தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஸ்டோரி…
கன்னியாகுமரி பகுதியில் ரக்சன் மலினா தீனா ராகுல் ஸ்வேதா உள்ளிட்ட பலர் ஒன்றாக படித்த பள்ளி மாணவர்கள்..
இதில் நாயகி மலினா மீது நாயகன் ரக்ஷனுக்கு காதல்.. ஆனால் தன் காதலை சொல்லாமலேயே பள்ளி படிப்பை முடித்து விடுகின்றனர்..
படிப்பை முடித்த இவர்கள் கல்லூரி பின்னர் வேலை திருமணம் என ஒவ்வொருவரும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பணியிடங்களில் இருக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் இவர்கள் படித்து தேர்வு எழுதிய அந்த சமயத்தில் சிலர் முறைகேடு செய்து தேர்வு எழுதியதாக ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதனை எடுத்து ஒரு வித்தியாசமான தீர்ப்பை அந்த கோர்ட் வழங்குகிறது.
அதாவது இந்த வகுப்பு மாணவர்கள் மீண்டும் மூன்று மாத காலம் படித்து தேர்வு எழுதி அனைவரும் நியாயமான முறையில் பாஸாக வேண்டும் அப்பொழுதுதான் அவர்களின் கல்வித் தகுதி செல்லுபடியாக என தீர்ப்பு வழங்கப்படுகிறது.
அதன்படி அந்த வகுப்பு மாணவர்கள் மீண்டும் அனைவரும் பள்ளிக்கு திரும்புகின்றனர்..
அதன் பிறகு என்ன நடந்தது மீண்டும் பள்ளியில் படித்து பாஸ் மார்க் பெற்றார்களா.? நாயகன் ரக்ஷனின் காதல் என்ன ஆனது? நாயகி மலீனாவுக்கு திருமணம் ஆகி விட்டதா? மற்ற மாணவர்களின் நிலை என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்…
Rakshan As Karthik
Malina As Priyadharshini
Dheena As Salim
Rahul As Gautham
Swetha Venugopal As Saranya
Muthazhagan As Raghav
Melvin Dennies As Joseph
Munishkanth As Karthikeyan (PT Sir)
Arun Kurian As Arjun
Akila As Jennifer(Maths Miss)
Ashika Kader as lintosha
Natalie Lourds As Shilpha
Vishvath as யோகி
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நாயகன் துல்கரின் நண்பராக நடித்த ரக்சன் இந்த படத்தில் நாயகனாக களம் இறங்கி இருக்கிறார்.. கொஞ்சம் அப்பாவித்தனம் கலந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.. பள்ளி மாணவனாக நடிக்கும் போது போதுமான மெச்சூரிட்டி இல்லை.. ஆனால் நிகழ்கால கேரக்டரை சிறப்பாக செய்து இருக்கிறார்..
படத்தின் ஹீரோவாகவே தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார் தீனா.. இவரது பேச்சு ஆங்காங்கே ரசிக்க வைத்தாலும் சில இடங்களில் கடி கொடுக்கிறது..
நாயகி மலீனா & தோழி ஸ்வேதா இருவரும் அழகிலும் நடிப்பிலும் சரி கவர்கின்றனர்.. பள்ளிப் பருவத்தில் வந்த காதலுக்கும் அதன் பின்னர் வரும் காதலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதை தன் நடிப்பிலும் காட்டி இருக்கின்றனர்..
பிடி மாஸ்டராக முனீஸ் காந்த் நடித்திருக்கிறார்.. கண்டிப்பான ஆசிரியராக இருந்த இவர் 10 வருடங்களில் பக்குவப்பட்ட ஆசிரியராகவும் நடித்திருக்கிறார்..
இவர்களுக்கு இணையாக ராகுலும் தன்னடிப்பை காட்டியிருக்கிறார் குண்டாக இருப்பதால் படும் இன்னல்களையும் அதன் பின்னர் தன் காதலை தன் கல்யாணத்தைக் கூட நண்பரிடம் சொல்ல முடியாமல் தவித்து தருணங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்..
டெக்னீசியன்ஸ் …
Writter & Director – Raako.Yoagandran
Cinematographer- Gopi Duraisamy
Music – Sachin Warrier
Editors – Balamurali, Shashank Mali
Art Director – Prem Karunthamalai
Lyrics – Thamarai
Costume Designer – Ramya Sekar
PRO – Sathish Kumar
Producers – Raghu Yelluru – Ramesh Panchagnula – Janardhan Chowdary – Raako.Yoagandran
பெண் கவிஞர் தாமரை பாடல்களுக்கு எப்போதுமே ஒரு தனி சிறப்பு உண்டு.. அதாவது பாடல் வரிகள் இலக்கிய நயத்துடனும் கவிதை நயத்துடனும் காணப்படும்.. இந்தப் படத்தின் பாடல்களில் அதை காண முடிகிறது..
சச்சின் வாரியார் என்பவர் இசை அமைத்திருக்கிறார்.. மெலோடி பாடல்கள் காதலர்களை நிச்சயம் கவரும்..
கோபி துரைசாமி என்பவர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. கிட்டத்தட்ட பத்து வருடங்கள் இடைவெளியை வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார்..
பாலமுரளி & சஷாந்த் மாலிக் இருவரும் எடிட்டிங் செய்துள்ளனர்.. படத்தின் நீளத்தை குறைத்து இருந்தால் இந்த மறக்கமாம் நெஞ்சம் நிச்சயம் மறக்க முடியாத திரைப்படமாக அமைந்திருக்கும்.. தீனாவில் காமெடி நிறைய இடங்களில் எடுபட்டாலும் சில இடங்களில் பேசிப் பேசி பேசி வெறுப்பு ஏற்றுவதாக அமைந்துள்ளது..
96 மற்றும் முதல் நீ முடிவும் நீ ஆகிய படங்களில் நாம் பார்த்த பள்ளி நண்பர்களின் ரீயூனியன் தான் இந்த படம். ஆனா இதில் கொஞ்சம் மாறுபட்டு வேறு ஒரு கதைக்களத்தை அமைத்திருக்கிறார் இயக்குனர் ராக்கோ. யோகேந்திரன்
முன்னாள் மாணவர்கள் ஒரு பொது இடத்தில் அல்லது அதே பள்ளியில் ஒன்று கூடுவதை பல படங்களில் பார்த்திருக்கிறோம்.. ஆனால் இதில் மீண்டும் படிக்கச் சொல்லி தேர்வு எழுத சொல்லி புதிய திரைக்கதை அமைத்திருக்கிறார் இது நடக்காத காரியம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.. எனவே லாஜிக் பார்க்காமல் இந்த மறக்காத நெஞ்சத்தை பார்க்கலாம்..
வாழ்க்கையில் எத்தனை காலகட்டங்களை நாம் கடந்து சென்றாலும் பள்ளி பருவத்தையும் நண்பர்களை நிச்சயமாக மறக்க முடியாது.. அப்படி ஒரு நினைவை இந்த படம் பார்ப்பதன் மூலம் உங்கள் நெஞ்சங்களில் அந்த நினைவுகள் நிழலாடும்..
Marakkuma Nenjam movie review