மணல் கயிறு 2 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : எஸ்வி சேகர், விசு, ஜெயஸ்ரீ, அஸ்வின் சேகர், பூர்ணா, ஜெகன், சாம்ஸ், சோனியா, டெல்லி கணேஷ், சுவாமிநாதன் மற்றும் பலர்.
இயக்கம் : மதன்குமார்
இசை : தரன் குமார்
ஒளிப்பதிவாளர் : கோபி
எடிட்டிங்: அத்தியப்பன் சிவா
பி.ஆர்.ஓ.: விஜயமுரளி
தயாரிப்பாளர் : முரளி ராமசாமி (ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்)

கதைக்களம்…

எஸ்வி சேகர், விசு, ஜெயஸ்ரீ (இவர்கள் மூவரும் 35 வருடங்களுக்கு முன்பே முதல் பாகத்தில் நடித்தவர்கள். இவர்களே இரண்டாம் பாகத்திலும் அதே கேரக்டரில் நடித்திருப்பது ஆச்சரியமே)

நாரதர் நாயுடு விசு ஒரு கல்யாண புரோக்கர். இவரிடம் பெண் பார்க்க சொல்லும் எஸ்.வி. சேகர் எட்டு நிபந்தனைகள் விதிக்கிறார்.

எட்டு கன்டிசன்களுக்கு ஏற்ற ஒரு பெண் கிடைத்துவிட்டாள் என்று பொய்யை கூறி ஜெய்ஸ்ரீ கட்டி வைத்து விடுகிறார் விசு.

இதனால் விசுவை வெறுக்கும் எஸ்வி. சேகர் என்ன செய்தார்? என்ற தொடக்கத்துடன் இரண்டாம் பாகம் தொடர்கிறது.

தனக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டுமென்றால், அதுபோன்ற வேற எட்டு கன்டிசன்களை போடுகிறார் எஸ்வி. சேகரின் மகள் பூர்ணா.

இதிலும் நாரதர் நாயுடு தன் வேலையை காட்டி அஸ்வினை பூர்ணாவுக்கு கட்டி வைக்கிறார்.

இதுவும் பொய் என்று தெரிந்த பூர்ணா, எஸ்வி சேகர் குழு என்ன செய்கிறார்கள் என்பதை இந்த இரண்டாம் பாக மணல் கயிறு.

கதாபாத்திரங்கள்…

முதல் பாகம் பார்க்காதவர்கள் அப்படத்தை நினைவூட்ட முக்கிய காட்சிகளை முதல் 10 நிமிடத்தில் காட்டி ரசிக்க வைக்கிறார்கள்.

விசு சிறிது நேரமே வந்தாலும் ரசிக்க வைக்கிறார். திருமண உறவை பற்றி இவர் சொல்லும் காட்சிகள் தாய்மார்களின் அப்ளாஸை கூட அள்ளும்.

இவரும் எஸ்.வி. சேகரும் இணையும் காட்சிகள் இதில் இல்லை. இருந்தால் படம் இன்னும் ரசிக்க வைத்திருக்கும்.

எஸ்.வி. சேகர் தன் நையாண்டி மூலம் இன்னும் சிறப்பு சேர்க்கிறார்.

அவரின் டபுள் மீனிங் டயலாக் இக்கால இளசுகளுக்கு செம விருந்து.

ஜெய்ஸ்ரீ குண்டாக இருந்தாலும் அதே முக சாயலுடன் வளம் வருகிறார். இதில் எஸ்வி சேகருடன் இணைந்து கலாய்க்கவும் செய்கிறார்.

விளம்பரங்களில் அஸ்வின் சேகரின் கிண்டல் ரசிக்க வைக்கிறது. உடம்மை குறைத்தால் இன்னும் அதிக வாய்ப்புகள் கிடைக்கும். ரொமான்ஸ் எப்படி என்பதுதான் தெரியவில்லை.

பூர்ணாவுக்கு நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர். அவரும் அதில் நிறைவை தருகிறார்.

