தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஒன்லைன்…
இரு வேறு சாதி பிரிவைச் சேர்ந்த பையனும் பொண்ணும் காதலிக்கிறார்கள். இதனால் இரு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளே படத்தின் கதை. ஆனால் கிளைமாக்ஸ் எதிர்பாராத ஒன்று.
கதைக்களம்…
மதுரை கதைக்களமாக இருப்பதால் மதுரையின் நாயகன் சசிகுமார் கொடுக்கும் வாய்ஸ் ஓவரில் படம் தொடங்குகிறது.
படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான சாம் ஜோன்ஸ் ஏழை மாணவன். ஒரு கல்லூரியில் படிக்கிறார். இவரின் தந்தை ஆட்டோ டிரைவர் முனீஸ் காந்த்.
அதே கல்லூரியில் படிக்கும் வசதியான பெண் ஆனந்தி. இவரின் அப்பா வெங்கடேஷ். பெரியப்பா வேலராமமூர்த்தி. இவர்கள் ஜாதி கட்சியை சேர்ந்த பிரபலங்கள்.
இந்த நிலையில் இருவருக்கும் காதல் மலர ஒரு கட்டத்தில் சாதியால் பிரச்சனை உருவாகிறது.
அதன் பிறகு என்ன ஆனது? காதலர்கள் இணைந்தார்களா? காதல் வென்றதா? சாதி வென்றதா? கௌரவம் வென்றதா? என்பதே படத்தில் கதை.
கேரக்டர்கள்…
சாந்தமான முகத்துடன் சாம் ஜோன்ஸ். அதுதான் இவருக்கு பலமும் பலவீனமும்.. இவருக்கு ரொமான்ஸ் பெரிதாக வரவில்லை. அதே சமயம் கோபமும் பெரிதாக வரவில்லை.. வில்லனை எதிர்த்துப் பேசும் காட்சிகளில் மெச்சூரிட்டியே இல்லை.
ஆனந்தி ஒரு திறமையான அழகான நடிகை. சின்ன சின்ன முக பாவனைகளால் கவருகிறார். கிளைமாக்ஸ் காட்சியில் ஆனந்தி எடுக்கும் முடிவு சாதியை எதிர்க்கும் கட்சிகளுக்கும் குடும்பத்திற்கும் மரண அடி.
அவனை வெட்டுடா.. அதாண்டா கௌரவம்.. என்ற அதே பழைய வசனங்களோடு வேலராமமூர்த்தி வெங்கடேஷ் நடித்துள்ளனர். வேலராம மூர்த்தியின் ஆக்டிங் பல காட்சிகள் ஓவராக உள்ளது.
ரஜினி பக்தராக, ஆட்டோ ஓட்டுநராக முனீஸ்காந்த். நதி படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளார்.
ஆனந்தியின் மாமாவாக கரு பழனியப்பன். தன் வழக்கமான நக்கல் நையாண்டியுடன் சிறிது வில்லத்தனம் செய்திருக்கிறார். ஆனால் இவர் தலையில் விக் இவருக்கு சரியாக செட் ஆகவில்லை. இவரின் அல்லக்கையாக கோடங்கி வடிவேலு நடித்துள்ளார்.
டெக்னீசியன்கள்…
திபு நினன் தாமஸ் இசையில் பாடல்கள் ஓகே தான். பெரிதாக கவரவில்லை பின்னணி இசை ரசிக்க வைக்கிறது.. ஒளிப்பதிவு படத்திற்கு பிளஸ். ஒளிப்பதிவில் தன்னுடைய அனுபவத்தை கொடுத்து காட்சிகளை ரசிக்க வைத்துள்ளார் எம்எஸ் பிரபு.
தயாரிப்பு : மாஸ் சினிமாஸ்
இயக்கம் – தாமரை செல்வன்.
படத்தில் இரண்டு மணி நேரம் வரை வழக்கமான காதல் காட்சிகளையும்.. வழக்கமான ஜாதி காட்சிகளையும்.. வழக்கமான கல்லூரி காட்சிகளையும்.. மாணவர்கள் மோதலையும் காட்டியே போர் அடிக்க வைத்து விட்டார் தாமரைச்செல்வன். இதுவே ஓடுது… ஓடுது.. ஓடிட்டே இருக்கே.!?
கிளைமாக்ஸ் காட்சி வித்தியாசமாக உள்ளது. ஒருவேளை கிளைமாக்ஸ் காட்சியை முதலில் சொல்லித்தான் நடிகை ஆனந்தி இந்த படத்திற்காக ஒப்பந்த செய்திருப்பார் என்னவோ.?
ஆக.. இந்த ‘நதி’… ஓடுது.. ஓடிட்டே இருக்கே.!?
NADHI movie review and rating in Tamil