இப்போது மக்களிடம் பரவலாக சென்றடைந்து வருகிறது.

கமல்ஹாசன், மணிரத்னம் போன்ற இருபெரும் ஆளுமைகள் மத்தியில் வளர்ந்து, வாழ்ந்து செயல்பட்டு வரும் சுஹாசினி அவர்கள் இந்த விளம்பரப் படத்தில் நடித்தபோது முழுமையாக தனது பங்களிப்பை வெளிப்படுத்தினார்.

பெரிய திரைப்படமோ, சிறிய விளம்பரப்படமோ இரண்டுக்குமே சமமான அர்ப்பணிப்பை கொடுக்க வேண்டுமென்ற சுஹாசினி அவர்களின் ஈடுபாடு என்னை வியக்க வைத்தது.

அரசின் உயர்நிலை அதிகாரிகள் தொடங்கி கடைநிலை ஊழியர்கள் வரை இந்த விளம்பரத்தில் நடித்திருக்கிறார்கள்.

மேலும் சில திரைப்பட ஹீரோக்கள், ஹீரோயின்கள், நகைச்சுவை நடிகர்களையும் வைத்து சில விளம்பரப் படங்களை நான் இயக்குவதற்கான வாய்ப்பை வழங்கிய தமிழக அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

செழியன் குமாரசாமி அவர்களின் தலைமை ஒருங்கிணைப்பில் இந்த படைப்புகள் மிகவும் சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது என்று கட்டில் திரைப்பட இயக்குனரும் ஹீரோவுமான
இ.வி.கணேஷ்பாபு கூறினார்
Attachments area

3 மொழிகளில் ஜூன் 8 முதல் கீர்த்தி சுரேஷின் ‘பெண்குயின்’ டீஸர்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் மிகவும் எதிப்பார்க்கப்படும் உளவியல் திரில்லர் திரைப்படமான “பெண்குயின்” படத்தின் போஸ்டரை இன்று வெளியிட்டது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் Stone bench Films மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் Passion Studios இணைந்து தயாரிக்கும் இந்த திரில்லர் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்க ஈஸ்வர் கார்த்திக் இயக்குகிறார்.

அனைத்து தரப்பினரையும் கவரும் வண்ணம் எதிர்பார்ப்பை எகிறச்செய்யும் வகையில் இப்படத்தின் டீஸர் அமைந்துள்ளது.

வருகின்ற ஜூன் 8 ஆம் தேதி இந்தப் படத்தின் டீஸர் வெளியாகிறது.

மிக விரைவில் ப்ரத்யேகமாக “பெண்குயின்” திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ மூலம் ரசிகர்களை மகிழ்விக்க வரும் 19ம்தேதி வெளியிடப்படுகிறது.

நேரடியாக தமிழ் மற்றும் தெலுங்கிலும் மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியாகிறது..

Displaying tAMIL.jpg.

VZ துரை தயாரித்த Sci-Fi திரில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பிரபல நடிகர் கபீர் துகான் சிங்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முகவரி, தொட்டி ஜெயா, இருட்டு போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கிய VZ துரை, டாய்னா பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து Sci-Fi திரில்லர் படத்தை தயாரிக்கிறார்.

கடந்த 2017ஆம் ஆண்டு ‘ராடன் பிலிம் பெஸ்டிவெல்’ குறும்பட போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற சிறந்த குறும்படம் ‘அசரீரி’. அந்த படத்தை இயக்கிய ஜி.கே தொடர்ந்து ‘காதலின் தீபம் ஒன்று ‘ என்ற குறும்படத்தை இயக்கினார்.இது யூடியுபில் ஒரு மில்லியனுக்கு மேலான பார்வையாளர்களை கடந்து அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பெற்றது.

இந்த குழுவினரால் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் Sci-Fi திரில்லராக “டிஸ்டண்ட்” எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாக்கப்பட்டு விரைவில் வெளிவர இருக்கிறது. இதன் பர்ஸ்ட் லுக்கை பிரபல வில்லன் நடிகர் கபீர் துகான் சிங் தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

ஜீவி படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றி அவர் கூறும்போது இந்த கதை தனக்கு மிகவும் சவாலாக இருந்ததாக தெரிவித்தார்.

படத்தின் நாயகனாக அறிமுக நாயகன் சுரேஷ் நல்லுசாமி நடிக்கிறார்.விஜய் டிவி ஆயுத எழுத்து தொடர் புகழ் சௌந்தர்யா நஞ்சுதன் இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார். விஜய் சித்தார்த்தா இசையமைக்கிறார்.

நடிகர்கள் : சுரேஷ் நல்லுசாமி, சௌந்தர்யா நஞ்சுதன், பிக் பிரிண்ட் கார்த்திக், ராதாகிருஷ்ணன், முத்துபாண்டியன்

இயக்கம் : ஜி.கே
இசை : விஜய் சித்தார்த்தா
ஒளிப்பதிவு: பிரவீன் குமார்
பாடல்கள்: ஆதி
படத்தொகுப்பு: ராகுல்
கலை: தேவா
ஸ்டண்ட்: சுதேஷ்
VFX: முத்துகுமரன்
மாடல் மேக்கர்: அருண்
பாடியவர்: சில்வி சரோன்

தயாரிப்பு: சுரேஷ் நல்லுசாமி | முருகன் நல்லுசாமி

ஊரடங்கில் 17000 குடும்பங்களுக்கு உதவிய விஜய் தேவரகொண்டா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகம் முழுவதும் ‘கொரோனா’ நோய்த் தொற்று காரணமாக நெருக்கடிக்கு உள்ளான நிலையில் இந்தியாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. எதிர்பாராத இந்த அசாதாரண சூழ்நிலை பல பேரின் வாழ்வாதாரத்தை அசைத்துப் பார்த்தது. பணத்தை ஈட்ட வழியில்லாமலும், வேலையை இழந்தும் ஸ்தம்பித்துப் போயிருந்த நிலையில் நடிகர் விஜய் தேவர்கொண்டா இதற்கு தீர்வு காண எண்ணினார்.

