யுவன் இசையமைப்பில் டூயட் பாடும் விஜய்சேதுபதி-அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘இறைவி’ படத்தில் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்ஜே சூர்யா ஆகியோர் நாயகர்களாக நடித்திருந்தனர்.

இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்திருந்தார். இந்த ஜோடி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்ற நிலையில் தற்போது இந்த ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார் மூன்றாவது முறையாக விஜய்சேதுபதி படத்தை இயக்கவுள்ளார்.

கே புரடொக்சன்ஸ் சார்பாக ராஜராஜன் இந்த படத்தை தயாரிக்க, யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.

தென்காசி மற்றும் மலேசியாவில் இதன் சூட்டிங் நடைபெறவுள்ளது.

Vijay sethupathi and Anjali romance again for new movie

ஏன்டா அரசியலுக்கு வந்தீர்கள்? என ஆட்சியாளர்களை கேட்கும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கள் நீதி மைய கட்சி தலைவரும், நடிகருமான கமல் யூடிப்யூப் மூலம் இன்று நேரடியாக உரையாற்றினார். கட்சி தொண்டர்கள், ரசிகர்கள் பலர் கடிதம் மூலம் கேட்ட கேள்விகள் சிலவற்றிற்கு கமல் பதிலளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :

நீர்நிலைகளை சுத்தப்படுத்த வேண்டியது நமது கடமை பள்ளிகள், அதற்கு தேவையான உதவிகளை செய்வதற்கும் தன்னார்வலர்கள் வேண்டும்.

முதல்கட்டமாக அதிகதூர் என்ற கிராமத்தை தத்தெடுத்துள்ளோம். கிராமத்தை தத்தெடுப்பதற்கு முதலில் அந்த கிராம மக்களுடன் பேச வேண்டும்.

ஊர் பெரியவர்களுடன் பேச வேண்டும் அதற்கு பின் தான் தத்தெடுக்க முடியும். அடுத்து தத்தெடுக்கப் போகும் கிராமங்களின் பட்டியல் பின்னர் வெளியிடப்படும்.

மய்யம் விசில் செயலி மூலம் மிகப்பெரிய அளவில் குறைகளை சுட்டிக்காட்டிக் கொண்டே இருந்தால் கண்டிப்பாக அரசாங்கம் தீர்வை நோக்கி நகர்ந்தே தீர வேண்டும்.

குடிநீருக்காக நடைபெறும் போராட்டம், குறிப்பிட்ட காலத்துக்கு பின் முடிந்துவிடும் என நினைத்தால் அது ஒரு அரசியல் அறியாமை.

அரசியலுக்கு வர வேண்டும் என்பது ஒரு கன நேரத்தில் எடுத்த முடியவல்ல. பல பல வருடங்களாக யோசித்து எடுத்த முடிவு. ஓட்டு அரசியலுக்கு ஏன் வர வேண்டும் என்று நினைத்து தான் அரசியலுக்கு வராமல் இருந்தேன்.

நம்முடைய அஜாக்கிரதையால் அரசியலை மோசமான நிலைக்கு தள்ளி விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி உள்ளது.
எல்லோரும் கண்டுகொள்ளாமல் விட்டதால் யாரும் கேள்வி கேட்க கூடாது என்ற நிலை வந்து விட்டது.

அதை மாற்ற மீடியாக்கள் மூலம் முயற்சித்தேன். மீடியா ஒரு ஆராய்ச்சி மணி தான்.

மக்கள் மற்றும் மீடியாவின் கேள்விக்கு ஏன் பதிலளிக்க வேண்டும் என்ற ஆணவம் ஆட்சியாளர்களுக்கு வந்துவிட்டது. இதற்கு தீர்வு காணவே அரசியலுக்கு வந்திருக்கிறேன்.

நிஜமாக அரசியல் செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் நிறைய படி ஏறி செல்ல வேண்டும். இறங்கி வர வேண்டும் என்பது கர்வம்.

ஏன் அரசியலுக்கு வந்தோம் என்று தோன்றவில்லை. ஆனால் சிலரை பார்த்து “ஏன்டா அரசியலுக்கு வந்தீர்கள்” என கேட்க தோன்றுகிறது.

