மக்கள் நல இயக்கத்தை தொடங்கிய விஷால்; திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பாளர் சங்கத் தலைவர், நடிகர் சங்க செயலாளர் என பன் முகம் கொண்ட நடிகர் விஷால் இன்று தன் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

இவர் தயாரித்து நடித்த இரும்புத்திரை படத்தின் 100வது நாள் விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

அதில் இயக்குனர் மித்ரன், அர்ஜீன், சமந்தா, ரோபோ சங்கர் ஆகியோருடன் பல திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

இவர்களுடன் டைரக்டர் எஸ்ஏ. சந்திரசேகர், லிங்குசாமி, ஆர். கே. செல்வமணி, தயாரிப்பாளர் பிடி. செல்வகுமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு விஷாலை வாழ்த்தினர்.

இவ்விழாவில் விஷால் பேசும்போது…

இரும்புத் திரை சூட்டிங்கின் போது நான் ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முயற்சித்தேன். ஆனால் அதில் நான் போட்டியிடக் கூடாது என இயக்குநர் மித்ரன் வேண்டிக் கொண்டார்.

அவருடைய வேண்டுதல் நிறைவேறி விட்டது.

விரைவில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வரவுள்ளது. அதில் நான் போட்டியிட வாய்புள்ளது என்றார்.

மேலும் இன்று தன் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நல இயக்கம் என்ற புதிய அமைப்பை தொடங்கி தனிக் கொடியை அறிமுகப்படுத்தினார் விஷால்.

`அணி சேர்வோம், அன்பை விதைப்போம்’ என்ற வாசகத்துடன் கூடிய கொடியையும் இந்தக் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.

மேலும் அவர் பேசியதாவது…

மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதே அரசியலாகும். நான் வணங்கும் இரண்டு தெய்வங்கள் அன்னை தெரசா, அப்துல்கலாம்.

அப்துல் கலாமை பார்க்கும்போது அறிவு ஞாபகம் வரும். அன்னை தெரசாவைப் பார்க்கும்போது அன்பு நினைவுக்கு வரும்.

வீதியில் நடக்கும் பிரச்னையைப் பார்த்து கேள்விகேட்காவிட்டால் பிணத்துக்குச் சமம். நம் நாட்டில் கொத்தடிமைகள் இன்னும் உள்ளார்கள்.

சோதனைகளைத் தாண்டி சாதனைகள் செய்யும்போது சந்தோஷம் ஏற்படும். என்னுடைய சந்தோஷத்தையும் துக்கங்களையும் பகிர்ந்து கொள்ளவே வேண்டும்.

அரசியல் என்பது பணம் சம்பாதிக்கும் இடமாக மாறிவிட்டது. நடிகனாக சம்பாதித்துவிட்டு குடும்பத்துடன் இருக்க முடியாது.

நிஜ வாழ்க்கையில் மக்களுக்கு நல்லது செய்யும் அனைவரும் அரசியல்வாதிகளே. அரசியல் என்பது மக்கள் பிரச்னையைத் தீர்ப்பதுதான். எனக்குச் சொந்தமாக இருப்பதெல்லாம் ரசிகர்களாகிய நீங்கள்தான்.” என்று ரசிகர்கள் முன்னிலையில் பரபரப்பாக பேசினார்.

Actor Vishal convert his fans club into Makkal Nala Iyakkam

விஜய் படத்திற்காக வாட்ச் மேனாக மாறிய ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பத்து படங்களை ஒப்புக் கொண்டு ஒவ்வொன்றாக நடித்து வருகிறார் ஜீ.வி.பிரகாஷ்.

‘4ஜி’, ‘ஐங்கரன்’, ‘அடங்காதே’, ‘குப்பத்து ராஜா’, ‘100% காதல்’, ‘சர்வம் தாள மயம்’, ஜெயில் ஆகிய படங்கள் தற்போது ஜீ.வி.பிரகாஷ் கைவசம் உள்ளன.

இவையில்லாமல் விஜய் இயக்கத்திலும் ஒரு படத்திலும் நடித்து வந்தார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘செம’.

இந்நிலையில், விஜய் இயக்கிவரும் படத்தின் தலைப்பு ‘வாட்ச்மேன்’ என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம்.

விரைவில் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

இதில் நாயகன் ஜிவி. பிரகாஷ் வாட்ச் மேனாக நடிக்கிறாரா? அல்லது வேறு ஒரு பாத்திரமா? என்பது குறித்த தகவல் இல்லை.