அதன் காரணமாக தனது இலாப நோக்கமில்லாத அமைப்பான தேவர்கொண்டா அறக்கட்டளை (The Deverakonda Foundation) மூலம் நடுத்தர குடும்பத்தினருக்கு உதவும் ஒரு தனித்துவ முயற்சியை மேற்கொண்டார்.

விஜய் தேவர்கொண்டாவின் இந்த அறக்கட்டளை இது வரை 1.7 கோடி ரூபாயில் சுமார் 17,723 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்களை நிவாரண உதவியாக அளித்துள்ளது.

மேலும் 8,505 தன்னார்வ தொண்டர்கள் தங்களை இந்த கட்டளையில் இணைத்துக் கொண்டு 1.5 கோடி ரூபாய் அளவிற்கு நிதி திரட்டியதன் மூலம் சுமார் 58,808 குடும்பங்களுக்கு சரியான நேரத்தில் முக்கிய உதவிகள் சென்றடைந்துள்ளன.

கொரோனாவால் ஏற்பட்ட அசாதாரண நிலையை எதிர்கொள்ள மட்டுமே முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஐந்தாம் கட்ட பொது முடக்கத்தில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மக்கள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், கடந்த ஜூன் 2-ம் தேதியுடன் இயக்கத்தை நிறுத்த முடிவெடுத்துள்ளது.

எனவே அறக்கட்டளை எப்படி நிதி கையாளப்பட்டது என்பதை வெளிப்படையாக ஊடகங்களுக்கு ஒவ்வொரு நாளும் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த அறக்கட்டளை இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக அறிமுகம் செய்த முதல் வேலைத் திட்டமும் (First Job Program) இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அடிப்படையில் நடுத்தர குடும்பதை சேர்ந்த விஜய் தேவர்கொண்டாவுக்கும், அப்படிப்பட்ட குடும்பங்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் கஷ்டங்களும், போராட்டங்களையும் நன்கறிந்தவர் என்பதால், இந்த நெருக்கடி காலகட்டத்தில் அவர்களுக்கு தோள்கொடுக்க மற்றொரு வாய்ப்பாக அமைந்தது.

ஆனால் அதை விட அவர் இந்த திட்டத்தை அறிவித்தவுடன் நன்கொடையை வாரி வழங்கி அவர் மீது தாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பொதுமக்கள் காண்பித்தது அவரது உத்வேகத்தை மேலும் அதிகரித்தது என கூறலாம்.

அந்த நம்பிக்கையே அவர்கள் அளித்த பணத்தில் இம்மியளவு கூட வீணாகிவிடக்கூடாது என்ற பொறுப்புணர்ச்சியை இந்த அறக்கட்டளைக்கு அதிகரிக்க செய்தது. அதன் காரணமாக நன்கொடைகளை கையாளும் விதத்தை மிக கவனத்துடன் வடிவமைத்தது இந்த அறக்கட்டளை. அறக்கட்டளையிடம் உதவி கோரிய ஒவ்வொரு குடும்பத்தினரின் பின்னணி மற்றும் விவரங்களை சரி பார்த்து உறுதி செய்த பின்னரே உதவி செய்யப்பட்டது.

இந்த அறக்கட்டளையானது தாங்கள் உதவுவதோடு நிறுத்தி கொள்ளாமல் கார்ப்பரேட் நிறுவனங்களையும் உதவ வலியுறுத்தியதுடன் சுமார் 535 தன்னார்வலர்கள் அவர்களுடன் இணைத்து பெரும் பாதிப்புக்குள்ளான ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வெற்றிகரமாக உதவ துணை புரிந்துள்ளது.

அறக்கட்டளையின் இந்த தீவிர செயல்பாடும், அதில் விஜய் தேவர்கொண்டா காண்பித்த ஈடுபாடும் பல குடும்பங்களை நெருக்கடியிலிருந்து மீட்க உதவியுள்ளது. எந்தவித எதிர்பார்ப்பையோ, புகழ் வெளிச்சத்தையோ எதிர்பாராமல் நடுத்தர வர்க்கத்திற்குப் பக்கபலமாக நின்ற அவரது இந்த பண்பு மிகவும் பாராட்டுதலுக்குரியது.

பெரும்பாலும் சமுதாயத்தால் தாழ்த்தப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் இருந்து வந்த தொழிலாள வர்க்க குடும்பங்களுக்கு உதவியதன் மூலம் அளப்பறிய பணியை இந்த அறக்கட்டளை ஆற்றியுள்ளது,ம். நிதிகளை கையாண்டதில் வெளிப்படை தன்மை மற்றும் திட்டமிட்டு செயல்பட்டதன் மூலம் இந்த அறக்கட்டளையும், விஜய் தேவர்கொண்டாவும் அனைவரின் பாராட்டுதல்களை மட்டுமல்லாமல் இதயங்களையும் வென்றுள்ளனர்.

இது இத்துடன் முடிந்து விடவில்லை, இந்த நற்பணியைத் தொடர விரும்பும் விஜய் தேவர்கொண்டா மேலும் பல நலத்திட்டங்களை வரும் நாட்களில் அறிவிப்பார்.

More Articles
Follows