தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் ஆகியவை இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
எனவே தன் அறிக்கை மூலம் இயக்குனர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
கல்வியை போதிக்கின்ற இடத்தில் காமத்தை போதிக்கவா வந்தோம். இயக்குனர் வீட்டில் பெண்களே இல்லையா? அவர்கள் கேள்வி கேட்காவிட்டாலும் நான் கேள்வி கேட்பேன் என ஆவேசமாக பதிவிட்டு இருந்தார்.
ஆனால் இதை நக்கலடித்து.. 1981ல் டிக் டிக் டிக் என்ற படத்தில் நீங்கள் மாதவியை கவர்ச்சியாக காட்டலையா? அப்போ கண் கூசவில்லையா? என கேள்வி கேட்டிருந்தார்.
அதன்பின் அதற்கு மன்னிப்பும் கேட்டிருந்தார். இது தொடர்பான அனைத்து செய்திகளையும் நம் தளத்தில் பார்த்தோம்.
இந்த நிலையில் இரண்டாம் குத்து பட சர்ச்சை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அவர்கள்.. “‘இரண்டாம் குத்து’ படத்துக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
சென்சார் போர்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஆபாச காட்சிகளை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தும்.
தமிழர்களின் பண்பாடு, கலச்சாரம் ஆகியவற்றை சீரழிக்கும் எந்தப் படங்களாக இருந்தாலும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திரைப்படங்கள் மக்களுக்கு நல்ல கருத்துக்களை கூறும் சாதனங்களாக இருக்க வேண்டும்.
கலாச்சாரத்தை சீரழிக்கும் எந்தப் படம் வந்தாலும், யாருடைய படமாக இருந்தாலும் அதனைத் தடுக்கும் வகையில் அரசு முழு கவனத்துடன் சென்சார் போர்டு மூலமாக தடைவிதிக்க தமிழக அரசு ஆவணம் செய்யும்”
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.
TN government will take steps to end obscenity in films – Kadambur Raju