ஓடிடி தளத்தில் பிரம்மாண்ட வெப் சீரிஸ்..; சிக்குவாரா சீயான்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா காலத்தில் யாருக்கு நல்லது நடந்ததோ இல்லையோ ஆன்லைன் இணையத்தளங்கள் நல்ல லாபத்தை பார்த்து வருகின்றனர்.

ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் போட்டிக் போட்டுக் கொண்டு பெரிய படங்களை வாங்கி ஆன்லைன் ரிலீஸ் செய்து வருகின்றனர்.

பொன்மகள் வந்தாள், பெண்குயின், ஒன்பது குழி சம்பத் உள்ளிட்ட பல படங்கள் வெளியானது.

எவரும் எதிர்பாராத வகையில் தன் சூரரைப் போற்று படத்தை அக்டோபர் 30ல் வெளியிடுகிறார்.

இந்த நிலையில் பிரபல ஓடிடி தளம் ஒன்று பிரம்மாண்ட வெப்சீரிஸ் தொடரை தயாரிக்கவுள்ளதாம்.

இதில் நடிக்க சீயான் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல்கள் வந்துள்ளன.

சீயான் சிக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ரஜினியே கால்ஷீட் கொடுக்க ரெடியான இயக்குனருடன் சிவகார்த்திகேயன் கூட்டணி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

துல்கர் சல்மான், ரித்து வர்மா, ரக்ஷன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’.

அறிமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இந்த படத்தை இயக்கி பெரும் பாடுபட்டு 5 வருட போராட்டத்திற்கு பிறகு இந்தாண்டு பிப்ரவரியில் ரிலீஸ் செய்தார்.

இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தேசிங்கு பெரியசாமியை வெகுவாக பாராட்டி தனக்கும் ஒரு ஸ்கிரிப்ட் ரெடி செய்ய சொல்லியிருந்தார்.

இந்த நிலையில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் அதற்கான கதையை தேசிய பெரியசாமி எழுதி வைத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ரவிக்குமார் இயக்கத்தில் ’அயலான்’ மற்றும் நெல்சன் இயக்கத்தில் ’டாக்டர்’ ஆகிய திரைப்படங்கள் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகவுள்ளன.

‘தனி ஒருவன் பார்ட் 2’க்கு சூப்பர் அப்டேட் கொடுத்த மோகன்ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா, ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி தமிழ் சினிமாவில் சாதனை படைத்த படம் தனி ‘தனி ஒருவன்’.

ஹிப் ஹாப் ஆதி இசையமைத்த இந்த படத்தின் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது ரெடியாகும் என ரசிகர்கள் கடந்த 5 ஆண்டுகளாக கேட்டுக் கொண்டே இருந்தனர்.

தற்போது இப்படம் வெளியாகி 5 ஆண்டுகளாகிறது.

இந்த நிலையில் இதில் நடித்த ஹரிஷ் உத்தமன், ‘தனி ஒருவன்’ தனது பயணத்தில் ஒரு மைல்கல் என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்தார்.

அப்படியே ‘தனி ஒருவன் 2’ குறித்து மோகன்ராஜாவிடம் அப்டேட் கேட்டு இருந்தார்.

“தனி ஒருவன் இரண்டாம் பாகத்துக்கான அப்டேட் விரைவில் வெளியாகும்” என மோகன்ராஜா தெரிவித்துள்ளார்.

‘கோமாளி’ தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கு கொரோனா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது.

இந்த வைரஸ் தொற்றுக்கு பிரபலங்களும் விதிவிலக்கல்ல.

சினிமா துறையினரும் பலரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு மாதமாகவே பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் நடிகர்

வசந்த் அண்டு கோ உரிமையாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வசந்தகுமார் நேற்று கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார்

இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கும் ஐசரி கணேஷுக்கு கொரோனா தொற்று பாதிப்புள்ளதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் இதுகுறித்த நம் தரப்பில் விசாரித்தபோது… அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

ஐசரி கணேஷ் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். மேலும் தேவி, போகன், எல்கேஜி, கோமாளி உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர் சங்க தேர்தலில் விஷால் தரப்பை எதிர்த்து பலமான எதிரணியை உருவாக்கியுள்ளார் ஐசரி கணேஷ் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

24 மணி நேரத்தில் 38 விதமான தோற்றம்.; ஜூலியை பாராட்டிய விஜய்ஸ்ரீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜல்லிக்கட்டு போராட்டமே ஜூலிக்கு மீடியா களத்தில் பிள்ளையார் சுழி போட்டது.

அதன்பின்னர் ஒரு சில படங்களில் நடித்தார். தற்போது விஜய்ஸ்ரீ இயக்கத்தில் பப்ஜி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் 24 மணி நேரத்தில் 38 விதமான தோற்றங்களில் ‘போட்டோ ஷூட்’ நடத்தியுள்ளார் ஜூலி.

அவருக்கு இயக்குனர் விஜய்ஸ்ரீ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘கடின உழைப்பும், தன்னம்பிக்கையும், எதிர் விமர்சனங்களை அடியோடு சாய்க்கும். உன்னை வெல்ல, உலகில் யாரும் இல்லை என்ற உணர்வை தரும்’ என கூறியுள்ளார்.

சூப்பர் ஹிட் ‘அய்யப்பனும் கோஷியும்’ தமிழ் ரீமேக்கில் பார்த்திபன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சச்சி இயக்கத்தில் பிரித்விராஜ், பிஜூ மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.

இப்படத்தின் இயக்குனர் சில மாதங்களுக்கு முன் காலமானார்.

இப்படம் கேரளாவில் வசூல் வேட்டையாடியது.

ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனால் மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய பலத்த போட்டி உருவானது.

‘அய்யப்பனும் கோஷியும்’ தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் கார்த்தியும் பார்த்திபனும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அந்த தகவலைக் குறிப்பிட்டு பார்த்திபன் விளக்கமளித்துள்ளார்.

“இந்த செய்தி நற்செய்தி ஆகலாம்!ஆனால் இதுவரை தயாரிப்பாளர் திரு கதிரேசனை தவிர அனைவரும் என்னிடம் பேசிவிட்டார்கள். எனவே…” என்று கூறியுள்ளார்.

இதனால் ‘அய்யப்பனும் கோஷியும்’ தமிழ் ரீமேக்கில் பார்த்திபன் இதுவரை நடிக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

More Articles
Follows