உத்தமவில்லன் இயக்குனரின் குயின் ரீமேக்கில் காஜல் அகர்வால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரே சமயத்தில் விஜய்யுடன் மெர்சல் மற்றும் அஜித்துடன் விவேகம் படங்களில் நடித்தவர் காஜல் அகர்வால்.

இந்நிலையில் இவர் ‘குயின்’ இந்திப்பட ரீமேக்கில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.

இப்படத்தை நடிகரும் உத்தமவில்லன் படத்தின் இயக்குனருமான ரமேஷ் அரவிந்த் இயக்கவிருக்கிறார்.

முதலில் இப்படத்தை நடிகை ரேவதி அல்லது சுகாசினி இயக்குவார் என்ற கூறப்பட்டது.
இந்தியில் வெற்றிப் பெற்ற ‘குயின்’ படத்தை தென்னிந்திய கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு மாற்றவிருக்கிறார்களாம்.

அன்னை தெரசா பெயரை தன் மகளுக்கு சூட்டிய நிவின்பாலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

’நேரம்’, பிரேமம் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழக ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் நிவின்பாலி.

இவர் தற்போது ரிச்சி என்ற நேரடி தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

இவரது மனைவி பெயர் ரினா ராய். இவருக்கு டேவிட் என்ற 5 வயது மகன் இருக்கும் நிலையில் கடந்த மே மாதம் மகள் பிறந்தாள்.

தற்போது அந்த குழந்தைக்கு ரோஸ் தெரசா எனப் பெயரிட்டுள்ளார்.

குழந்தையின் புகைப்படங்கள் இணையங்களில் வைரலாகி வருகிறது.

எம்ஜிஆருடன் ரஜினி படத் தலைப்பை இணைத்த அமீர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் அமீர்.

அதன்பின்னர் ’யோகி’ படத்தில் நடிகராக அறிமுகமானார்.

தற்போது ஆர்யாவும் அவரது தம்பி சத்யாவும் நடித்து வரும்’சந்தனத் தேவன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

மேலும் வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் ’எம்.ஜி.ஆர் பாண்டியன்’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கவிருக்கிறாராம்.

பாண்டியன் என்ற தலைப்பில் ரஜினி, குஷ்பூ நடித்த படம் கடந்த 1992ஆம் ஆண்டு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

எம்ஜிஆர் பாண்டியன் படத்தை தப்பாட்டம் தயாரிப்பாளர் ஆதம்பாவா இயக்குகிறார்.

இதில் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக அமீர் நடிக்க, சாந்தினி, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

வித்யாசாகர் இசையமைக்கும் இதன் சூட்டிங் தேனியில் நடக்கிறது.

ஆணை மன்னிக்கும் சமூகம் பெண்ணை மன்னிப்பதில்லை… தரமணி பற்றி லிஸி ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘தரமணி’ படத்தில் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமாரின் மன அழுத்தமுள்ள மனைவியாக வந்து கடைசியில் சுடப்பட்டு இறந்து போகும் பாத்திரத்தில் நடித்திருப்பவர் லிஸி ஆண்டனி.

படத்தில் அந்தப் பாத்திரம் பெரிய போலீஸ் அதிகாரியின் மனைவியாக இருந்தும் புறக்கணிப்பு தனிமை. அவமதிப்பு, கண்டுகொள்ளாமை, வெறுமை, சந்தேகப்பார்வை என்று பல வலிகளைத் தன்னுள் தாங்கி மன அழுத்தம் கொண்ட ஒன்றாக இருக்கும். அப்பாத்திரத்தின் அடையாளமின்மையின் குறியீடாக படத்தில் பெயரே இருக்காது.

ஆனால் படத்தின் திருப்பமாக அதன் முடிவு இருக்கும். அதில் நடித்திருப்பவர் தான் நடிகை லிஸி ஆண்டனி.

படத்தில் அப்படி மனப் புழுக்கம் கொண்டவராக நடித்துள்ள லிஸி நிஜத்தில் நேர் எதிர்.ஆங்கிலோ இந்தியன் பள்ளிப் படிப்பு, ஸ்டெல்லா மேரீஸில் பி.காம். சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.காம். என்று முடித்தவர்.

ஷாப்பிங் போவதுதான் பெண்கள் உலகம் என்று கருதப்படும் நிலையிலிருந்து ஷிப்பிங் துறை என்று ஈடுபட்டு உலக நாடுகள் பலவற்றை வலம் வந்தவர்.

