ரேவதி இயக்கத்தில் நயன்தாராவுக்கு பதிலாக தமன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான படம் ‘குயின்’.

விகாஸ் பகால் இயக்கத்தில் இப்படம் மார்ச் 2014இல் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றது.

எனவே, இப்படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை நடிகர் தியாகராஜன் பெற்றார்.

இதன் தமிழ் ரீமேக்கிற்கு சுஹாசினி மணிரத்னம் வசனம் எழுத, ரேவதி இயக்குகிறார்.

இதில் நாயகி வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

தற்போது தமன்னா நடிப்பது உறுதியாகிவிட்டது.

Tamanna replaced nayanthara in Kangana Ranaut’s Queen remake

ரஜினியை சந்தித்தும் விஜய் அதை செய்யாதது ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பைரவா படத்தின் சூட்டிங் நேற்றுடன் முடிவடைந்தது.

இறுதியாக பூசணிக்காய் உடைத்து நிறைவு செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

இப்பட படப்பிடிப்பு தளத்தின் அருகே ரஜினியின் 2.ஓ பட சூட்டிங் நடந்து வருவதை அறிந்த விஜய், அங்கே சென்று மரியாதை நிமித்தமாக ரஜினியை சந்தித்து இருக்கிறார்.

இவர்கள் சந்தித்தால் நிச்சயம் அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி இருக்கும்.

ஆனால், 2.0 பட மேக்கப்பில் ரஜினி இருந்ததால், எந்த புகைப்படமும் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

தனுஷின் அப்பா கிருஷ்ணமூர்த்தி; ஆதாரத்தை வெளியிட்ட விசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில மாதங்களாவே கஸ்தூரி ராஜாவிடம் உள்ள தனுஷ் எங்கள் மகன் என சொந்தம் கொண்டாடி வருகிறன்றனர் கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர்.

இந்த விசாரணைக்காக தனுஷ் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான விசு இது குறித்து ஒரு போட்டோவை வெளியிட்டு தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில்… “நான் இயக்கிய மணல் கயிறு முதல் சகலகலா சம்பந்தி வரை என்னுடன் உதவி இயக்குனராக இருந்தவர் கிருஷ்ணமூர்த்தி.

அதன்பின்னர் என் ராசாவின் மனசிலே படத்தை அவர் இயக்கும்போது தன் பெயரை கஸ்தூரி ராஜா என மாற்றிக் கொண்டார்.

தனுஷ், செல்வராகவன் உள்ளிட்ட அவரின் குடும்பத்தை எனக்கு நன்றாக தெரியும்.

நடிகர் தனுஷ் அவர்கள், கிருஷ்ணமூர்த்தி என்ற கஸ்தூரிராஜாவின் மகன்தான்” என்று தெரிவித்துள்ளார்.

அந்தப் போட்டோ இதுதான்…

அப்பா சிவகுமார் பெயரை சொல்லாமல் கஷ்டப்பட்ட சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா.

படத்திற்கு படம் வித்தியாசமான வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இவர் சிவகுமாரின் மகன் என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

ஆனால் நடிக்க வருவதற்கு முன்பு, இவர் சிவகுமாரின் மகன் என்பதை யாரிடமும் சொல்லாமல் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் பல கிலோ மீட்டர் வரை பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்வாராம்.

ஆபிஸை சுத்தம் செய்வது போன்ற வேலைகளிலும் ஈடுபடுவாராம்.

சூர்யாவின் இந்த கஷ்டங்களை கூட்டத்தில் ஒருத்தன் பாடல் வெளியீட்டு விழாவில் பேசினார் சிவகுமார்.

ஞானவேல் இயக்கியுள்ள கூட்டத்தில் ஒருத்தன் படத்தில் அசோக் செல்வன், பிரியா ஆனந்த் நடிக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர்.

ரஜினியுடன் மோதலை தவிர்க்கும் அஜய் தேவ்கான்; விஜய் ரியாக்ஷன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இந்தியளவில் பெரும் செல்வாக்கு உள்ளது.

எனவே இந்த கோலிவுட் ‘காந்த்’தின் படங்கள் வெளியாகும் நாளில், பாலிவுட் கான்கள் அவர்கள் படத்தை வெளியிட மாட்டார்கள்.

இந்நிலையில் அடுத்த வருடம் 2017 தீபாவளிக்கு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.ஓ’ படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

இதே நாளில் வெளியாகவிருந்த பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கானின் ‘கோல்மால்4’ படத்தை வேறு ஒரு தேதிக்கு மாற்றியிருக்கிறார்களாம்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள படமும் 2017 தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.

அஜய் தேவ்கான் விலகிவிட்டார். விஜய் விலகுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சமீபத்தில் அஜய்தேவ்கான் நடித்து இயக்கி தயாரித்த சிவாய படம் வெளியாகி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

‘கபாலி’ நஷ்டம்; ரஜினியிடம் பணம் கேட்க சொன்ன தாணு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய லிங்கா படத்தின் தோல்வியால் ரஜினி மற்றும் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் ஆகியோருக்கு ஏற்பட்ட பிரிச்சினை நாம் அறிந்ததே.

இந்நிலையில் இவ்வருடம் வெளியாகி வசூல் சாதனை படைத்த படம் என கூறப்படும் கபாலியும் சில இடங்களில் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் ரூ 2 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்டவர்கள் தாணுவிடம் முறையிட்டுள்ளனர்.

படத்தை வாங்கி வெளியிட்ட ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்திடம் இருந்து, தனக்கு பணம் வரவுள்ளதால், அது கிடைத்த உடன் தெரிவிக்கிறேன் என்று கூறினாராம் தாணு.

ஆனால் அதற்குள், நஷ்டம் ஏற்பட்டால் எப்போதும் ரஜினியிடம் கேட்கும் நீங்கள் இப்போது என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்.?

ரஜினியிடம் சென்று நஷ்டஈட்டை கேளுங்கள் என தாணு தெரிவித்து விட்டதாக செய்திகள் வெளியாகிவிட்டது.

கபாலீஸ்வரா… இனி இது தொடர்பாக என்னென்ன வதந்திகள் உலா வரப்போகிறதோ.?

More Articles
Follows