நல்ல அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

அடுத்த தேர்தலில் நான் முதல்வரா, எதிர்க்கட்சி தலைவரா எது ஆக வேண்டும் என நினைக்கிறீர்கள் என என்னிடம் கேட்கிறீர்கள். ஆனால் நான் என்ன ஆக வேண்டும் என நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

Why some peoples entered in politics asks Kamal to Current Ministers

கோடையை குளிர வைக்க சென்னையில் வாட்டர் வேர்ல்ட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையை பொறுத்தவரை கோடை விடுமுறை என்றாலே தீவுத்திடலில் பிரமாண்டமாக நடைபெறும் இந்திய சுற்றுலா பொருட்காட்சி தான் முதலில் ஞாபகத்திற்கு வரும்.

அந்தவகையில் சென்னையின் இந்த வருட கோடை விடுமுறை கொண்டாட்டமாக அமைய இருப்பது, ஏப்-27 ல் தொடங்கி ஜூன்-4 ஆம் தேதிவரை நடைபெற இருக்கும் 44வது இந்திய சுற்றுலா பொருட்காட்சியில் அமைந்திருக்கும் வாட்டர் வேர்ல்டு (Water World) ஆகத்தான் இருக்கும்.

வழக்கமான ஜெயன்ட் வீல் மற்றும் அது சார்ந்த கொண்டாட்டங்கள் மட்டுமல்லாமல் இந்தமுறை, வாடிக்கையாளர்களுக்கு சலுகை தரும் விஷயமாக சத்யா எலெக்ட்ரானிக்ஸின் மின் சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் மேளா நடைபெற இருக்கிறது.

இந்தமுறை கோடையின் தீமாக நீர் உலகம் (water world) இருக்கும். ஆகையால் வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாக ராட்சத நீர்வீழ்ச்சி இருக்கும் என்பதில் ஐயமில்லை.

நிஜ நீர்வீழ்ச்சியில் குளிப்பது போலவே இதிலும் ஆனந்தமாக குளிக்கலாம்.. அதையொட்டி அமைந்துள்ள நீச்சல் குளத்தில் நீந்தி மகிழலாம்.

படகு சவாரி, பனி விளையாட்டுக்கள் என இப்படி நீரை மையமாக வைத்து த்ரில்லிங்கும் பொழுதுபோக்கும் கலந்த 15க்கும் மேற்பட்ட நீர் விளையாட்டுக்கள் பார்வையாளர்களை பரவசப்படுத்த காத்திருக்கின்றன.

இந்தமுறை ஐ.பி.எல் போட்டிகள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டதன் காரணமாக இந்த தீவுத்திடலில் பிரமாண்டமாக நடைபெறும் இந்திய சுற்றுலா பொருட்காட்சிக்கு சுமார் 3 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை போக்ஸ் லேண்ட் (Folks Land) கவனிக்க, சந்தைப் படுத்தும் பொறுப்பை விகோஷ் மீடியா (Vgosh Media) ஏற்றுக்கொண்டுள்ளது. லட்மண் ஸ்ருதியின் மியூசிக் ஸ்டால், விதவிதமான ஆடை வகைகள், உணவுப்பொருட்கள், மின் சாதனங்கள், குழந்தைகளை கவரும் விளையாட்டு பொருட்கள் ஆகியவற்றுக்கான கடைகள் (stalls) இதில் ஏராளமாக இடம் பிடிக்கின்றன.

கடைகள் (stalls) முன்பதிவு மற்றும் மேலதிக விபரங்களுக்கு:

8608201000, 8608301000, 8428701000, 8428801000 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

டீகே இயக்கும் காட்டேரியில் 4 நாயகிகள்; 2 விதமான கதைகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா மற்றும் கார்த்தி நடித்த பெரும்பாலான படங்களை மெகா பட்ஜெட்டில் தயாரித்து வந்த நிறுவனம் ஸ்டூடியோ கிரீன்.

தற்போது மீடியம் பட்ஜெட் படங்களை தயாரிப்பதில் அதன் நிறுவனர் ஞானவேல் ராஜா ஆர்வம் காட்டி வருகிறார்.

அதன்படி சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்க இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற அடல்ட் காமெடி படத்தையும், ஆர்யா நடிக்கும் கஜினிகாந்த் என்ற முழு நீள காமெடி படத்தையும் தயாரிக்கிறது.

மேலும் விஜய் தேவரகொண்டா நடிக்கும் நோட்டா படத்தையும், பல்லு படாம பார்த்துக்கணும் என்ற படத்தையும் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் அறிவிப்போடு நின்ற காட்டேரி படத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

டிகே இயக்கும் இப்படத்தில் வைபவ் உடன் சோனம் பாஜ்வா, வரலட்சுமி, ஆத்மிகா, மனாலி ஆகிய நான்கு நாயகிகள் நடிக்கின்றனர்.