அவருடன் பேசிய போது…

“எங்களுக்குப் பூர்வீகம் கேரளா, என்றாலும் நான் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாமே சென்னைதான். அதுவும் வட சென்னை வண்ணாரப்பேட்டை. எங்கள் குடும்பம் ஆச்சாரமான கிறிஸ்தவக் குடும்பம்.

சினிமா பார்க்க அனுமதி இல்லை.

அப்பா விமானப்படையில் இருந்தார். பிறகு நேவியில் ஷிப்பிங்கில் எலெக்ட்ரிகல் ஆபீஸர். எனக்கும் ஆகாயத்தில் பறக்கவும் கடலில் கப்பலில் பயணம் செய்யவும் ஆசை.

என் கனவு கப்பல் மாலுமி ஆக வேண் டும் என்பது தான். ஆனால் அம்மா விடவில்லை.

ஷிப்பிங்கில் ஈடுபடும் வரை நானும் சாதாரண சராசரி மனுஷியாகத்தான் இருந்தேன். இந்தியாவை விட்டு புறப்பட்டதும் நான் மொத்தமாக மாறினேன். எனக்குள் இருந்த இன்னொரு மனுஷியைக் கண்டேன்.

இந்தியா வந்த போது எனக்கு நட்பான இயக்குநர் ராம்சார் முதலில் ‘தங்க மீன்கள்’ படத்தில் நடிக்க அழைத்தார். நட்பின் பேரில் தான் அதில் ஸ்டெல்லா மிஸ் பாத்திரத்தில் நடித்தேன்.

ஆனால் அது பெரிய அளவில் போய்ச் சேர்ந்தது.என்னை எல்லாரும் ஸ்டெல்லா மிஸ் என்று அழைக்க ஆரம்பித்தனர். ராம்சார் இப்போதும் அப்படித்தான் அழைப்பார்.

இப்படியான நட்பில் பிறகு சிறு சிறு வேடங்களில் சுமார் 15 படங்கள் நடித்திருப்பேன். இப்போது தரமணியில் நல்ல பெயர் கிடைத்துள்ளது.” என்று தன் முன் கதையைச் சொல்லி முடித்தார்.

‘தரமணி’ பட அனுபவம் பற்றிப் பேசும் போது, ” எனக்கு ராம்சார் மீது நம்பிக்கை உண்டு. அவரது படைப்புத் திறமை மீது பெருமிதம் உண்டு. அவர் மீண்டும் அழைத்தபோது கண்ணை மூடிக் கொண்டு சம்மதம் சொன்னேன்.

காரணம் அவர் எந்தக் கதாபாத்திரத்தையும் பேச வைத்து விடுவார். படத்தில் முக்கியமாக ஆறு தம்பதிகள் வருகிறார்கள். எல்லாரையும் மறக்க முடியாதவர்களாக காட்டியுள்ளார். என் பாத்திரமும் அப்படித்தான்.

இதற்கு ஏழு நாட்கள் ஒரு வீட்டில் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு சுமுகமாக இருந்தது. ராம்சார் இயல்பாக நடிக்க வைப்பார். ஏன் அழுகிற காட்சிகளில் கூட கிளிசரின் தர மாட்டார். நினைத்து அழுகை வர வைக்கும்படி வாழ்க்கையில் கோபம் எதுவுமே இல்லையா என்பார்.

இப்படித்தான் எங்களிடம் நடிப்பை வாங்கினார்.

நான் கிளிசரின் போடாமல் தான் அழுதேன். அவர் எப்போதும் தன் படக் குழுவை ஒரு குடும்பமாக உணர வைப்பார். யாருக்கும் எந்த அசெளகரியமும் இருக்காது. இப்படி தரமணி மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

இரண்டு பெரிய படங்களுடன் ‘தரமணி ‘வெளியாகி வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி. பாராட்டுகள் குவிந்து வருவது பரவசம் தருகிறது. ” என்கிறார்.

‘தரமணி’ படம் பற்றி பல்வேறு கருத்துகள் அலையடிக்கின்றன. ஒரு பெண்ணாக லிஸி என்ன நினைக்கிறார்? என்ற போது,

” படத்தில் பெண்களின் பிரச்சினைகளை, குமுறல்களை, வலிகளை, ஏக்கங்களை தைரியமாகச் சொல்லியிருக்கிறார். பெண்களின் குரலாக அவர் பேசியிருக்கிறார். இது பலரும் சொல்லத் தயங்கும் பிரச்சினையாகும்.

