தனுஷ்-விஜய் சேதுபதிக்கு பிறகு சந்தீப் தான்… சுசீந்திரன் நம்பிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துக் கொள்ள நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துக் கொண்ட இப்பட இயக்குனர் சுசீந்திரன் பேசியதாவது…

நான் மகான் அல்ல திரைப்படம் எப்படி வெற்றிப்படமாக அமைந்ததோ அதை போலவே இந்த திரைப்படமும் வெற்றி படமாக அமையும்.

பாண்டிய நாடு போலவே இந்த படத்திலும் அனைத்து பாடல்களும் ஆல்பமாக ஹிட்டாகியுள்ளது. இமான் அண்ணனோடு நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.

நாயகன் சந்தீப் கிஷன் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவரோடு நான் ஜீவா திரைப்படத்திலேயே இணைந்திருக்க வேண்டும்.

ஜீவா திரைப்படத்தை முதலில் தமிழ் மற்றும் தெலுங்கில் Bi-lingual படமாக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து தமிழில் விஷ்ணு விஷாலை வைத்தும் தெலுங்கில் சந்தீப்பை வைத்தும் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து ஆரம்பித்தேன்.

ஆனால் அதுக்கு கடுமையான உழைப்பு தேவைப்பட்டது. இரண்டு நாள் படபிடிப்புக்கு பின் தான் இரண்டு மொழிகளிலும் வெவ்வேறு ஹீரோவை வைத்து படமெடுப்பது கடினம் என்பது எனக்கு தெரிந்தது.

சில காலத்துக்கு பிறகு சந்தீப்புடன் இணைந்துள்ளேன். தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு பிறகு பி மற்றும் சி செண்டர் நாயகனாக சந்தீப் வருவார்.

ஒரு நடிகன் டயலாக்கை எளிதாக பேசிவிடலாம். ஆனால் அவர் நடிப்பின் மூலமாக அனைவரையும் ஹோல்ட் செய்கிறார். சந்தீப் என்ற மிக சிறந்த நடிகனை இந்த படத்தில் நான் பார்த்தேன்.

அவருடைய நடிப்புக்கு நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும்” என்றார் இயக்குநர் சுசீந்திரன்.

Suseenthiran speech about Sundeep Kishan at Nenjil Thunivirunthal Trailer launch

பிச்சுவா கத்தி-யை தொடர்ந்து இனிகோ பிரபாகரின் வீரையன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிச்சுவா கத்தி படத்தை தொடர்ந்து நாயகன் இனிகோ பிரபாகர் நடிப்பில் உருவாகியுள்ள படம் வீரையன்.

இப்படம் 90-களின் காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது.

இப்படம் ஒரு பக்கம் தந்தை – மகன், இன்னொரு பக்கம் காதலர்கள், மற்றொரு பக்கம் சமூகத்தால் கேவலமாக நடத்தப்படும் மூன்று உதவாக்கரைகள் என குடும்பம், காதல், நட்பு ஆகிய மூன்று கோணங்களில் ஆரம்பமாகும்.

ஆரம்பித்த 15 நிமிடங்களிலேயே இந்த மூன்றும் ஒரு புள்ளியில் இணைந்து பயணிக்க ஆரம்பித்து பார்வையாளர்களை சுவாரஸ்யத்தில் ஆழ்த்தும்.

சோழ மன்னன் வாழ்ந்த உயர்ந்த பூமியான தஞ்சாவூர், கால ஓட்டத்தில் தடம் புரண்டு மக்களின் பயன்பாட்டில் எவ்வாறு இருக்கிறது என்பதையும், தஞ்சை மக்களின் நம்பிக்கையையும், மரியாதையையும் வலியுறுத்தும் கதையாகவும் உருவாகி இருக்கிறது இப்படம்.

பொதுவாக கதாநாயகன், கதாநாயகி, வில்லன், காமெடியன் என்ற வழக்கமான சினிமாவின் கட்டமைப்புக்கு அப்பாற்பட்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

கதாபாத்திரங்களின் நியாய, தர்மங்களை சொல்லும், சூழ்நிலைகளும், சம்பவங்களுமே கதையை முன்னோக்கி எடுத்து செல்லும். இது புதிய வகை யதார்த்தவாதம் என்ற கோட்பாட்டு வகையைச் சார்ந்தது.

5 பாடல்கள் மற்றும் 4 சண்டைக் காட்சிகளுடனான இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் திருநங்கை கதாபாத்திரமும், ”சரசம்மா” என்கிற ஆவி கதாபாத்திரமும் முக்கியமான தவிர்க்க முடியாத கதாபாத்திரங்களாகும்.
இத்திரைப்படம் நவம்பரில் திரைக்கு வரவிருக்கிறது.

நாயகன் : இனிகோ பிரபாகர்,
கதாநாயகி : ஷைனி
நடிகர்கள். நடிகையர் : ‘ஆடுகளம்’ நரேன், வேலா ராமமூர்த்தி, கயல் வின்சென்ட், ‘ஆரண்ய காண்டம்’ வசந்த், யூகித், ஹேமா மற்றும் திருநங்கை பிரீத்திஷா
இசை: S.N.அருணகிரி, ஒளிப்பதிவு: P.V.முருகேஷா படத்தொகுப்பு: ராஜா முகமது, பாடல்கள்: யுகபாரதி, நடனம்: சரவண ராஜா, சண்டைக்காட்சி: ராக் பிரபு
கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம்: S. பரீத்

Inigo Prabhakarans next movie Veeraiyan updates

பிரபாஸின் சாஹோ… ஹாலிவுட் டிசைனை காப்பியடித்து சிக்கிய பாகுபலி ஹீரோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பாகுபலி 2’ படத்திற்குப் பிறகு இந்தியா முழுக்க பிரபலமாகி விட்டார் பிரபாஸ்.

