தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கதைக்களம்…
ஐடி துறையில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் ஸ்ரீகாந்த். இந்த நிறுவனம் அவரது மாமனார் நிறுவனமாகும். இவரது மனைவி பூஜா ஜாவேரி.
சில தினங்களில் இரவு நேரத்தில் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தியால் ஸ்ரீகாந்துக்கு பிரச்சினை வருகிறது. இதனால் பயந்து நடுங்கும் இவரை கண்டு பதற்றம் அடைகிறார் மனைவி பூஜா.
ஆபிஸ் வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் ஸ்ரீகாந்த் தவிக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த பொறுப்பில் இருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் என மாமனார் விரட்டி விடுகிறார்.
இதனால் மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாகும் ஸ்ரீகாந்த் தனக்கு உள்ள பிரச்சனையை பேய் ஓட்டுபவரான ஆசிஷ் வித்யார்த்தியிடம் கூறுகிறார். ஸ்ரீகாந்த் வீட்டுக்கு வரும் ஆஷிஷ் வித்யார்த்தி உங்கள் வீட்டில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.. நீங்கள் நடந்ததை கூறினால் மட்டுமே என்னால் பிரச்சனைக்கு தீர்வு சொல்ல முடியும் என்கிறார்.
அப்போது தான் மறைத்து வைத்த பல ரகசியங்களை சொல்கிறார் ஸ்ரீகாந்த்.
அந்த ரகசியம் என்ன.? ஸ்ரீகாந்தை பேய் துரத்துவதன் நோக்கம் என்ன.? என்ன செய்தார் ஸ்ரீகாந்த்.? இந்த பிரச்சனையிலிருந்து தப்பித்தாரா.? என்பதுதான் எக்கோ படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
இதற்கு முன் பேய் படங்களில் நடித்திருந்தாலும் ஸ்ரீகாந்த் இந்த படத்தில் கொஞ்சம் மாறுபட்ட கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். இவர் சொல்லும் ரகசியம் எதிர்பாராத ஒன்று. முதல் மனைவி இரண்டாவது மனைவி என இவர் போடும் நாடகம் செம ட்விஸ்ட்.
கிராமத்தில் வளர்ந்து நகரத்தில் மாட்டிக் கொண்ட அப்பாவி பெண்ணாக வித்யா பிரதீப். கணவரின் அன்புக்காக ஏங்குவதும் பின்னர் பேய்க்கு பயந்தும் அவரின் முடிவு துரதிர்ஷ்டமானது.
கொஞ்ச நேரமே வந்தாலும் பூஜா இளசுகளை சூடேற்றுகிறார். முக்கியமாக பாடல் காட்சியில் கொஞ்சம் தூக்கலாகவே கவர்ச்சி வழங்கி இருக்கிறார்.
டிவி சீரியல் புகழ் மலையாள நடிகை பிரவீனா அம்மாவாக நடித்துள்ளார். அழகும் அன்பும் நிறைந்த நிறைந்தவராக பிரதிபலிக்கிறார் பிரவீனா.
டெல்லி கணேஷ் ஓரிரு காட்சிகளில் வந்து செல்கிறார். கோயில் பூசாரியாக வரும் காளி வெங்கட்.. ‘வித்யா பிரதீப்பை பார்த்து பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்’ என்கிறார். அதற்கான எந்த விளக்கமும் படத்தில் இல்லை. அது ஏன்.?
ஆஷிஷ் வித்யார்த்தி வரும் காட்சிகளில் கொஞ்சம் கூடுதல் எதிர்பார்ப்பை கொடுத்திருக்கலாம்.. ஸ்ரீகாந்த் எந்த நேரம் ஓடி சென்றாலும் அவர் ரெடியாகவே உட்கார்ந்து இருக்கிறார். அவருக்கு இதுதான் வேலை என்றாலும் அவர் இரவு நேரங்களில் கூட தூங்கவே மாட்டாரா.?
டெக்னீஷியன்கள்…
வழக்கமான பேய் கதையை சொல்லாமல் இந்த எக்கோ படத்தை வித்தியாசமாக காட்ட முயற்சித்துள்ளார் நவீன்.
நரேன் பாலகுமாரின் இசையில் பாடல்களும் கதைக்கு ஏற்ப வந்துள்ளது.
பொதுவாக பேய் படங்களில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருக்கும். அதை குறைவாகவே கொடுத்து கூடுதல் பயத்தை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோபிநாத்.
ஆக இந்த ECHO படத்தின் கதைக்களம் என்னவென்றால்.. “நீ ஒருவருக்கு தீங்கு செய்தால் அதுவே உனக்கு எக்கோ போல திரும்பி வரும்.
எனவே நன்மை செய்து பழகுங்கள் என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார் இயக்குனர் நவீன் கணேஷ்.
ஆக ECHO… KARMA RETURNS
ECHO movie review and rating in tamil