ஒரு ஆண் தவறு செய்தால் மன்னித்து ஏற்றுக் கொள்கிற சமூகம், ஒரு பெண் தவறிழைத்தால் ஏற்றுக் கொள்வதில்லை. பாதிக்கப்படும் ஒரு பெண் யாரோ ஒருவரின் மகள்தானே? யாரோ ஒருவரின் அக்கா தானே? என்று அழகம் பெருமாள் பாத்திரம் மூலம் பேசுவது மனதைத் தொட்டது.

பெண்களின் மனக்குரலை அவர் பேசியிருக்கிறார். அவர் குரலை ஒரு பெண்ணாக நான் வழிமொழிகிறேன்.” என்கிறார்.

லிஸி ஆண்டனி இப்போது நடிக்கும் படங்கள் ? ராமின் அடுத்த படமான ‘பேரன்பு ‘, ‘சூ மந்திரக்காளி’, மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘ பரியேறும் பெருமாள் ‘, ‘மூடர் கூடம்’ ஒளிப்பதிவாளர் டோனி இயக்கும் படம் மேலும் ஒரு புதிய படம் என ஐந்து புதிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் லிஸி இப்போ ரொம்ப பிஸி.

Actress Lissy Antony talks her experience in Taramani movie

மெர்சல் டீசர் ரிலீஸானால் விவேகம் வசூல் பாதிக்கும்.. ரூபன் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில தினங்களுக்கு முன் மெர்சல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.

அப்போது சில தினங்கள் மெர்சல் டீசர் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து இப்படத்தின் எடிட்டர் ரூபன் தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது…

‘சமீபகாலமாக சினிமாவுக்கு எதிரான நிறைய விஷயங்கள் நடந்து வருகின்றன. சினிமாவை பற்றி அனைவரும் விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டனர்.

பணம் வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்கின்றனர்.

இதனால் சில படங்கள் ரசிகர்களால் வெறுக்கப்படுகின்றன. நடிகர்களையும் வெறுக்கிறார்கள்.

இப்படி உலகம் முழுவதும் தவறான விஷயங்கள் பரவுகிறது. இது எல்லாவற்றையும் தாண்டி அஜித், விஜய், இயக்குனர்கள் அட்லீ, சிவா, தயாரிப்பாளர்கள் சத்யஜோதி பிலிம்ஸ், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் ஆகியோரின் நல்ல எண்ணத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஒவ்வொருவரும் மற்றொருவரின் உழைப்பை மிகவும் மதித்து வேலை செய்கின்றனர். தன் படத்தின் டீசர் வருவதால் மற்றொருவரின் படம் பாதிக்கப்பட கூடாது என்று பார்த்து பார்த்து வேலை செய்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மெர்சல் டீசர் வெளியானால் விவேகம் வசூல் பாதிக்கும் என்பதை அவர் விளக்கியுள்ளார்.

ப்ளுசட்டை மாறனுக்கு லாரன்ஸ்-ஜிவி.பிரகாஷ் கடும் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விவேகம் படத்தை விமர்சிக்கும் போது அதை கடுமையாக விமர்சித்திருந்தார் ப்ளுசட்டை புகழ் மாறன்.

எனவே இவருக்கு அஜித் தரப்பிலும் திரையுலகினர் தரப்பிலும் பல்வேறு கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதகுறித்து இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அதில். ‘நான் விவேகம் படம் பார்த்தேன். அஜீத்தின் கடின உழைப்பிற்கு தலைவணங்குகிறேன். படம் பற்றி நல்லவிதமான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், ப்ளூசட்டை மாறன் என்பவர் மோசமாகவும், மனதில் வலியை ஏற்படுத்தும் வகையிலும் விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார்.

சினிமாவையும், சினிமா துறையினரையும் இழிவுபடுத்தும் ப்ளூசட்டை மாறன் மீது தயவு செய்து சினிமா துறையினர் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து, நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் அவர்களும் தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அதில்… ஒரு படம் வெளியானால் குறைந்தபட்சம் 4 நாட்களுக்கு பிறகே விமர்சனம் செய்ய வேண்டும் என அறிவுறுத்த வேண்டும்.

மேலும் ஒரு படம் எப்படி உள்ளது? என்பதை மக்கள் பார்த்து தெரிந்துக் கொள்ளட்டும்” என விவேகம் படத்திற்கு ஆதரவாக தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

Lawrence and GV Prakash condemned Blue Sattai Maaran in Vivegam review issue

More Articles
Follows