சூர்யா விட்டு கொடுப்பார்; விஷால் விடுவாரா.? கார்த்தியுடன் மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தீபாவளி பண்டிகைன்னா புதுப்படங்கள் ரிலீஸ் இல்லாமலா?

எனவே, தீபாவளியை குறிவைத்து நிறைய படங்கள் தயாராகி கொண்டிருக்கின்றன.

கோகுல் இயக்கத்தில் கார்த்தி நடித்த காஷ்மோரா, தீபாவளி அன்று ரிலீஸ் என்று முன்பே உறுதி செய்யப்பட்டு விட்டது.

இந்நிலையில் எவரும் எதிர்பாரா விதமாக சுராஜ் இயக்கத்தில் விஷால் நடித்த கத்தி சண்டை படமும் தீபாவளி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘மெட்ராஸ் என்டர்பிரைசஸ்’ தயாரித்த இப்படத்தை ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது.

நடிகர் சங்கம் தேர்தல் பணிகள் தொடங்கியது முதல் விஷால்-கார்த்தி நல்ல நட்பில் இருந்து வருகின்றனர்.

தற்போது இவர்களின் படங்கள் ஒரே நாளில் மோதிக் கொள்ளவிருக்கிறது.

தனது தம்பி கார்த்திக்காக சூர்யா தன் படத்தை தள்ளி வைத்துள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

பின்குறிப்பு :
2013ஆம் பொங்கலுக்கு விஷாலின் ‘சமர்’ மற்றும் கார்த்தியின் ‘அலெக்ஸ் பாண்டியன்’ இரண்டும் மோதியது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனின் நண்பரே அவருக்கு போட்டி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில ஹீரோக்களுக்கு மட்டுமே ஒரு சில காமெடியன்களுடன் ட்ராக் ஒர்க் அவுட் ஆகும்.

சத்யராஜ்-கவுண்டமணி, ஆர்யா-சந்தானம் உள்ளிட்டோர்கள் வரிசையில் சிவகார்த்திகேயன்-சூரிக்கும் முக்கிய பங்குண்டு.

இவர்களின் நட்பு திரைக்கு பின்னாலும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நர்ஸ் ஆக நடித்திருக்கிறார்.

அதுபோல் விஷால், தமன்னா, வடிவேலு நடித்து வரும் கத்தி சண்டை படத்தில் சூரியும் பெண் வேடமிட்டு நடித்திருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

கபாலி, விஜய்-60, விஜய் சேதுபதி ஆகியோருடன் ‘கட்டப்பாவ காணோம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணி சேயோன் இயக்கத்தில் சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், காளி வெங்கட், யோகி பாபு, லிவிஸ்டன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ‘கட்டப்பாவ காணோம்’.

‘விண்ட் சைம்ஸ்’ மீடியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் முதன்முறையாக வாஸ்து மீன் ஒன்றும் நடித்துள்ளது.

இப்படத்திற்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்து இருக்கிறார்.

இவர்களுடன் கபாலி புகழ் மைம் கோபியும் இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்றுள்ளார்.

மேலும் விஜய் 60 படத்தில் நடித்து வரும் பேபி மோனிகாவும் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறாராம்.

நாளை  5 மணிக்கு இப்படத்தின் டீசரை நடிகர் விஷால் வெளியிட உள்ளார்.

 

‘ரஜினி-விஜய் தெரியல; கமல் வருவார்; அஜித்திடம் கேட்க மாட்டோம்’ விஷால் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாசர், விஷால் தலைமையிலான அணி பதவியேற்றது முதல் நடிகர் சங்கத்தில் பல மாற்றங்களை செய்து வருகிறது.

சங்கத்திற்கான புதிய கட்டிடம் வருகிற 2018ஆம் ஆண்டு பொங்கல் அன்று திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையில் நிதி திரட்டுவதற்காக நடிகர் சங்கம் சார்பாக பல நாடுகளில் வரலாற்று நாடகம் அரங்கேறவுள்ளதாம்.

நாசர் இதை தலைமையேற்று ஒருங்கிணைக்க உள்ளார்.

மேலும் இதுகுறித்து விஷால் தன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது…

“இந்த நாடகத்தில் எங்களுக்கான பாத்திரம் இருந்தால் கொடுக்கிறேன் என நாசர் சொன்னார்.

கமல் நிச்சயம் இந்த நாடகத்தில் நடிப்பார். ரஜினி மற்றும் விஜய் இந்த நாடகத்தில் நடிப்பார்களா? எனத் தெரியவில்லை.

அஜித் வாய்ப்பே இல்லை. அவரிடம் கேட்கவும் மாட்டோம். அது அவரவர் விருப்பம். நாம் குறை சொல்ல முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.

பஞ்சு அருணாசலம் உடலுக்கு ரஜினி சார்பில் லதா அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட மூத்த கலைஞர் பஞ்சு அருணாசலம் நேற்று முன்தினம் மரணமடைந்தார்.

சென்னையில் இன்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

எனவே திரையுலகை சேர்ந்த பலரும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவரது மறைவுக்கு ட்விட்டரில் அஞ்சலி செலுத்தியிருந்தார் ரஜினி.

ஆனால், அவரது உடலுக்கு ரஜினி நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை.

அவருக்கு பதிலாக லதா ரஜினிகாந்த் அஞ்சலி சென்றார்.

டாக்டர்களின் அறிவுரைப்படி வெளியில் செல்லாமல் ஓய்வில் இருந்து வருகிறார் ரஜினி.

ரஜினியின் திரையுலக வாழ்வில் மறுக்க முடியாத நபர்களில் பஞ்சு அருணாசலம் அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘முடிஞ்சா இவன புடி’ படத்தை நாளை தியேட்டரில் புடிச்சிட்டலாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லிங்கா பிரச்சினையால் ‘முடிஞ்சா இவன புடி’ படம் சிக்கலில் உள்ளது என்பதை நாம் முன்பே நம் தளத்தில் பார்த்தோம்.

தற்போது இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளதாவது…

“இப்படத்தின் தயாரிப்பாளர் ராம்பாபு ‘முடிஞ்சா இவன புடி’ படத்தில் ‘ரஜினி வழங்கும்’ என்றுதான் இப்படத்தின் பேனரில் டிசைன் செய்ய ஆசைப்பட்டார்.

ஆனால் ரஜினி சாரின் விருப்பம் இல்லாமல் அப்படிச் செய்யக்கூடாது என்று பின்னர் விட்டுவிட்டார்.

ராம்பாபுவின் நெருங்கிய நண்பர் ராக்லைன் வெங்கடேஷ் என்பதால்தான் அந்த நட்பின் காரணமாக பேனர்களில் அவரின் பெயரை போட்டார்.

ஆனால், அது வெங்கடேஷின் சொந்தப்படம் என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டது.

இதனால் ‘லிங்கா’ விநியோகஸ்தர்கள் பணம்கேட்டு வந்தனர்.

நேற்று இரவே பணத்திற்கான செட்டில்மென்ட் முடிவடைந்து விட்டது.

எனவே, திட்டமிட்டபடி ஆகஸ்ட் 12-ம்தேதி (நாளை) ‘முடிஞ்சா இவன புடி’ ரிலீஸாகும்’ என்று தெரிவித்துள்ளார்.

More Articles
Follows