ஆத்மிகா, சோனா ஆகிய இருவரும் சிட்டி சப்ஜெட் போர்சனிலும் வரலக்ஷ்மியும் மனாலியும் ப்ரீயட் போர்சனிலும் நடிக்கவிருக்கிறார்களாம்.

Varalaxmi Aathmika Sonam Bajwa and Manali team up for Kaateri

பெண் பத்திரிகையாளர்களை படு கேவலமாக பேசிய எஸ்வி சேகர் மன்னிப்பு கேட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஊடகத்தில் பணிபுரியும் பெண் பத்திரிகையாளர்கள் வாய்ப்புக்காக உய்ர் அதிகாரிகளிடம் அட்ஜஸ்ட் (படுக்கை) செய்வார்கள் என படு கேவலமாக தன் கருத்தை பதிவிட்டு இருந்தார் நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர்.

இதனையடுத்து அவருக்கு பலமான எதிர்ப்புகள் கிளம்பவே, அந்த கருத்தை நான் கவனிக்காது பதிவிட்டேன்.

மற்றொருவரின் கருத்தை அப்படியே பார்வேர்ட் செய்துவிட்டேன் என பேசினார்.

இருந்த போதிலும் படு கேவலமான விமர்சனம் செய்த அவரை கைது செய்ய வேண்டும் என பத்திரிகையாளர்கள் வலியுறுத்தினர்.
இதனால் அச்சமடைந்த எஸ்வி சேகர் முன்ஜாமீன் பெற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

எஸ்வி சேகரை கண்டித்து சென்னையில் சில இடங்களில் பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நடிகர் சங்க செயலாளர் விஷால் அவர்களும் அவரை கடுமையாக கண்டித்திருந்தார்.

எதிர்ப்புகள் வலுக்கவே, அறிக்கை வாயிலாக மன்னிப்பு கோரினார் எஸ்வி. சேகர்.

தற்போது மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

என் மீது அன்பு கொண்ட அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பாக, பேஸ்புக்கில் படிக்காமல் தவறுதலாக ஒரு பதிவை பார்வர்டு செய்து விட்டேன்.

தவறு என்று தெரிந்தும் அதை உடனடியாக நீக்கிவிட்டேன். இதுதொடர்பாக, பத்திரிக்கை சகோதரர்கள் மற்றும் சகோதரிகளிடம் மன்னிப்பை கேட்டுவிட்டேன்.

யாரையும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து அரசியல் செய்யும் நிலையில் நான் இல்லை. யாரையும் ஒருமையிலோ, மரியாதை குறைவாகவோ நடத்தியது கிடையாது.

இந்தச்சூழலில் என்னுடைய தவறை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வீடியோவை வெளியிடுகிறேன். நான் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று சொல்லவில்லை, மன்னிப்பு கேட்கிறேன்.

இதை அனைத்து தமிழக மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். நன்றி!

இவ்வாறு எஸ்வி.சேகர் அதில் கூறியுள்ளார்.

SVe Shekher apologizes for his derogatory comments about female journalist

உயர் அதிகாரிகளுடன் படுக்கையை பகிராமல் மீடியாவில் பெண்கள் ரிப்போர்ட்டராக ஆக கூட முடியாது என பதிவிட்ட பதிவு இது. அதன்பின் எஸ்வி. சேகர் இந்த பதிவை நீக்கி விட்டார்.

 

விக்ரம் வேதா ரீமேக்கில் விக்ரம் நடிக்க வேண்டும்; ஷாரூக்கான் நிபந்தனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2017ஆம் ஆண்டில் மாதவன் – விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் ‘விக்ரம் வேதா’.

புஷ்கர் காயத்ரி இயக்கிய இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது.

இதனையடுத்து ஷாரூக்கான் நடிக்க இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவானது.

இதில் நடிக்க ஷாரூக்கான் 2 நிபந்தனை விதித்து இருக்கிறாராம்.

விஜய்சேதுபதி நடித்த வேதா கேரக்டரில் ஷாருக்கான் நடிக்க விரும்பிய அதே நேரத்தில் விக்ரம் கேரக்டரில் நடித்த மாதவனே இதிலும் விக்ரமாக நடிக்க வேண்டும் என்று விரும்புகிறாராம்.

மேலும் இந்தி பதிப்பை நீரஜ்பாண்டே இயக்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்து இருக்கிறாராம்.

ஆனால் மாதவன் தன் உடல் நிலை காரணமாக அண்மையில் ஒரு படத்தில் இருந்து விலகியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Shah Rukh ready To Work in Vikram Vedha Hindi remake with 2 conditions

More Articles
Follows