தெலுங்கு திரையுலகையும் தெறிக்க விடும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் தயாரித்து நடித்த இரும்புத்திரை படம் அண்மையில் வெளியானது.

அறிமுக இயக்குநர் மித்ரன் இயக்கிய இப்படத்தில் நாயகியாக சமந்தா நடிக்க, வில்லனாக அர்ஜூன் நடித்திருந்தார்.
தமிழகத்தில் இப்படம் நல்ல வசூலை ஈட்டி தந்தது.

எனவே தெலுங்கில் அபிமன்யுடு என்ற பெயரில் டப் செய்து வெளியிட்டனர்.

அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதுவரை அங்கு 12 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இனிவரும் நாட்களில் இந்த வசூல் இன்னும் அதிகரிக்கும் எனவும் தெரிகிறது.

கிட்டதட்ட நேரடி தெலுங்கு படங்களுக்கு நிகரான வசூலை விஷால் அங்கு பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Irumbu Thirai Telugu version box office collection report

காலா ஜீப்பை கிப்டாக கொடுத்தார்; சொன்னதை செய்துக் காட்டிய தனுஷ்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் நேற்று முன் தினம் வெளியானது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான போது, அந்த டிசைனில் மஹிந்திரா ஜீப்பில் அமர்ந்தபடி போஸ் கொடுத்திருந்தார் ரஜினிகாந்த்.

அப்போதே அந்த ஜீப்பை தனக்கு தருமாறு மஹிந்திரா நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த் மஹிந்திரா தன் டுவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

எனவே காலா தயாரிப்பாளரான நடிகர் தனுஷூம் சூட்டிங் முடிந்தவுடன் நிச்சயம் தருவதாக ரிப்ளை செய்திருந்தார்.

தற்போது காலா ரிலீஸானதை முன்னிட்டு அந்த மஹிந்திரா ஜீப்பை, அந்நிறுவனத்தின் உரிமையாளருக்கே பரிசாக கொடுத்துள்ளார் தனுஷ்.

அதையடுத்து ஆனந்த் மஹிந்திரா அவர்கள் நடிகர் தனுசுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

Dhanush gifted Kaala Jeep to Mahindra company

Remember I wanted the Thar used for the poster shot of for our museum?Well obliged & it’s safe at in Chennai.I asked our folks to strike a Thalaivar pose & look what fun they had!(Bala,the guy in the lungi is now known as ‘KaalaBala’)

பாமக அன்புமணியின் மனைவி சௌமியாவுக்கு •வுமன் அச்சீவர்• அவார்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அகில உலக அரிமா சங்கத் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர், காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் உள்ளிட்டோருடன் சினிமா பத்திரிகையாளர் சங்கத் தலைவர் கலந்து கொண்ட அரிமா சங்க விழா!

அரிமா சங்கம் எனப்படும் “லயன்ஸ் கிளப் இண்டர்நேஷனல்”, மக்கள் சேவையில் 100 ஆண்டுகளை கடந்து 101- வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இதையொட்டி அரிமா மாவட்டம் 324 ஏ1 சார்பில் சென்னை, கிண்டி “லீ ராயல் மெரிடியன்” நட்சத்திர ஹோட்டலில்., அரிமா மாவட்ட ஆளுனர் லயன் டாக்டர் பாபாயி அம்மா தலைமையில் சிறப்பாக பெரிய விழா ஒன்று நடந்தேறியுள்ளது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அகில உலக அரிமா சங்கத் தலைவர் லயன்.

நரேஷ் அகர்வால் மற்றும் முன்னாள் மத்திய சுகாதாத்துறை அமைச்சர் டாக்டர். அன்புமணி ராமதாஸ், அவரது துணைவியார் சவுமியா அன்புமணி, சர்வதேச அரிமா இயக்குனர்கள், ஆளுனர்கள், துணை ஆளுனர்கள், முன்னாள் இயக்குனர்கள், ஆளுனர்கள்… முறையே லயன் ஐ.டி.தனபாலன், லயன்.கே.தனபால், லயன். பிரகாஷ்குமார், லயன்.ஜி.எம்.ராஜரத்தினம், லயன். ஆர்.பி.சத்யநாராயணா, லயன். ஆர்.பிரதிபாராஜ், லயன். குமார், லயன். என்.எஸ்.சங்கர், லயன். ஜி.ராமசாமி, லயன்.