இவர்களுடன் ஜெகன், சாம்ஸ், எம்எஸ் பாஸ்கர் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் கூடுதல் பலம் சேர்கின்றனர்.

சாம்ஸின் அந்த இண்டர்வியூ காட்சி ரசிக்க வைக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

கோபியின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. தரண்குமார் இசையில் பாடல்கள் ஜஸ்ட் ஓகே.

அனிருத் பாடிய பாட்டு வரவேற்பை பெரும்.

வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம். உதாரணத்திற்கு…

  • கடவுளின் கருவறைக்கு சென்றால்… தண்ணீர் தீர்த்தம், சாதம் பிரசாதம், சாம்பல் வீபூதி ஆகிறது.
  • கணவன் மனைவி இருவரும் எதிரெதிர் திசைகளில் குடும்ப உறவை இழுத்தால், அது அறுந்து போகும். மாறாக ஒருவர் இழுக்க மற்றொருவர் அவருடன் செல்ல வேண்டும் என்று விளக்கும் காட்சி அருமை.


இயக்குநர் பற்றிய அலசல்…

குடும்பத்தோடு பார்க்கும் வகையில் மதன்குமார் படத்தை இயக்கி இருக்கிறார்.

ஆனால் முதல்பாதியில் இருந்த அந்த நகைக்சுவை இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். அதை சரி கட்டியிருக்கலாமே.

படத்தில் நாடகத்தன்மை இருப்பதை தவிர்க்க முடியாமல் செய்திருக்கலாம்.

மணல் கயிறு…. மணக்கும் உறவு

பைரவா பாடல்கள் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள பைரவா படத்துக்கு முதல் முறையாக சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இதில் நான்கு பாடல்கள் மற்றும் ஒரு தீம் மியூசிக் உள்ளது.

அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார்.

ரசிகர்களுக்கு ஏற்ற மாஸ் பாடலாக வர்லாம் வர்லாம் வா பைவா பாடல் அமைந்துள்ளது.

கபாலி நெருப்புடா புகழ் அருண்ராஜா காமராஜ் இப்பாடலுக்கு தன் குரல் மூலம் பலம் சேர்துள்ளார்.

நில்லாயோ என்ற பாடல் ரசிகர்கள் மனதில் நீண் நாட்களுக்கு நிற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பட்டைய கிளப்பு, குட்டைய குழப்பு என்ற பாடல்கள் வரிகள் விஜய்யின் சி கிளாஸ் ஆடியன்டிஸை கவரும் வகையில் உள்ளது.

அழகான சூடான பூவே என்ற பாடல் சில நேரங்களில் கொடி படத்தில் இடம் பெற்ற ஏய் சூழலி என்ற பாடலை நினைவுப் படுத்துகிறது. (ஓ கொடி படத்திற்கும் சந்தோஷ் நாராயணன்தானே இசை…)

ப்பாபா ப்பாபா என்ற பாடலை ஹீரோ விஜய்யே பாடியுள்ளார். ஆனால் விஜய்யின் வழக்கமான மேஜிக் இதில் மிஸ் செய்வதைப் போல் தோன்றுகிறது.

ஆனால் ஆட்டம் போட வைக்கும் ரகம்தான் இந்தப் பாடல். அதனால் பெரிதும் ஏமாற்றமில்லை.

மொத்தத்தில் நில்லாயோ, அழகிய சூடான பூவே, வர்லாம் வர்லாம் வா பைரவா… ஆகிய பாடல்கள் நிச்சயம் ரகிகர்கள் நெஞ்சில் இடம் பிடிக்கும்.