எனவே இவர் அடுத்து நடிக்கும் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது.

இந்நிலையில் நேற்று பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அடுத்த படமான ‘சாஹோ’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.

ஆனால் அது ‘பிளேட் ரன்னர் 2049’ என்ற ஹாலிவுட் பட டிசைனில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்ற தகவலும் சில நிமிடங்களில் வெளியானது.

அந்த ஹாலிவுட் படத்தின் நாயகன் ரியான் கோஸ்லிங் அணிந்திருந்த நீளமான கோட், முகத்தின் பாதியை ஒரு கருப்புத் துணியால் மறைத்திருப்பது, பின்னணியில் பனி மூட்டம் என அப்படியே காப்பியடித்து ‘சாஹோ’ போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள்.

வழக்கமாக இதுபோல் காப்பியடித்தால் பழைய பட போஸ்டரைத்தான் காப்பியடிப்பார்கள்.

ஆனால் ‘பிளேட் ரன்னர் 2049’ படம் இந்த மாதம் 6ம் தேதி தான் ரிலீஸ் ஆனது.

இதனால் பாகுபலி ஹீரோவையும் ‘சாஹோ’ இயக்குனரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

மேலும் போஸ்டர் மட்டும்தான் காப்பியா? இல்லை படமும் அப்படிதானா? என கேட்டு வருகின்றனர்.

Saaho first look poster copied from Ryan Goslings Blade Runner

ஐடி ஆபிஸில் ஆஜராக உத்தரவு; எதையும் சந்திப்பேன் என விஷால் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஷாலின் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் நேற்று வருமானவரித்துறையின் ஒரு பிரிவு (ஜிஎஸ்டி) அதிரடி சோதனை நடத்தியது.

சோதனையின் பின்னர் அதிகாரிகள் விஷாலுக்கு சம்மன் அனுப்பினர்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

உங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பணம் :ரூ. 51 லட்சத்தை அரசு கணக்கில் செலுத்தியிருக்க வேண்டும்.

அப்படி செலுத்த தவறியதால் இந்த தொகையை இரண்டு அல்லது மூன்று தவணைகளில் உடனடியாக கட்ட வேண்டும்.

என்றாலும் இது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக வருகிற 27ம் தேதி சென்னையிலுள்ள வருமானவரித்துறை அலுவலத்தில் ஆஜராக வேண்டும்.

அப்போது ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வரி தொடர்பான கணக்கை எடுத்து வர வேண்டும்.
என்று அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விஷால் பேசியதாவது…

மெர்சல் பட விவகாரத்தில் ஒரு சிலருக்கு எதிராக கருத்துக்களை கூறியிருந்தேன்.

அதற்காக இந்த சோதனை நடந்திருப்பதாக நான் நினைக்கவில்லை.
ஒரு வேளை உள்நோக்கத்துடன் நடந்திருந்தால் அதை நான் சந்திப்பேன்.

நான் நேர்மையாக தொழில் செய்து முறையாக வரி கட்டுகிறேன். அதனால் எந்த பிரச்சினைகளையும் என்னால் எதிர்க்கொள்ள முடியும்.” என தெரிவித்தார் விஷால்.

இதனிடையில் அரசியல் கட்சித் தலைவர்கள் செய்யும் தவறுகளை எங்கள் விஷால் தட்டிக்கேட்டால் அதிகாரத்தை வைத்து மிரட்டுகிறீர்களா? என அவரது ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து போஸ்டர்கள் அடித்துள்ளனர்.

I am paying Tax regularly so I can face anything says Vishal

மீண்டும் நடிக்க வருவீங்களா? என கேட்டதற்கு சூடான சிம்பு-தனுஷ் பட நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் உடன் ‘மயக்கம் என்ன’ மற்றும் சிம்பு உடன் ‘ஒஸ்தி’ ஆகிய இரண்டு தமிழ்ப் படங்களில் மட்டும் நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யா.

இனி நிறைய படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தமிழ் சினிமாவை விட்டு தெலுங்கு பக்கம் போனார்.

அங்கு ஒரு சில படங்களில் நடித்துவிட்டு அமெரிக்காவில் எம்பிஏ படிக்க சென்று விட்டார்.

தற்போது அவர் படிப்பை முடித்துவிட்டதால் வழக்கம்போல மீண்டும நடிக்க வருவீங்களா? எப்போது என? அவரை ட்விட்டரில் ரசிகர்கள் கேட்டுள்ளனர்.

இதனால் சூடான அந்த நாயகி,

“நான் நடிப்பதை விட்டு 5 வருடங்கள் ஆகிவிட்டது. மேலும் இனி நடிக்க வரமாட்டேன் என ‘பின்ட் டுவீட்’ செய்துவிட்டேன். அதை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.” என பதிலளித்துள்ளார்.

Dhanush Simbu movies heroine Richa Gangopadhyay latest updates

கௌதம் கார்த்திக்கை தொடர்ந்து அதர்வாவை இயக்கும் கண்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கண்ணன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்து அண்மையில் வெளியான படம் ‘இவன் தந்திரன்’.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை வெற்று வசூலை குவித்தது.

இப்படத்தை தொடர்ந்து கண்ணன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் அதர்வா நடிக்கவிருக்கிறாராம்.

இதன் சூட்டிங்கை ஜனவரியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகீறது.

தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ பட இசையமைப்பாளர் ரதான் என்பவர்தான் இப்படத்திற்கு இசையமைக்கிறாராம்.

‘இமைக்கா நொடிகள்’, ‘செம போத ஆகாத’, ‘ஒத்தைக்கு ஒத்த’ ஆகிய படங்களில் தற்போது அதர்வா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows