அடுத்த வாரம் இருட்டு அறையில் முரட்டு குத்து பாக்க ரெடியா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஹரஹர மஹாதேவகி’ படம் எந்த மாதிரியான படம் என்பது தங்களுக்னு நினைவிருக்கலாம்.

அந்த படம் வெற்றியை தொடர்ந்து டைரக்டர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் அடுத்ததாக ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இதில் நாயகன், நாயகியாக கவுதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா நடித்துள்ளனர்.

அடல்ட் ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இதில் ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தை மே 4ம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

என்ன ரசிகர்களே இருட்டு அறையில் முரட்டு குத்து பார்க்க தயாராக இருக்கீங்களா?

ஹரஹர மஹாதேவகி படம் பிடிக்கலேன்னா இந்த படமும் நிச்சயம் பிடிக்காது என கவுதம் கார்த்திக் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Adult Horror movie Iruttu Araiyil Murattu Kuththu release on 4th May 2018

விஷாலுடன் மோத தேதியை அறிவித்தார் அருள்நிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட் தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக 50 நாட்களாக (மார்ச் 1 முதல் ஏப்ரல் 19 வரை) புதுப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை.

தற்போது ஸ்டிரைக் முடிவுக்கு வந்துவிட்டதாலும் கோடை விடுமுறை ஆரம்பித்துவிட்டதாலும் படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

வருகிற மே 11ஆம் தேதி விஷால் தயாரித்து நடித்துள்ள இரும்புத்திரை படம் வெளியாகிறது.

இது தேதியில் மாற்றம் இருக்கும் என சில தினங்களுக்கு அறிவித்திருந்தார் விஷால். ஆனால் தற்போது இந்த தேதியிலேயே படம் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர்.

மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுடன் நாயகியாக சமந்தா நடிக்க, வில்லனாக அர்ஜீன் நடித்துள்ளார். யுவன் இசையமைத்துள்ளார்.

இதே நாளில் மு. மாறன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள `இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படமும் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் அருள்நிதியுடன் மஹிமா நம்பியார், அஜ்மல், வித்யா பிரதீப், சாயா சிங், சுஜா வருணி, ஆனந்த்ராஜ், ஜான் விஜய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இப்படமானது ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தி த்ரில்லர் கதையாக உருவாகியுள்ளது.

ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் டில்லி பாபு இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.

ரெமா மற்றும் வேலைக்காரன் படங்களை தயாரித்த 24 ஏஎம் ஸ்டூடீயோஸ் நிறுவனத்தின் வெளியீட்டு நிறுவனமான 24 பிஎம் என்ற நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

இந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Vishals Irumbu Thirai and Arulnithis Iravukku Aayiram Kangal clash on 11th May 2018

ஹாரர் ஆர்வமில்லை; அரசியல்ன்னா அலர்ஜி; அலறும் அரவிந்த்சாமி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரவிந்த் சாமி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. சித்திக் இயக்கியுள்ள இப்படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார்.

மேலும் நாசர், சூரி, ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா ஆகியோர் நடித்துள்ளார்கள்.

அம்ரேஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரமேஷ் கண்ணா வசனம் எழுதியுள்ளார்.

இப்படம் மே 11ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது அரவிந்த்சாமி பேசியதாவது…

‘இப்படம் ஏற்கனவே மலையாளத்தில் வெளியாகியுள்ளது. அதில் சில மாற்றங்கள் செய்து தமிழில் படம் உருவாகி இருக்கிறது. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கிறது.

வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன். தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்தேன். அப்படத்தை தொடர்ந்து அந்த கதாபாத்திரம் போல் 15 படங்கள் வந்தது. ஆனால், நான் நடிக்க வில்லை.

ஹீரோ, வில்லன் என்று இல்லாமல், நல்ல கதாபாத்திரம் அமைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். எனக்கு பிடிக்காதது ஹாரர் படம் தான். அதில் நடிக்க மாட்டேன். பார்க்கவும் மாட்டேன்.

பேய் இருக்கா, இல்லையா என்ற கேள்விக்கு முதலில் மனிதர்கள் இருக்கிறார்களா? முதலில் நல்ல மனிதரை தேடுவோம். அதன் பின் பேய்யை இருக்கா இல்லையா என்று தேடுவோம்.

அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்கிறார்கள். எனக்கு அரசியல் பற்றி தெரியாது. ஆனால் மக்கள் பிரச்சினை என்றால் குரல் கொடுக்காமல் இருக்க மாட்டேன்’ என்றார்.

இப்படத்தின் தயாரிப்பாளர் முருகன் பேசும்போது…

‘மற்ற ஹீரோக்கள் போல் அரவிந்த் சாமி கிடையாது. அவர் முன் பணம் வாங்காமல் நடித்து கொடுத்துள்ளார். மேலும் மற்ற நடிகர்கள் படத்தில் நடித்து முடித்து விட்டால், தன்னுடைய வேலை முடிந்தது என்று நினைப்பார்கள்.

ஆனால், அரவிந்த் சாமி, படத்தின் பின்னணி வேலைகள் நடக்கும்போது எப்போது முடியும் என்று மிகவும் ஆர்வமாக தெரிந்துக் கொண்டு இப்படம் வெளிவருவதற்கு பெரும் உதவி செய்து வருகிறார்’ என்றார்.

I am not interested in Horror movies and Current Politics says Arvind Swamy

2.0 படத்திற்கே சவாலாக அமையும் காலா; பெரும் லாபத்தில் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் கால்ஷீட் கிடைத்தால் அந்த தயாரிப்பாளர் பாக்கியசாலி என்ற ஒரு சொல் தமிழ் சினிமாவில் உண்டு.

அதற்கு காரணம் ரஜினியை வைத்து படம் எடுத்தால் நிச்சயம் லாபம் அடைந்துவிடலாம் என்பதே.

தற்போது ரஜினியை வைத்து 2.0 படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

ஷங்கர் இயக்கிய இப்படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ. 400 கோடியை நெருங்கிவிட்டது.

அண்மையில் இதன் சாட்டிலைட் உரிமையை பிரபல நிறுவனம் ரூ.110 கோடிக்கு வாங்கியது.

இந்நிலையில் 2.0 படத்திற்கு போட்டியாக காலா படத்தின் பிசினஸ் கலக்கி வருகிறது.

காலா படத்தின் பட்ஜெட் ரூ. 80 கோடி என கூறப்படுகிறது.

இதன் வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் ரூ. 100 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இதன் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி பெற்றது.

இது சுமார் ரூ. 75 கோடிக்கு விலை போயிருப்பதாக தெரிய வந்துள்ளது.

இவை தவிர காலா டிஜிட்டல் உரிமம், இன்னும் பிற உரிமைகள் என அதுவும் பல கோடிக்கு விற்பனையாகும் என சொல்லப்படுகிறது.

எனவே தயாரிப்பாளர் தனுஷ் அவர்கள் ரஜினியால் பெரும் லாபத்தை பார்த்துவிடுவார் என எதிர்பார்க்கலாம்.

மருமகனுக்கு மாமனாரால் லாபம் இருக்காதா பின்னே…

Rajinikanths latest movie Kaala trade updates

யோகி பி உடன் பணிபுரிந்தது ஒரு வரப்பிரசாதம்… : கணேஷ் சந்திரசேகரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அன்பு மயில்சாமி நடித்துள்ள திரிபுரம், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள வேட்டைநாய் போன்ற படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன்.

இவர் தற்போது விவேக், தேவயானி ஜோடியாக நடித்துள்ள எழுமின் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

சிறுவர்களின் தற்காப்பு கலையை மையமாக வைத்து உருவாக்கபட்டுள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

இதில் விவேகம், டிக் டிக் டிக், காலா போன்ற படங்களில் பாடல் பாடிய ராப் சிங்கர் யோகி பி, கணேஷ் சந்திரசேகரனின் இசையில் பா.விஜய் வரிகளில் எழுமின் படத்தில் எழுச்சிமிகு பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

இதுகுறித்து இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன் கூறும்போது…

‘எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது விவேகம், டிக் டிக் டிக், காலா போன்ற பெரிய படங்களில் பணிபுரிந்த யோகி பி அவர்கள் முதலில் புதிய இசையமைப்பாளர் படத்தில் பாட ஒப்புக்கொண்டதே பெரிய விஷயம்.

அதுவும் நான் அவரை அழைத்ததும் மலேசியாவில் இருந்து இங்கே வந்தது என் இசையில் பாடிக் கொடுத்துள்ளார்.

அது மட்டும் இல்லாது நான் அவருடன் பணிபுரிய முதலில் பயந்தேன். வேலை பார்க்க பார்க்க ஒரு குழந்தை போலவே நடந்து கொண்டார்.

என்னை போன்ற புதிய இசையமைப்பாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது அவருடன் பணிபுரிந்தது.” என்றார்.

Yogi Bs New Combo With Ganny In Ezhumin Set To Rock

ஜாகுவார் தங்கத்தின் மகன் நடிகர் விஜய ஜாகுவாருக்கு திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல சினிமா சண்டை பயிற்சியாளரும், இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான ஜாம்பவான் ஜாகுவார் தங்கம் – சாந்தி ஜாகுவார் தங்கத்தின் வாரிசும், வளரும் நடிகருமான ஜா.விஜய ஜாகுவாருக்கும், வடபழனி ஆறுமுகம் – கீதா ஆறுமுகம் தம்பதியரின் மூத்த மகள் ஏ.நிவேதாவிற்கும் 25-4-2018 காலை,வடபழனி – முருகன் கோவிலில் பெற்றோர், உற்றார், உறவினர் புடைசூழ வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது.

இத்திருமண விழாவில் கலைப்புலி எஸ்.தாணு ராஜ்கிரண், ராமராஜன், சீனு ராமசாமி, சமுத்திரகனி உள்ளிட்ட சினிமா பிரபலங்களுடன் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட அரசியல் மற்றும் நாடார் சங்க பிரமுகர்களும், மிகத் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

வந்திருந்த அனைவரையும் மணமகனின் தந்தை ஜாகுவார் தங்கமும், சகோதரர் ஜெய் ஜாகுவாரும் வரவேற்று உபசரித்தனர்.

Stunt Master Jaguvar Thangam son marriage

More Articles
Follows