வீரசிவாஜி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விக்ரம் பிரபு, ஷாம்லி, மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர், யோகி பாபு, விடிவி கணேஷ், ஜான்விஜய் மற்றும் பலர்.
இயக்கம் : கணேஷ் விநாயக்
இசை : இமான்
ஒளிப்பதிவாளர் : சுகுமார்
எடிட்டிங்: ரூபன்
பி.ஆர்.ஓ.: மௌனம் ரவி
தயாரிப்பாளர் : மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்

கதைக்களம்…

கால் டாக்ஸி ட்ரைவர் விக்ரம் பிரபு. அனாதையான இவருக்கு மெஸ் நடத்தும் வினோதி அக்காவாக இருந்து பாத்துக்கொள்கிறார்.

எனவே இவரும் அவரின் மகள் மீது பாசத்துடன் இருக்கிறார்.

ஒரு சூழ்நிலையில், வினோதினியின் குழந்தைக்கு மூளையில் கட்டி இருப்பது இவருக்கு தெரிய வர, ஆப்ரேஷன் செய்ய ரூ 25 லட்சம் தேவைப்படுகிறது.

டாக்ஸிஸை விற்று கொஞ்சம் பணமும், இவரின் நண்பர்கள் யோகிபாபு, ரோபோ ஷங்கர் மூலம் பாதி பணம் பெறுகிறார்.

மீதி பணத்துக்காக வில்லன் ஜான்விஜய்யை நாடுகிறார்.

ஆனால் அந்த மோசடி கும்பல் இவர்களின் பணத்தை பற்றிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிடுகிறது.

அதன்பின்னர் என்ன நடக்கிறது என்பதை தெளிவாக குழப்பி கதை சொல்கிறார் இயக்குநர்.

கதாபாத்திரங்கள்..

சிவாஜி கணேசன், பிரபு இவர்களின் வழியில் வந்தவர் விக்ரம் பிரபு.

ஆனால் இவர் எதற்காக இந்த கதையை தேர்ந்தெடுத்தார் எனத் தெரியவில்லை.

டான்ஸ் ஓகே. சண்டை காட்சிகளில் மட்டும் அதிரடி காட்டுகிறார்.

அஞ்சலி பாப்பாவாக வந்த ஷாம்லியை இதில் ரசிக்க காத்திருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம். வருகிறார். டூயட் பாடுகிறார். செல்கிறார்.

படத்திற்கு கொஞ்சம் மட்டுமே ஆறுதல் தருபவர்கள் ரோபோ சங்கர் மற்றும் யோகி பாபு இருவர் மட்டுமே.

பைவ் ஸ்டார் விளம்பரத்தில் வரும் ரமேஷ், சுரேஷ் என்ற இரண்டு கேரக்டர்களாக வந்து பேசி பேசியே செல்கின்றனர்.

இவர்களுடன் ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், வினோதினி, மாரிமுத்து, மன்சூர் அலிகான், விடிவி கணேஷ் என பலர் இருந்தும், பெரிதாக சொல்லும்படி இல்லை.

திறமையான கலைஞர்களை இயக்குனர் கவனிக்கவில்லை என்பது வருத்தமே.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இமான் இசையில், தாறு மாறு தக்காளி சோறு மற்றும் சொப்பன சுந்தரி பாடல்களை தாளம் போட்டு ரசிக்கலாம்.

மற்றபடி மெலோடி கிங் இமான், இப்படத்தில் நம்மை ஏமாற்றி விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

காரைக்காலில் படம் ஆரம்பிப்பது போல் காட்டி இருக்கிறார்கள். அதன்பின்னர் க்ளைமாக்ஸில் காட்டப்படுகிறது.

மற்றபடி காட்சிகளை பாண்டிசேரியில் முழுவதும் எடுத்துள்ளனர்.

மூளை குழம்பி, நினைவு திரும்பி ஹீரோ வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.

பைனான்ஸ் கம்பெனியில் பணத்தை போட்டு ஏமாற வேண்டாம் க்ளைமாக்ஸில் அட்வைஸ் செய்து படத்தை முடிக்கிறார்கள்.

மொத்தத்தில் வீரசிவாஜி… பலசாலி இல்லை

 

பறந்து செல்ல வா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : லுத்புதீன் பாட்ஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் சதீஷ், ஆர்ஜே பாலாஜி, கருணாகரன், நரேல் கெங், ஜோ மல்லுரி, மனோபாலா மற்றும் பலர்.
இயக்கம் : தனபால் பத்மநாபன்
இசை : ஜோஸ்வா ஸ்ரீதர்
ஒளிப்பதிவாளர் : சந்தோஷ் விஜயகுமார்
எடிட்டிங்: எம்.கே.ராஜேஷ் குமார்
பி.ஆர்.ஓ.: ஜான்சன்
தயாரிப்பாளர் : அருமை சந்திரன்

கதைக்களம்…

சிங்கப்பூரில் வேலை செய்யும் லுத்புதீன் அங்கு உள்ள சதீஷ், ஜோ மல்லுரி மற்றும் தோழிகளுடன் தங்குகிறார்.

ஏதாவது ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்பதையே குறிக்கோளாக வைத்திருக்கிறார்.

இவருக்கு காதலி கிடைக்காததால், ப்ரெண்ட்ஸ் கேலி செய்ய, பேஸ்புக் மூலம் ஒரு சீன காதலி கிடைத்துள்ளதாக கதை கட்டி விடுகிறார்.

நாளடைவில் அந்த சீன காதலி நிஜமாகவே இவரின் வாழ்க்கையில் வருகிறார்.

அப்போது பார்த்து இவரின் வீட்டில் பார்த்த பெண் ஐஸ்வர்யா ராஜேஷ் வருகிறார்.

இதனால் ஏற்படும் பிரச்சினைகளை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதே இந்த பறந்து செல்ல வா.

கதாபாத்திரங்கள்…

லுத்புதீன் பாட்ஷா முதன்முறையாக ஹீரோவாக நடித்துள்ளார். சண்டை மற்றும் பாடல் காட்சிகள் அவ்வளவாக இல்லை. அதனால் கொஞ்சம் பிழைத்துக் கொண்டார்.

நடிப்பில் இன்னும் தேர்ச்சி பெற்று இவரின் தந்தை நாசரின் பெயரை காப்பாற்ற வாழ்த்துவோம்.

சதீஷ் + ஆர் ஜே பாலாஜி + கருணாகரகன் என 3 காமெடியன்கள் இருந்தும் படத்தில் பெரிதாக காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை. கருணாகரனுக்கு கடுகளவு கூட இதில் காமெடி இல்லை.

காக்கா முட்டை, தர்மதுரை படங்களில் நடிப்பால் மிரட்டிய ஐஸ்வர்யாவுக்கு இதில் மாடர்ன் ரோல். அதிலும் பெரிதாக கவர்ச்சி இல்லாமல் வருகிறார்.

ஜப்பான் நடிகை நரேல் கெங் ஆக்ஷனிலும் நடிப்பிலும் ரசிக்க வைக்கிறார்.

அருமையான வில்லனாகத்தான் நமக்கு பொன்னம்பலத்தை தெரியும் ஆனால் இதில் ஏதோ வருகிறார்.

ஜோ மல்லுரி மற்றும் இதர கேரக்டர்களுக்கு படத்தில் பெரிதாக வேலையில்லை. அதிலும் மனோபாலா, ஞானசம்பந்தம் கேரக்டர்கள் எதற்காக என்றே தெரியவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஜோஸ்வா ஸ்ரீதரின் இசையில் பாடல்கள் ரசிக்கும் ரகம். சந்தோஷ் விஜயகுமார் ஒளிப்பதிவில் சிங்கப்பூரின் அழகை திகட்ட திகட்ட ரசிக்கலாம்.

இயக்கம் பற்றிய அலசல்…

இதுபோன்ற இரண்டு பெண்கள் வாழ்க்கையில் மாட்டிக் கொள்ளும் பல நாயகன் படங்களை பார்த்துவிட்டோம்.

ஆனால் இதில், அவை அனைத்தும் ஒரு டிவி சீரியலுக்காகத்தான் என்று வித்தியாசமான சொன்னதில் பாஸ் மார்க் பெறுகிறார்.

ஆனால் க்ளைமாக்ஸில் கொஞ்சம் தடுமாற்றம் கண்டு இருக்கிறார் டைரக்டர் தனபால் பத்மநாபன்.

மொத்தத்தில் பறந்து செல்ல வா… பறக்கும் முயற்சியில்…

சென்னை 28 II விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஜெய், சிவா, பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ், வைபவ், நிதின் சத்யா, இளவரசு, விஜய் வசந்த், விஜயலட்சுமி, அஞ்சனா கீர்த்தி மற்றும் மனீஷா யாதவ்.
இயக்கம் : வெங்கட்பிரபு
இசை : யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவாளர் : ராஜேஷ் யாதவ்
எடிட்டிங்: பிரவீன் கேஎல்.
பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா
தயாரிப்பாளர் : கேப்பிட்டல் பிலிம் ஒர்க்ஸ் & ப்ளாக் டிக்கெட் கம்பெனி

கதைக்களம்…

சென்னை 28 முதல் பாகத்தில் கிரிக்கெட் மட்டுமே பிரதானமாக இருந்தது.

இதன் இரண்டாம் பாகம் 10 வருடங்கள் கழித்து வந்துள்ளதால், அதில் நடித்தவர்கள் இதில் மெர்ச்சூட்டியாகி திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுகிறார்கள்.

ஆனால் பிரேம்ஜி மட்டும் இதிலும் பேச்சுலாராக இருக்கிறார்.

ஜெய் தன்னுடன் பணிபுரியும் பெண்ணை காதலித்து திருமணம் வரை செல்கிறார்.

அப்போது இவர்கள் வாழ்க்கையில் அரவிந்த் ஆகாஷ் மற்றும் வைபவ் மூலம் கிரிக்கெட் குறுக்கீடுகிறது.

அந்த கிரிக்கெட் விளையாட்டே ஜெய்யின் காதல் வாழ்க்கையில் வினையாக மாறுகிறது.

அதன்பின்னர் என்ன நடந்தது? கிரிக்கெட்டுக்காக நண்பர்களை விட்டார்களா? நட்புக்காக காதலை விட்டாரா? என்ற பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது இந்த 2வது பாகம்.

கதாபாத்திரங்கள்…

ஒரு கிரிக்கெட் டீமை விட இதில் அதிக கூட்டம் உள்ளது. அனைவரும் அவர்களது பாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

வைபவ் தேனி மாவட்ட தாதா மருதுவாக வந்து கலக்குகிறார். நிதின் சத்யா நண்பர்களுக்காக பேசும் காட்சியில் ரசிக்க வைக்கிறார்.

பெற்றோருக்காக கிரிகெட்டை இழந்தோம். மனைவிக்காக நண்பர்களை இழக்கிறோம். இப்படி எல்லாத்தையும் இழந்து நிற்கிறோம். என்று கூறும்போது கண் கலங்க வைக்கிறார்.

மிர்ச்சி சிவா தன்னுடையை வழக்கமான காமெடியால் ரசிக்க வைக்கிறார். இதில் கூடுதலாக யூடியுப்பில் (பணத்திற்காக) விமர்சனம் செய்பவர்களை சாடியிருக்கிறார்.

இவர்களுடன் ஜெய், பிரேம்ஜி, அர்விந்த் ஆகாஷ், விஜய் வசந்த், சுபு பஞ்சு, இளவரசு, தயாரிப்பாளர் டி. சிவா ஆகியோரும் ரசிக்கம் படியாக செய்துள்ளனர்.

முதல்பாகத்தில் நாயகியாக விஜயலட்சுமி இருந்தார். அவர் இதில் சிவாவை மணக்கிறார்.

இவர்களுடன் சனா, கிருத்திகா. அஞ்சனா கீர்த்தி மற்றும் மகேஸ்வரி உள்ளிட்ட நாயகிகள் உள்ளனர்.

ஜெய்யின் காதலியாக வரும் சனா கொஞ்சம் நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார்.

மனீஷா யாதவ், சொப்பன சுந்தரி பாடலுக்கு மட்டுமே வந்து படத்தின் திருப்புமுனையாகிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தின் மிகப்பெரிய பலமே யுவன் சங்கர் ராஜாதான். பாடல்களில் நான்கு ரன் அடித்தால் பின்னணி இசையில் சிக்ஸர் அடிக்கிறார்.

ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவில் கிரிக்கெட் காட்சிகள் கண்களுக்கு விருந்து.

இயக்குனர் பற்றிய அலசல்…

வெங்கட் பிரபு தன்னுடைய பழைய பார்முலாவில் செஞ்சுரி அடித்திருக்கிறார்.

இரண்டாம் பகுதியில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்திற்கு 3வது பாகம் வேண்டும் என்பதற்காகவே இதன் க்ளைமாக்ஸில் சுவையை குறைத்திருக்கிறார்.

இந்த சென்னை 28 ii… வெங்கட்பிரபு டீம் டபுள் செஞ்சுரி

மாவீரன் கிட்டு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விஷ்ணு விஷால், பார்த்திபன், ஹரீஷ் உத்தமன், ஸ்ரீதிவ்யா, சூரி, காசி விஸ்வநாதன் மற்றும் பலர்.
இயக்கம் : சுசீந்திரன்
இசை : இமான்
ஒளிப்பதிவாளர் : சூர்யா ஏ.ஆர்
எடிட்டிங்: காசி விஸ்வநாதன்
பி.ஆர்.ஓ.: ஜான்சன்
தயாரிப்பாளர் : நல்லுசாமி பிக்சர்ஸ் – தாய் சரவணன், ராஜீவன்

கதைக்களம்…

1980களில் நடக்கும் ஜாதி, தீண்டாமை பிரச்சினையே இந்த கதைக்களம்.

கீழ் ஜாதியை சார்ந்த கிட்டு (விஷ்ணு) +2 தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவனாக வருகிறார்.

அவரை மேலும் படிக்க வைத்து, மாவட்ட கலெக்டராக்கி ஊரில் இருக்கும் ஜாதி பிரச்சினையை ஒழிக்க நினைக்கிறார் ஊர் பெரியவர் சின்ராசு (பார்த்திபன்).

ஆனால் இதனை முறிடியக்க மேல் சாதி வகுப்பினர், போலீஸ் ஹரீஷ் உத்தமனின் உதவியுடன் பல திட்டங்களை போடுகின்றனர்.

அதன்படி, விசாரணை பெயரில் விஷ்ணுவை கைது செய்ய, பின்னர் ஜாமீன், பின்னர் விசாரணை என நடக்கிறது.

ஒரு கட்டத்தில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வீட்டுக்கு வராமல் மாயமாகிறார் விஷ்ணு.

இதனால் பார்த்திபனுடன் இணைந்து ஊர் போராட்டம் நடத்த மாநில அளவில் பெரும் பிரச்சினையாக என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை.

கதாபாத்திரங்கள்…

கிருஷ்ணமூர்த்தி என்ற கிட்டு கேரக்டரில் நன்றாகவே பொருந்தியுள்ளார் விஷ்ணு.

தன் சகமாணவி உயிரை காப்பாற்ற மாணவர்கள் செய்யும் அந்த கட்டில் சேஸிங் காட்சி ரசிக்க வைக்கிறது.

தன் இனத்துக்காக இவர் கடைசி வரை போராடினாலும் கோபம், கொந்தளிப்பு என இல்லாமல் வெறுமனே இருப்பது உறுத்தல்.

