தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
டிசம்பர் 3 – 4 ஆம் தேதி சென்னை மக்களின் மனநிலை.. என்ன ஆகுமோ? ஏதாகுமோ.? என்பதுதான்.
மிக்ஜாம் புயல் சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தபோது பலத்த காற்றும் பேய் மழையும் பெய்துக் கொண்டிருக்கையில் தற்போது வரை சென்னை பெருவெள்ளத்தில் மிதக்கிறது.
கடந்த 2015-ஆம் ஆண்டில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது மக்கள் பட்ட அவஸ்தைகளை விட இந்த ஆண்டில் வெள்ளம் அதிகமாகி அவஸ்தையும் அதிகமாகியுள்ளது.
இந்த முறை 34 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நிவாரண பணிகளை தமிழக அரசு ஒரு பக்கம் மேற்கொண்டு இருந்தாலும் பல பகுதிகளில் கரண்ட் இல்லை என்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் பேரிடர் பணிகளுக்காக நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ரூபாய் 10 லட்சத்தை கொடுத்து ரசிகர்களை நிவாரண பணிகளை செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி சூர்யா – கார்த்தி ரசிகர்கள் சென்னை பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.
Suriya Karthi donated rs 10 lakhs for 2023 Chennai floods