Vijay and GV Prakash teams up for Watch Man movie

ஆகஸ்ட் 31ஆம் தேதி 6 படங்கள் ரிலீஸ்; தயாரிப்பாளர் சங்க விதி என்னாச்சு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தியேட்டர் பற்றாக்குறை, ஒரே நாளில் 10 படங்கள் ரிலீஸ் ஆகிய பிரச்சினைகளால் இனி வாரத்திற்கு 3 அல்லது 4 படங்களை மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் என விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுத்தது.

ஆனால் அவற்றை மீறி வாரத்திற்கு குறைந்தது 5 படங்களாவது ரிலீஸ் ஆகிறது.

இந்த வாரம் ஆகஸ்ட் 30, 31 ஆகிய தேதிகளில் இதுவரை 6 படங்கள் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா நடித்துள்ள ‘இமைக்கா நொடிகள்’ படம் ஆகஸ்ட் 30ல் வெளியாகிறது.
மற்ற படங்கள் ஆகஸ்ட் 31ல் வெளியாகவுள்ளது.

பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, விக்ரம்பிரபு நடித்துள்ள ‘60 வயது மாநிறம்’ பா.விஜய் நடித்துள்ள ‘ஆருத்ரா’, அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷண், ஆத்மிகா நடித்துள்ள ‘நரகாசூரன்’, சோமசுந்தரம் நடித்துள்ள ‘வஞ்சகர் உலகம்’, தினேஷ், மஹிமா நம்பியார் நடித்துள்ள ‘அண்ணணுக்கு ஜே’ ஆகிய படங்களும் களத்தில் உள்ளன.

இதில் நரகாசூரன் படம் தள்ளிப் போக வாய்ப்புள்ளது. அதை செப்டம்பர் 13ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Six Tamil movies plans to release on 31st August 2018

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை தெலுங்கிலும் இயக்கும் சந்தோஷ் பி ஜெயக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஞானவேல் ராஜா இயக்கத்தில் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ரிலீஸான படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’.

அடல்ட் ஹாரர் காமெடிப் படமாக இது உருவாக்கப்பட்டது.

இதில், கெளதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி, ஷா ரா, கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய், மதுமிதா ஆகியோர் நடித்திருந்தனர்.

படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் பல கிடைத்தாலும் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தைத் தெலுங்கில் ரீமேக் செய்யப் போகிறார் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

ஆதித் அருண் என்பவர் இதில் நாயகனாக நடிக்கிறாராம்.

தலைவர் ரஜினி படத்துக்கு ஒத்திகை பார்க்கிறேன்.. : நவாசுதீன் சித்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காலா படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இதன் ஷூட்டிங், டார்ஜிலிங் மற்றும் டேராடூனில் நடைபெற்றது.

தற்போது சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் நடைபெற்று வருகிறது. ரஜினி – விஜய் சேதுபதி சம்பந்தப்பட்டக் காட்சிகள் இங்குதான் படமாக்கப்படுகின்றன.

இந்நிலையில் கேரவனில் அமர்ந்தபடி தன் டயலாக்கை மனப்பாடம் செய்யும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நவாஸுதீன்.

அத்துடன், “என்னுடைய முதல் தமிழ்ப் படத்துக்கான டயலாக்கை ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறேன். ‘சூப்பர் ஸ்டார்’ தலைவருடன் பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது” எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய விதிமுறைகள்; ரஜினி கட்டளை!

உதயநிதி ஜோடியாக ஒரு படத்தில் அதிதிராவ்; அடுத்த படத்தில் ஆனந்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ரிலீசுக்குத் தயாராகி வரும் படம் ‘கண்ணே கலைமானே’.

இதில் தமன்னா ஹீரோயினாக நடிக்க, யுவன் இசையமைக்க, எல்லாப் பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார்.

இப்படத்தை அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் உதயநிதி.

இதில் ‘காற்று வெளியிடை’ மற்றும் செக்க சிவந்த வானம் படப்புகழ் அதிதி ராவ் நாயகியாக நடிக்கிறார்.

இயக்குநர் ராம் இதில் போலீஸாக நடிக்கிறாராம்.

இதனையடுத்து ‘தொட்டா சிணுங்கி’, ‘பிரியசகி’, ‘தூண்டில்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் அதியமான் படத்திலும் நடிக்கிறாராம் உதயநி0த.

இதில் ‘கயல்’ ஆனந்தி நாயகியாக நடிக்கிறார்.

தற்போது இதன் சூட்டிங் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

More Articles
Follows