பார்த்திபன் அப்படியிருந்தால், அது அவரின் வயதுக்றேக்க பக்குவம் என்று கூறலாம். கிட்டு கொஞ்சம் கில்லியாகி இருக்கலாமே.

ரெகுலர் பார்முலாவை விட்டு, வேறு ரூட்டிலும் அசத்துகிறார் பார்த்திபன்.

பொருத்தமான கிராமத்து முகம் ஸ்ரீதிவ்யா. துளி கூட கவர்ச்சியில்லாமல் முழுக்க மறைத்து முக அழகில் கவருகிறார்.

கம்பீர போலீசாக ஹரீஷ் ரசிக்க வைக்கிறார். எல்லாரும் அந்த காலக்கட்டத்தில் இருக்க இவர் மட்டும் தனியாக தெரிகிறார்.

இவர்களுடன் சூரி இருந்தும் அவர் பெயரை தவிர சொல்ல ஒன்றுமில்லை.

கௌரவக்கொலை செய்யும் சூப்பர்குட் சுப்ரமணி அந்த ஒரு காட்சியிலே அசல்ட்டாக அசத்துகிறார்.

படத்தின் ப்ளஸ்…

  • சாதிப் பிரச்சினையும் அது படமாக்கப்பட்ட விதமும்
  • நக்கல் நையாண்டி இல்லாத மெச்சூர் பார்த்திபன்
  • ஸ்ரீதிவ்யாவும் அழகான கிராமத்து பெண்களும்

படத்தின் மைனஸ்….

  • ஆமை வேக திரைக்கதை. கிட்டு காணாமல் போன பிறகு ரொம்பவே இழுத்தடித்து விட்டார்கள்.
  • பல படங்கள் ஓட காரணமாக இருக்கும் சூரியின் ஒட்டுமொத்த கால்ஷீட்டையும் வேஸ்ட் செய்திருக்கிறார் சுசீந்திரன்.

பாடலாசிரியர் யுகபாரதியின் வசனங்கள் நச்…

  • சோத்துக்கு இல்லாதவனெல்லாம் சோசியலிஸம் பேசுறானுங்க” “ஓட்டுப்போடுறதைத் தவிர நமக்கென்ன உரிமை இருக்கு.
  • விட்டுகிட்டேதான் இருக்கோம், அவங்க எப்போ கொடுப்பாங்கனு தெரியலை”
  • அடிச்சிட்டே இருப்பான், திருப்பி அடிச்சா திமிருனு சொல்லுறான்”

உள்ளிட்ட பல வசனங்கள் அப்ளாஸை அள்ளும்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இமானின் இசையும் பின்னணி இசையும் படத்திற்கு பலம். இளந்தாரி பொண்ணு பாடல் இதமாக இதயத்தை வருடும்.

அதற்காக தேவையில்லாமல் க்ளைமாக்ஸ் சமயத்தில் இரண்டு டூயட் பாடல்கள் தேவையா?

ஊர் பிரச்சினை ஹைவேயில் செல்ல, விஷ்ணு ஸ்ரீதிவ்யாவுடன் இரண்டு டூயட் பாடுவது ரொம்பவே ஓவர்.

ஒளிப்பதிவாளரும் கலை இயக்குனரும் 30 வருடங்களுக்கு முந்தைய அனைத்தையும் கண் முன்னே கொண்டு வந்திருப்பது சிறப்பு.

இயக்குனர் சுசீந்திரன், ஜாதி பிரச்சினையை கையில் எடுத்திருப்பது பாராட்டத்தக்கது.

படிப்பறிவு, கௌரவக்கொலை, ஆதிக்க சாதி சூழ்ச்சி என அனைத்தையும் ஆணித்தரமாக பதிவு செய்துள்ளார்.

ஆனால் அண்மைகாலமாக இதுபோன்ற படங்கள் அதிகம் வருவது எதனால்? என்பதுதான் புரியவில்லை.

மொத்தத்தில் மாவீரன் கிட்டு… ரசிகர்களுக்கு கிப்ட்டு

More Articles
Follows