தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒரு பக்கம் என்றால், மற்றொரு பக்கம் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்.
வருகிற ஏப்ரல் 2 ஆம் தேதி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் போட்டியிடும் தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணி’ சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ். தாணு பேசினார்.
பேசிக் கொண்டே இருக்கும்போதே, விஷாலால் பாதிக்கப்பட்ட ஒரு தயாரிப்பாளரின் கண்ணீர் கதையை கேளுங்கள் என்று சமர் பட தயாரிப்பாளர் ரமேஷ் நாயுடு அவர்களுக்கு போன் செய்தார்.
அப்போது அந்த தயாரிப்பாளர் போனில் பேசியதாவது…
‘சமர்’ படத்தில் நடித்த போது, ஆந்திரா வெளியீட்டு உரிமையை கேட்டார் விஷால். அது ஏற்கெனவே விற்றுவிட்டது. அதனால் கொடுக்க முடியாது என்றேன்.
அதன்பின் சமர் படத்தின் சூட்டிங்குக்கு ஒருமுறை என் குடும்பத்துடன் சென்றேன்.
ஆனால் நான் இருந்தால், விஷால் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துவிட்டார்.
அதன்பின் தமிழ் படங்களை தயாரிப்பதை விட்டுவிட்டு, தெலுங்கு சினிமாவுக்குப் போய் விட்டேன்.
இதுபோன்ற நிலைமை வேறு எந்த தயாரிப்பாளருக்கும் வரக்கூடாது’ என்றார்.
Many producers affected by Vishal says Kalaipuli Thanu