தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
2013 ஆம் ஆண்டில் வெளியான ‘நேரம்’ படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். இந்த படத்தில் நிவின் பாலி, நஸ்ரியா, பாபி சிம்ஹா, நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த படம் தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து 2015ல் ‘பிரேமம்’ என்ற படத்தை இயக்கி இந்திய சினிமா ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார் அல்போன்ஸ் புத்திரன்.
இதில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் பல சாதனைகளை மலையாளத்தில் படைத்தது. மேலும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
இதனையடுத்து அல்போன்ஸ் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது. அதன் பின்னர் அவியல் என்ற ஆந்தாலஜியை இயக்கியிருந்தார் அல்போன்ஸ்.
கடந்த ஆண்டு 2022 பிரித்திவிராஜ் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவான ‘கோல்டு’ படத்தை இயக்கியிருந்தார்.
தற்போது இவரது இயக்கத்தில் கிப்ட் என்ற படம் உருவாகி வருகிறது.
இந்த பத்து ஆண்டுகளில் நான்கு ஐந்து படம் படங்களை மட்டுமே இயக்கி இருக்கிறார் அல்பான சுபத்திரன்.
இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்படுவார். எப்போதும் ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பவர் இவர்.
இந்த நிலையில் அவர் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட பதிவு ஒன்று ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
“எனக்கு சிறு வயது முதலே ஆட்டிசம் குறைபாடு உள்ளது. அதை இப்போது முழுமையாக உணர்ந்துள்ளேன். இனிமே என்றால் முடியல.
எனவே படங்களை இயக்குவதை நிறுத்திக் கொள்ளப் போகிறேன். இனிமேல் நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. ஆனால் ஆல்பம் மற்றும் வீடியோக்களை உருவாக்குவேன்.” என உருக்கமான பதிவிட்டுள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.
Director Alphonse Puthiran quits cinema