குலாம் உசேன், லயன். கே.ஜெனநாதன் உள்ளிட்டோருடன் சினிமா பத்திரிகையாளர் சங்கத் தலைவர் லயன். டி.ஆர்.பாலேஷ்வரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரிகளில் நன்றாக படிக்கும் 50 மாணவ மாணவிகளுக்கு., மொத்தத்தில், மூன்று லட்சம் ரூபாய் ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டதோடு இவ்விழாவையொட்டி., அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டுக்கு நான்கு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும்., தன் கணவர் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.அன்புமணி ராமதாஸுடனும், தந்தையார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியுடனும் இவ்விழாவில் கலந்து கொண்ட “பசுமை தாயகம்” இயக்குனர் சவுமியா அன்புமணிக்கு அவரது சேவையை பாராட்டி லயன்ஸ் கிளப் சார்பில் சிறந்த “வுமன் அச்சீவர்” அவார்டும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இறுதியாக., மேடையில் டாக்டர் அன்புமணி ராமதாஸை வைத்துக் கொண்டே, லயன்ஸ் கிளப் நிர்வாகி ஒருவர்., பாராளுமன்ற, சட்டமன்ற பொது தேர்தல், மோதல்களை விட., இங்கு இவ்வளவு ஒற்றுமையாக வீற்று இருக்கும் எங்களது லயன்ஸ் கிளப் தேர்தல்கள் கடுமையாகவும், கணிக்க முடியாதபடியும், யார் காலை யார் வாருவார்? யாருக்கு யார் ஆதரவு தருவார்..? என்பது தெரியாத, புரியாத புதிராக இருக்கும்… என பேசியது அவ்வளவு பெரிய சபையில், பெரிய அளவில் ஆமோதிப்பு சிரிப்பலையை ஏற்படுத்தியது சுவாரஸ்யம்!

PMK party fame Sowmiya Anbumani receives Women Achiever award

#Breaking: கமலின் விஸ்வரூபம்2 பட ட்ரைலரை வெளியிடும் 3 பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தயாரித்து இயக்கி நடித்துள்ள படம் விஸ்வரூபம் 2.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, பூஜா குமார் நாயகிகளாக நடித்துள்ளனர்.

இப்படம் தயாராகி நீண்ட நாட்கள் ஆனபோதும் ஒரு சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிக் கொண்டே போனது.

இந்நிலையில் சற்றுமுன் இப்படி ட்ரைலர் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தள்ளனர்.

வருகிற ஜூன் 11ம் தேதி மாலை 5 மணிக்கு இந்த டிரைலரை பாலிவுட் நடிகர் அமீர்கான் வெளியிடவுள்ளார் என அறிவித்து உள்ளனர்.

இந்தி பதிப்பை அமீர்கான் வெளியிடுகிறார். ஸ்ருதிஹாசன் தமிழ் பதிப்பை வெளியிட, தெலுங்கு பதிப்பை ஜூனியர் என்டிஆர் வெளியிடுகிறார்.

சந்தீப் கிஷன்- அன்யா சிங் ஜோடியை இயக்கும் கார்த்திக் ராஜு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘திருடன் போலீஸ்’, ‘உள்குத்து’ ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் ராஜு.

அவருடைய மூன்றாவது படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்தப் படம் தயாராக இருக்கிறது.

இந்தப் படத்தில், சந்தீப் கிஷன் ஜோடியாக அன்யா சிங் நடிக்கிறார்.

‘லெக்ஸ் டலியானிஸ்’ மற்றும் ‘கைதி பேண்ட்’ ஆகிய பாலிவுட் படங்களில் நடித்துள்ள அன்யாவுக்கு, இதுதான் முதல் தமிழ்ப்படம்.

பிகே வர்மா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு எஸ்.தமன் இசையமைக்கிறார்.

சுப்பு தயாரிக்கும் இந்தப் படத்தில், தமிழில் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இதே வேடத்தை, தெலுங்கில் ‘வெண்ணிலா கபடிக்குழு’ கிஷோர் நடிக்கிறார்.

ஹைதராபாத்தில் இதன் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. 40 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

நாடோடிகள் 2 முடித்துவிட்டு நாடோடிகள் 3 அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘நாடோடிகள்’.

2009-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கி நடைபெற்றது.

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி உள்ளிட்ட பலர் நடித்து வந்தார்கள்.

நந்தகோபால் என்பவர் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முழுமையாக இன்று (ஜுன் 8ம் தேதி) முடிவுற்றது.

இதற்கான புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

மேலும், ‘நாடோடிகள் 3’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதியளித்திருக்கிறார்
சமுத்திரக்கனி.

More Articles
Follows