‘ரெமோ’ இயக்குனரின் அடுத்த படத்தில் ‘கீதா கோவிந்தம்’ ராஷ்மிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர் பாக்யராஜ் கண்ணன். இப்படத்திற்கு இவர் எந்த படங்களை இயக்கவில்லை.

தற்போது கார்த்தி நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் கார்த்தி இப்படத்தை முடித்துவிட்டு ரெமோ இயக்குனருடன் இணைகிறார்.

தற்போது முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விரைவில் சூட்டிங் தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில் கார்த்தி ஜோடியாக கீதா கோவிந்தம் தெலுங்கு பட புகழ் ராஷ்மிகா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.

Geetha Govindam fame Rashmika Mandanna pair up with Karthi

‘96’ தெலுங்கு ரீமேக்.; பிரச்சினையால் விலகும் பிரேம் குமார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, திரிஷா நடித்த படம் ‘96’.

கோவிந்த் வசந்தா என்பவர் இசையமைத்திருந்தார்.

இப்படத்தின் 100வது நாள் வெற்றி விழாவை அண்மையில் பிரபலங்களுடன் கொண்டாடினார் இப்பட இயக்குனர் பிரேம் குமார்.

மாபெரும் வெற்றி பெற்றதால் இப்படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்யவுள்ளனர். ‘தில்’ ராஜு தயாரிக்கிறார்.

இதில் சர்வானந்த், சமந்தா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த வசந்தாவை தயாரிப்பாளர் மாற்ற சொன்னதாக கூறப்படுகிறது.

ஆனால் டைரக்டர் பிரேம்குமார் முடியாது என மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

ஒருவேளை தயாரிப்பாளர் சம்மதிக்காத பட்சத்தில் இயக்குனரே விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Director Premkumar in trouble to remake 96 movie in Telugu

விஜய் தங்கைக்கு தீவிர சிகிச்சை; திரைத்துறையினர் உதவ சகோதரி வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள இயக்குனர் சித்திக் இயக்கிய பிரெண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாகவும் சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தவர் விஜயலட்சுமி.

தற்போது சினிமா சான்ஸ் இல்லாத காரணத்தினால் பெங்களூருவில் வசித்து வருகிறார்.

கடந்த 2006-ம் ஆண்டில் இவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. இந்த முயற்சிக்கு ஒரு உதவி இயக்குனரின் காதல் தான் எனவும் சொல்லப்பட்டது.

இதனையடுத்து இதுவரை திருமணம் செய்துக் கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார் விஜயலட்சுமி.

இந்நிலையில் தற்போது அவருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினை இருந்து வந்துள்ளது.

எனவே தீவிர சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள மல்லையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறாராம்.

இது குறித்து விஜயலட்சுமி சகோதரி கூறியதாவது:-

‘விஜயலட்சுமிக்கு ரத்த அழுத்தம் அதிகமானதால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளோம். சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பணத்தை எல்லாம் எங்கள் அம்மாவின் சிகிச்சைக்கே செலவு செய்துவிட்டோம். தற்போது பணச் சிக்கலில் உள்ளோம். சினிமா துறையினர் உதவ வேண்டும்‘ எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Friends fame Vijayalakshmi hospitalized

சீ.வி.குமார் தயாரித்து இயக்கும் “கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல பிரபல இயக்குனர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சீ.வி.குமார் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரித்து இயக்கியிருக்கும் படம் “கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்”

பலரின் பாரட்டை பெற்ற “மாயவன்” திரைப்படத்திற்கு பிறகு சீ.வி.குமார் இயக்கும் இரண்டாவது படம் இது.

தேவைகள் ஆசையாக மாறும் போது அதனால் ஏற்படும் விளைவுகளே “கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்” படத்தின் கதைக்கரு.

பிரியங்கா ருத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அஷோக், வேலு பிரகாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், பகவதி பெருமாள் (பக்ஸ்) , டைரக்டர் ராம்தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாக அனைவரின் பாராட்டையும் பெற்று, படத்திற்காக எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது. இப்படம் மார்ச் வெளியீடாக வரும் என எதிர்பார்க்கபடுகிறது .

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பு, இயக்கம் – சீ.வி.குமார் (திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்)
இசை – ஹரி டஃபுசியா
இசை (OST) – ஷ்யமளங்கன்
இசை மேற்பார்வை – சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு – கார்த்திக் K தில்லை
படத்தொகுப்பு – ராதாகிருஷ்ணன் தனபால்
கலை – விஜய் ஆதிநாதன், சிவா
சண்டைப்பயிற்சி – ஹரி தினேஷ்
சவுண்ட் டிசைன் – தாமஸ் குரியன்
நடனம் – சாண்டி
மக்கள் தொடர்பு – நிகில்
நிர்வாக தயாரிப்பு – S.சிவகுமார்

ஒரே காட்சியில் ஒரு முழுநீளத் திரைப்படம் – தடயம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சமூகத்தில் மலிந்து கிடக்கிற காதலில்லாத திருமணங்களின் ஊடே, ஒரு திருமணமில்லாத காதல் பற்றியதோர் திரைப்படம், தடயம்.

ஒரு பெண்ணின் மனதை புரிந்து கொள்ள இயலாத, உடலால் அறத்தை மதிப்பீடு செய்கிற ஒரு ஆண் மனதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தானும் தன் காதல் நினைவுகளுமாய் தன்னந்தனியே படுத்த படுக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிற கதாநாயகியை அவளின் காதலன் ஒரு மழைநாளில் சந்திக்கிறான். அவள் வசிக்கும் குடிலில் அவன் நுழைகிற போது அடைமழை அடித்துக் கொட்டுகிறது. காதலின் பரவசத்தை உறிஞ்சிக் கொள்கிற மழை. அந்த ஒற்றை அறைக்குள்ளான, அந்த ஒற்றை சந்திப்பை உயிரோட்டமான திரைக்கதையின் வாயிலாக விறுவிறுப்பாக, தாளா பரவசங்களின் காட்சிப் படிமங்களாக மாற்றித் தந்திருக்கும் திரைப்படம் தான் தடயம்.

இத்திரைப்படத்தை, தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவரான தமயந்தி எழுதி இயக்கியிருக்கிறார். இவர் இயக்குநர்கள் சமுத்திரகனி, மீரா கதிரவன், பரத் பாலா ஆகியோருடன் பணிபுரிந்திருக்கிறார். மேலும் பல மொழிபெயர்ப்பு நாவல்களையும் எழுதியிருக்கிறார். ஆனந்த விகடன் வார இதழில் வெளியான “தடயம்” சிறுகதையே இந்தப் படத்தின் கரு என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் கதாநாயகியாக கனி குஸ்ருதி நடித்திருக்கிறார். “அபிநயா” குழுவில் பயிற்சி பெற்ற இவர், 2000 முதல் 2006 வரை வசந்தசேனா கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். “பாரத் ரங் மகோத்சவ்” தேசிய திரைப்பட விழா உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் கலந்திருக்கிறார். நாயகனாக கணபதி முருகேசன் அறிமுகமாகிறார். நான்கு வருடங்கள் கூத்துப்பட்டறையில் முழுநேர நடிகராக இருந்த இவர், இருபதிற்கும் மேற்பட்ட தயாரிப்புகளில், 300க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். இசையமைப்பாளராக ஜஸ்டின் கெனன்யா அறிமுகமாகிறார். ப்ரவீன் பாஸ்கர் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.

முழுக்க முழுக்க “கிரவுட் ஃபண்டிங்” தயாரிப்பில் சுயாதீன திரைப்படமாக உருவாகியிருக்கும் “தடயம்” விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
உங்கள் மேலான அன்பையும்
ஆதரவையும் தொடர்ந்து விரும்பும்…

சிகரெட் பிடித்து, துப்பாக்கி தூக்கி.. சேரனா இப்படி..?! ; விநியோகஸ்தர்களை அதிரவைத்த ’ராஜாவுக்கு செக்’..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் சேரன் குடும்ப உறவுகளின் மேன்மைகளைச் சொல்லும் விதமாக படங்களை இயக்குபவர். அதனால் அப்படிப்பட்ட அம்சங்கள் கொண்ட கதைகளை இயக்குவது மட்டுமல்ல, நடிப்பு என வரும்போதும் குடும்ப கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கக்கூடியவர்.. அப்படிப்பட்டவர் ‘ராஜாவுக்கு செக்’ என்கிற ஆக்சன் கலந்த எமோஷனல் த்ரில்லர் படத்தில் அதிரடியாக நடித்துள்ளார்.

சேரன் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது, இது தன் நடிப்புக்கு சவால் என்று தெரிந்தே ஒப்புக்கொண்டாராம்.

காரணம் கதையில் சொல்லப்பட்டுள்ள விஷயமும் அது ஏற்படுத்தப்போகும் தாக்கமும். வழக்கமாக சேரன் நடிக்கும் படங்கள் இப்படித்தான் இருக்கும் என்று ரசிகர்களுக்கு ஒரு அபிப்ராயம் இருக்கும். ஆனால் அதை முற்றிலும் உடைக்கும் விதத்தில் உருவாகியுள்ளது ‘ராஜாவுக்கு செக்.’ அதை மெய்ப்பிப்பது போல ஒரு நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.

சமீபத்தில் இந்தப்படத்தின் முதல் பிரதி முக்கியமான சிலருக்கு திரையிட்டு காட்டப்பட்டுள்ளது.. இது சேரன் படம், குடும்பக் கதையாக இருக்கும் என்கிற நினைப்பில் படம் பார்க்க ஆரம்பித்தவர்களுக்கு செம ஷாக்.. காரணம் படம் முழுவதும் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு பாணியில் இருந்ததுதான். சேரனோ சிகரெட் பிடித்து, துப்பாக்கி தூக்கி வேற லெவெலில் நடித்துள்ளதும், கதை செம விறுவிறுப்பாக நகர்ந்ததும் தானாம்.

குறிப்பாக காட்சிகளில் எப்போதுமே ஒரு எமோஷனும் த்ரில்லும் இருந்துகொண்டே இருந்ததாம். மிரட்டலான அதே சமயம் உணர்வுப்பூர்வமான இப்படிப்பட்ட திரில்லர் படத்தை பார்த்ததே இல்லை என்று பார்த்தவர்கள் மிரண்டு போக…

இந்த தகவல் விநியோகஸ்தர்கள் வட்டாரங்களில் கசிந்ததுமே, படத்திற்கான வியாபாரமே இப்போது வேறுவிதமாக மாறிவிட்டது என்கிறார்கள்..

நல்ல எமோஷனல் படத்திற்கு காத்திருக்கும் ரசிகர்களுக்கும், நல்ல திரில்லர் படத்திற்கு காத்திருக்கும் ரசிகர்களுக்கும் சரியான வேட்டை ‘ராஜாவுக்கு செக்’ என்கிறார்கள் படம் பார்த்தவர்கள்…

More Articles
Follows